search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தியையொட்டி தென்காசி மாவட்டத்தில் சிலைகளை கரைக்க வழிமுறைகள் அறிவிப்பு - கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டார்
    X

    விநாயகர் சதுர்த்தியையொட்டி தென்காசி மாவட்டத்தில் சிலைகளை கரைக்க வழிமுறைகள் அறிவிப்பு - கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டார்

    • மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொது மக்கள் கேட்டுக்கொள்ள ப்படு கிறார்கள் என்று கலெக்டர் கூறினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப் பெரிய கடமை இருக்கிறது.

    நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி விநா யகர் சதுர்த்தி விழா வினை கொண்டா டும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்ப தற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    வழிமுறைகள்

    பொதுமக்கள் களி மண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டது மான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகா ப்பான முறையில் கரைக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் வகுத்துள்ள படி விதிமுறை களை கடைபிடிக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வா கத்தினால் கடையம் ராமநதி அணை, ஆழ்வார் குறிச்சி கடனா ஆறு, யானை பாலம் அருகில் சிற்றாறு, இலஞ்சி, தென்காசி, குற்றாலம், செங் கோட்டை குண்டாறு அணை, ஹரிகர ஆறு, லாலா குடியிருப்பு, புளி யரை, அச்சன்புதூர் அனுமான் ஆறு, கரிசல் குடியிருப்பு அருகில் பாவூர்சத்திரம் குளம், பாவூர்சத்திரம், கடைய நல்லூர் தாமரை குளம், மேல கடையநல்லூர், கடையநல்லூர் கருப்பாநதி அணை, நெற்கட்டும்செவல், வாசுதேவநல்லூர், ராயகிரி பிள்ளையார் மந்தையாறு ஆகிய இடங்களில் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.

    விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்கா தவாறு கொண்டா டும்படி பொது மக்கள் கேட்டுக ்கொள்ள ப்படு கிறார்கள். சிலைகள் வைப்பது, கரைப்பது தொடர்பான சந்தேகங்க ளுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிர ண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர் ஆகி யோரை நேரில் அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×