search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டைநாதர் கோவிலில் சிலைகள், செப்பேடுகளை பார்வையிட்ட மாணவர்கள்
    X

    சிலைகள், செப்பேடுகளை மாணவர்கள் பார்வையிட்டளர்.

    சட்டைநாதர் கோவிலில் சிலைகள், செப்பேடுகளை பார்வையிட்ட மாணவர்கள்

    • ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள், தங்க மூலாம் பூசப்பட்ட பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
    • இச்சிலைகளின் தொன்மை, வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீனத்திற்கு ட்பட்ட சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபி ஷேகத்துக்கு யாகசாலை அமைக்க கோவிலின் நந்தவனத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.

    அப்போது 23 ஐம்பொன் சுவாமி சிலைகள், தேவாரப்பதிக செப்பேடுகள், தங்க மூலாம் பூசப்பட்ட பூஜை பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

    பின்னர், இவை அனைத்தும் கோவியிலில் பாதுகாப்பாக வைக்கப்ப ட்டுள்ளன.

    இந்நிலையில், சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல் மேற்பார்வையில், பள்ளி முதல்வர் ராமலிங்கம், துணை முதல்வர் புனிதவதி, பிரசன்னா ஆகியோர் வழிகாட்டுதலின்படி ஐந்தாம் வகுப்பு மாணவ-மாணவிகள் 140 பேர், சமூக அறிவியல் பாடத்தில் பழைமையான சிலைகள் மற்றும் அகழ்வா ராய்ச்சி குறித்த பாடத்திற்காக இக்கோவி லுக்கு வந்து, மேற்கண்ட ஐம்பொன் சுவாமி சிலைகளையும், தேவாரப்பதிக செப்பேடு களையும் பார்வையிட்டனர்.

    இச்சிலைகளின் தொன்மை, வரலாறு குறித்து சமூக அறிவியல் ஆசிரியை சொர்ணா விளக்கிக் கூறினார்.

    சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இந்த சிலைகளை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

    Next Story
    ×