search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லிக்குப்பத்தில் திடீர் பரபரப்புஅனுமதியின்றி சிவன், நந்தி சிலைகளை வைத்து வழிபாடு2 பேரிடம் போலீசார் விசாரணை
    X

    நெல்லிக்குப்பத்தில் திடீர் பரபரப்புஅனுமதியின்றி சிவன், நந்தி சிலைகளை வைத்து வழிபாடு2 பேரிடம் போலீசார் விசாரணை

    சாமி சிலைகளை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் வைடிப்பாக் கம் சாலை அருகே மோரை எவெரட்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் திடீரென்று சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையை வைத்து வழிபட தொடங்கினர்.இது தொடர்பாக அந்த இடத்தின் உரிமையாளர் நெல்லிக்குப்பம் போலீ சாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், வருவாய் துறை வருவாய் ஆய்வாளர் அன்வர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று இரவு விரைந்து சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சிவ லிங்கம் மற்றும் நந்தியை அகற்ற வலியுறுத்தினர்.அப்போது அங்கிருந்த சுரேஷ் உட்பட 5 பேர், இந்த இடம் அரசுக்கு சொந்த மானது என்பதால் சாமி சிலைகள் வைக்கப்பட்டுள் ளது என போலீசாரிடம் தெரிவித்தனர். யாருடைய இடமாக இருந்தாலும், சாமி சிலைகளை வைத்து வழிபட உரிய அனுமதி பெற வேண்டும். எனவே, இங்கிருந்து சாமி சிலை களை உடனடியாக அகற்ற வேண்டும் என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்த னர்.

    அங்கிருந்தவர்கள் திடீ ரென்று சிவன், நந்தி சிலை களை கட்டிப்பிடித்து போலீ சாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சாமி சிலைகளை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சாமி சிலைகளை அதிரடியாக அகற்றினார்கள். மேலும், அகற்றப்பட்ட சாமி சிலை களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் திடீர் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    Next Story
    ×