search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Objects"

    • ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள், தங்க மூலாம் பூசப்பட்ட பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
    • இச்சிலைகளின் தொன்மை, வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீனத்திற்கு ட்பட்ட சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபி ஷேகத்துக்கு யாகசாலை அமைக்க கோவிலின் நந்தவனத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.

    அப்போது 23 ஐம்பொன் சுவாமி சிலைகள், தேவாரப்பதிக செப்பேடுகள், தங்க மூலாம் பூசப்பட்ட பூஜை பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

    பின்னர், இவை அனைத்தும் கோவியிலில் பாதுகாப்பாக வைக்கப்ப ட்டுள்ளன.

    இந்நிலையில், சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல் மேற்பார்வையில், பள்ளி முதல்வர் ராமலிங்கம், துணை முதல்வர் புனிதவதி, பிரசன்னா ஆகியோர் வழிகாட்டுதலின்படி ஐந்தாம் வகுப்பு மாணவ-மாணவிகள் 140 பேர், சமூக அறிவியல் பாடத்தில் பழைமையான சிலைகள் மற்றும் அகழ்வா ராய்ச்சி குறித்த பாடத்திற்காக இக்கோவி லுக்கு வந்து, மேற்கண்ட ஐம்பொன் சுவாமி சிலைகளையும், தேவாரப்பதிக செப்பேடு களையும் பார்வையிட்டனர்.

    இச்சிலைகளின் தொன்மை, வரலாறு குறித்து சமூக அறிவியல் ஆசிரியை சொர்ணா விளக்கிக் கூறினார்.

    சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இந்த சிலைகளை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

    • நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு குடிசைவீடு தீப்பிடித்து எரிந்தது.
    • தீ மளமளவென கூரை முழுவதும் பரவியதால் வீட்டில் வைத்திருந்த பணம், துணிகள் பொருள்கள் எரிந்து சாம்பலானது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அகர கீரங்குடி ஊராட்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர் கிருபாகரன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.

    தூங்கிக்கொண்டிருந்த கிருபாகரன் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    தீ மளமளவென எரிந்து கூரை முழுவதும் எரிந்ததால் உயிர்சேதம் தவிர்த்து, வீட்டில் வைத்திருந்த பணம், துணிகள் பொருள்கள் எரிந்து சாம்பலானது.

    இத்தகவலை அறிந்த மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

    மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் முத்துசாமி, தாசில்தார் சார்பாக அரசு வழங்கும் முதல் கட்ட நிவாரணமாக ரூ. 5 ஆயிரமும் அரிசி, பாய், போர்வை, மண்ணை வழங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வீட்டுப் பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

    ×