search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband death"

    லாஸ்பேட்டையில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை சாமிபிள்ளைதோட்டம் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பிரனாம்பாள் (வயது50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதற்கிடையே ராஜா கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.

    பாசத்துடன் இருந்து வந்த கணவர் திடீரென இறந்ததால் பிரனாம்பாள் சோகத்தில் மூழ்கினார். கணவர் இறந்தது முதல் அவர் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். மகன்கள் நன்றாக கவனித்து வந்தாலும் கணவரின் இறப்பை பிரனாம்பாவால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த பிரனாம்பாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர்உசேன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சின்னமனூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை போடி ரோட்டை சேர்ந்தவர் சோலைத்தேவர். இவரது மனைவி முத்துமாயக்காள் (வயது80). கடந்த மாதம் சோலைத்தேவர் இறந்து விட்டார்.

    இதனால் முத்து மாயக்காள் மனவேதனையில் இருந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் நேற்று வி‌ஷம் குடித்து விட்டார். உடனே அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    முத்துப்பேட்டை அருகே கணவர்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் ஆலங்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு அய்ரக்கண்ணி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது74). இவர் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி(65). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, சந்திரா, புனிதா, நாராயணசாமி, சந்திரசேகரன் ஆகிய 5 மகன், மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவியான சுப்பிரமணியன்-ராஜேஸ்வரி இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். எங்கும் சென்றாலும் ஜோடியாகவே செல்வர்.

    இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் நேற்று காலை திடீரென அவர் இறந்தார். இந்நிலையில் கணவர் சுப்பிரமணியன் இறந்ததை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்த அங்கேயே மயங்கி விழுந்தார். இதைகண்ட உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முத்துப் பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராஜேஸ்வரி உடலையும் வீட்டுக்கு கொண்டு வந்து கணவன் மனைவி இருவரது உடல்களையும் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கணவர்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் ஆலங்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருமணம் ஆன 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி, சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சீனிவாசன் (வயது 23). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு பேக்கரி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சீனிவாசன், அரியானூர் பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சீனிவாசன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனிதாவை திருமணம் செய்து கொண்டு அரியானூர் பகுதியில் குடியேறினார். அங்கு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தினர்.

    தினமும் சீனிவாசன் இங்கிருந்து நாமக்கல்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பினார்.

    இரவு 11 மணி அளவில் அரியானூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி அவர், வீட்டிற்கு செல்வதற்காக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது, அந்த வழியாக அதிவேகமாக சென்ற வாகனம் சீனிவாசன் மீது மோதி விட்டு நிற்காகமல் சென்று விட்டது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனது கணவர் உடலை பார்த்து அனிதா கதறி அழுதார்.

    பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை கணினியில் வரிசையாக பார்த்தனர்.

    அதில், சீறி பாய்ந்து செல்லும் அந்த காரையும், அதன் பின்பக்கத்தில் இருக்கும் பதிவு எண்ணையும் அடையாளம் கண்டனர்.

    இதையடுத்து, பதிவு எண்ணை வைத்து போலீசார் அந்த கார் எந்த ஊரை சேர்ந்தது? அதை ஓட்டிய நபர் யார்? என்பது குறித்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆறுமுகநேரியில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். காட்டன்பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டார். இதில் இருந்து சுமதி மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் கடன் தொல்லைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுமதி மற்றும் அவரது மகள் ஆகிய 2 பேரும் நேற்று வி‌ஷத்தை குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகநேரி காமராஜபுரத்தை சேர்ந்த செல்வி என்பவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    குமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்தார்.
    பத்மநாபபுரம்:

    குமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே கருப்புகோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பல பிள்ளை (வயது 96). இவருடைய மனைவி தாணுபாய் (86). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் வீட்டில் பொன்னம்பலபிள்ளையும், தாணுபாயும் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தாணுபாய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மேலும் முதுமையும் அவரை வாட்டியது. அப்போது அருகில் இருந்தபடி பொன்னம்பலபிள்ளை அவரை கவனித்து வந்தார். அந்த சமயத்தில், நீ இறந்து விட்டால், நானும் உன்னோடு வந்து விடுவேன் என்று பொன்னம்பலபிள்ளை தன்னுடைய மனைவியுடன் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் தாணுபாய் திடீரென இறந்தார். மனைவி இறந்த அதிர்ச்சி செய்தியை கேட்டதும் பொன்னம்பலபிள்ளையும் நிலைகுலைந்து போனார். சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார். வாழும் போது சந்தோசமாக இருந்த தம்பதி, சாவிலும் இணை பிரியாமல் சென்று விட்டனர் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.
    கணவர் இறந்த விரக்தியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை மேலூர் அருகேயுள்ள வாச்சாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ரேகா (வயது 26). இவர்களுக்கு 9 மாத கைக்குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் ராஜேஷ் குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6-ந் தேதி இறந்து விட்டார். இதனால் வேதனை அடைந்த ரேகா கடந்த சில நாட்களாக யாருடனும் பேசவில்லை.

    மிகவும் மனவேதனையில் இருந்த அவர் சம்பவத்தன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தீக்குளித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் ரேகா மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் ரேகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ரேகாவின் தாயார் வெள்ளையம்மாள் கீழவளவு போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பாகூர் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த மனைவி திடீரென இறந்ததால் சிலமணி நேரத்தில் கணவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    பாகூர்:

    புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள ஆதிங்கப்பட்டு சத்யா நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 76). இவரது மனைவி ராதா (68).

    இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகன்களின் பராமரிப்பில் தாய், தந்தை இருவரும் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் ஏழுமலை உடல்நலம் இல்லாமல் இருந்து வந்தார். அவரை மனைவி ராதா உடன் இருந்து நன்றாக கவனித்து வந்தார்.

    நேற்று மாலையில் இருந்து ராதாவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நள்ளிரவு 12 மணி அளவில் அவர் திடீரென இறந்துவிட்டார். தன்னை நன்றாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் துக்கம் தாங்காமல் ஏழுமலை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.

    இன்று காலை 11 மணி அளவில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஏழுமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். இருவரது உடலும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டது. ஏற்கனவே ராதா இறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்திருந்தனர்.

    இன்று மாலை உடல் தகனம் நடப்பதாக இருந்தது. திடீரென கணவர் ஏழுமலையும் இறந்து விட்டதால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இன்று மாலை அவர்களது உடல் ஆதிங்கப்பட்டு சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

    பரமத்தியில் பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டி, நடுத் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் பிரபு (வயது 35). இவர் தனியார் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கிருத்திகா (35). இவர் கரூர் மாவட்டம் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் கனிஷ் என்ற மகன் உள்ளார். கனிஷ், கரூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறான்.

    நேற்று மாலை பரமத்தி கோட்டையண்ணன் சாமி கோவில் அருகே உள்ள ஒரு முட்புதரில் பிரபு கழுத்தில் துண்டால் இறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பிரபு மர்ம மரணம் தொடர்பாக உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    பிரபு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அண்ணன் மோகன், அக்காள் யசோதா ஆகியோர் உள்ளனர். இதில் மோகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    அக்காள் யசோதாவுக்கு திருமணமாகி கணவர் மனோகரனுடன் கரூர் அருகே உள்ள புகழுர் தமிழ்நாடு அரசு காகித ஆலை குடியிருப்பில் வசித்து வருகிறார். மனோகரன் புகழுர் காகித ஆலையில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 8 வருடங்களுக்கு முன்பு பிரபுவுக்கும், சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகாவுக்கும் திருமணம் நடந்தது. அதன்பின்னர் கிருத்திகாவுக்கு வெங்கமேடு போலீஸ் நிலையத்துக்கு இடமாறுதல் கிடைத்தது. இதனால் பணிக்கு செல்ல ஏதுவாக அவர், கரூர் அருகே உள்ள ஏமூர் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் குடியேறினார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு, அவர் தூத்துக்குடிக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    நேற்று காலையில் வீட்டில் இருந்த பிரபு காகித ஆலையில் உள்ள தனது அக்காள் யசோதா வீட்டிற்கு சென்று, அங்கு சிறிது நேரம் அமர்ந்து பேசினார். அப்போது அவர் சோகத்துடன் பேசியதாக தெரிகிறது. பின்னர் சொந்த ஊருக்கு போகிறேன் என கூறிவிட்டு நாமக்கல்லுக்கு புறப்பட்டு சென்றார்.

    தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு நேராக பரமத்தி கோட்டையண்ணன் சாமி கோவிலுக்கு சென்ற அவர், அங்கு நின்று கிருத்திகாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வீடியோ அழைப்பில் பேசினார்.

    அப்போது, வீட்டில் இருந்து நான் வெளியே வந்து விட்டேன். நான் வி‌ஷம் குடித்து விட்டேன். சாக போகிறேன் என கூறினார். உடனே, கிருத்திகா நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?, ஏன் இப்படி செய்தீர்கள்? என கேட்டார். அதற்கு பிரபு பதில் எதுவும் சொல்லவில்லை. செல்போன் வீடியோ அழைப்பையும் துண்டித்து விட்டார். அதன் பிறகு தான் பிரபு கழுத்து பகுதி துண்டால் இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    வி‌ஷம் குடித்து விட்டேன் என்று கூறிய அவர், கழுத்து இறுக்கி இறந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    பிரபு பிணமாக கிடந்த இடம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். அங்கு அடர்ந்த புட்புதர்கள் நிறைந்து உள்ளன. ஆகவே, பிரபுவை ஆள்நடமாட்டம் இல்லாத இந்த பகுதிக்கு யாரேனும் அழைத்துச் சென்று துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கலாம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    பிரபு, கைவிரலில் அணிந்திருந்த மோதிரமும், கழுத்தில் தங்கச் சங்கிலியும் அப்படியே இருந்தது. மேலும் சிறிது தூரத்தில் அவரது மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் நகை, பணத்துக்காக அவரை கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. வேறு ஏதோ? காரணங்கள் இருக்கின்றன. இவற்றை போலீசார், துரிதமாக விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பிரபுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் தலைமை அரசு பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படஉள்ளது. #tamilnews
    கணவர் இறந்த துக்கத்தில் மனமுடைந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது குப்பிச்சிபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 90). இவரது மனைவி மாராத்தாள் (85).

    கடந்த 18 நாட்களுக்கு முன்பு நாச்சிமுத்து வயது முதிர்வு காணரமாக இறந்து விட்டார். கணவர் இறந்து துக்கம் தாங்காமல் மாரத்தாள் கணவரை நினைத்து புலம்பி வந்தார். மகன் மற்றும் பேரப்பிள்ளை, கொள்ளு, எள்ளு பேரப்பிள்ளைகள் ஆறுதல் கூறினர். ஆனால் சமாதானம் அடையாத மாரத்தாள் சம்பவத்தன்று தள்ளாத நிலையிலும் அரளி விதையை பறித்து அரைத்து தின்றார்.

    சிறிது நேரத்தில் மாராத்தாள் மயங்கி விழுந்தார். அப்போது அங்கு வந்த அவரது மகன் கருப்புசாமி மயங்கி கிடந்த தாயை மீட்டு பல்லடத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாராத்தாள் பரிதாபமாக இறந்தார்.

    மர்மமாக இறந்த தனது கணவர் சாவு குறித்து முறையாக விசாரணை நடத்தாததால் திருநங்கை வி‌ஷம் குடித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள பழைய செம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ஜீவாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    கடந்த 25-ந் தேதி ஸ்டீபன்ராஜ் மர்மமான முறையில் இறந்து விட்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கருதிய ஜீவா இது குறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குபதிவு செய்யாமல் அவரை அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

    ஸ்டீபன்ராஜ் கொலை வழக்கை போலீசார் மறைப்பதாக ஜீவா குற்றம்சாட்டினார். இதனால் அவரது கல்லறை முன்பு வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அதற்கு முன்பாக எனது கணவர் கொலை குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் இறந்தவுடன் என் உடலை ஸ்டீபன்ராஜ் சமாதி அருகே புதைத்து விடவும் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    மயங்கிய நிலையில் கிடந்த ஜீவாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கணவர் இறந்த துக்கத்தில் மிகுந்த மனவேதனை அடைந்த பெண் வங்கி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் முத்து நகரை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள நகர வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிவசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். கணவர் இறந்ததால் விஜயலட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட விஜயலட்சுமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×