search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னமனூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை
    X

    சின்னமனூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை

    சின்னமனூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை போடி ரோட்டை சேர்ந்தவர் சோலைத்தேவர். இவரது மனைவி முத்துமாயக்காள் (வயது80). கடந்த மாதம் சோலைத்தேவர் இறந்து விட்டார்.

    இதனால் முத்து மாயக்காள் மனவேதனையில் இருந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் நேற்று வி‌ஷம் குடித்து விட்டார். உடனே அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×