search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old woman suicide"

    • தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
    • தனிமையில் வசித்ததால் மனவேதனையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த என்.ஜி.ஓ. நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது85). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திரு மணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    தனலட்சுமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். பக்கத்து தெருவில் வசிக்கும் அவரது மகன் ஒருவர் தனலட்சுமியை கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை தனலட்சுமி தனது வீட்டின் அருகில் வசிப்பவர்களை அழைத்தார். சிறிது நேரம் கழித்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது தனலட்சுமி மாயமாகி இருந்தார்.

    அவர் வீட்டில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். கிணற்றின் அருகில் நாற்காலியும் கிடந்தது.

    கிணற்றின் பக்கவாட்டு சுவர் உயரம் என்பதால் தனலட்சுமி நாற்காலி மீது ஏறி கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி சம்பத் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறுகட்டி தனலட்சுமியின் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. தனிமையில் வசித்ததால் மனவேதனையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    நைனார் மண்டபத்தில் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    நைனார் மண்டபம் இந்திராநகரை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 60). இவர்களுக்கு சுதாகர் (42) என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனபால் இறந்து விட்டார். இதனால் மகாலட்சுமி தனது மகன் பராமரிப்பில் வசித்து வந்தார். 

    இதற்கிடையே மகாலட்சுமிக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், நீரிழிவு நோய் காரணமாக மகாலட்சுமி தினம், தினம் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மகாலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து சுதாகரின் மகன் அரவிந்த், மகள் வள்ளி ஆகியோர் வீட்டுக்கு வந்தபோது அங்கு பாட்டி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து மகாலட்சுமியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாலட்சுமி இறந்து போனார். இது குறித்த  புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரசாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருபுவனை அருகே நோய் கொடுமையால் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே குச்சிபாளையம்- திருக்கனூர் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவகி வயது (60). இவர்களுக்கு ஆனந்தன் என்ற மகன் உள்ளார். கால் ஊனமுற்ற தேவகி கடந்த சில மாதங்களாக கால் வலியினால் அவதி அடைந்து வந்தார். இதற்காக மருந்து- மாத்திரையும் சாப்பிட்டு வந்தார். ஆனால் வலி குறையவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் ஆனந்தன் ஆகியோர் கூலிவேலைக்கு சென்று விட்ட நிலையில் தேவகிக்கு நோய் கொடுமை அதிகமானதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தேவகி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அவர் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார்.

    மாலையில் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி அங்கு மனைவி தேவகி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் வில்லியனூர் மெயின்ரோடு கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது59. இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணவேணியின் மூத்த மகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். மூத்த மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கிருஷ்ணவேணி மனவருத்தத்துடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருஷ்ணவேணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்கொலை செய்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் ஓசூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை அருகே நேற்று முதியவர் ஒருவர் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அந்த பகுதியில் குளிக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த முதியவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள மத்திகிரி பகுதியை சேர்ந்த அன்னியப்பா (வயது85) என்பதும், அவர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கணவர் இறந்த துக்கத்தில் மனமுடைந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது குப்பிச்சிபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 90). இவரது மனைவி மாராத்தாள் (85).

    கடந்த 18 நாட்களுக்கு முன்பு நாச்சிமுத்து வயது முதிர்வு காணரமாக இறந்து விட்டார். கணவர் இறந்து துக்கம் தாங்காமல் மாரத்தாள் கணவரை நினைத்து புலம்பி வந்தார். மகன் மற்றும் பேரப்பிள்ளை, கொள்ளு, எள்ளு பேரப்பிள்ளைகள் ஆறுதல் கூறினர். ஆனால் சமாதானம் அடையாத மாரத்தாள் சம்பவத்தன்று தள்ளாத நிலையிலும் அரளி விதையை பறித்து அரைத்து தின்றார்.

    சிறிது நேரத்தில் மாராத்தாள் மயங்கி விழுந்தார். அப்போது அங்கு வந்த அவரது மகன் கருப்புசாமி மயங்கி கிடந்த தாயை மீட்டு பல்லடத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாராத்தாள் பரிதாபமாக இறந்தார்.

    பாலக்கோடு அருகே விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்ட மூதாட்டி மனமுடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள மணியகாரன்கொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 60). இவர்களுக்கு ஒரு பெண் உள்ளது. சின்னபொண்ணு சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டிருந்தது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அவர் கடந்த 21-ந் தேதி விஷம் குடித்தார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சின்ன பொண்னை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். சின்னபொண்ணு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12 மணிக்கு உயிரிழந்தார்.

    இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மகன் இறந்த சோகத்தை மறப்பதற்குள் மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கெங்கனந்தல் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    வேட்டவலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் கிணறு ஆழப்படுத்தும் பணியில் கெங்கனந்தல் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் சீத்தாராமன், தங்கராஜ், குமார் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சீத்தாராமன் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    வெடி விபத்தில் சீத்தாராமன் இறந்ததால் அவருடைய தாய் சரோஜா (வயது 66) மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். மனவேதனை தாங்க முடியாமல் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

    சரோஜாவை உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வேட்டவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இறந்தவர்களின் சோகத்தை மறப்பதற்குள் சரோஜா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கெங்கனந்தல் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ×