search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "identified"

    • வாலிபர் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் இவர் மீது ஏறி இறங்கியது.

    கடலூர்:

    சிதம்பரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் வந்தார். அப்போது கீரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் லிப்ட் கேட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார். புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்த வாலிபர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் இவர் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இவர் புவனகிரி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 36). இவர் கொத்தனார் வேலை செய்வதும் தெரியவந்தது. இவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக நடந்திருப்பது தெரியவந்தது. 

    இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள், அடையாளம் காணப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தில் 3 தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு, இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. ஒரு பெண் உள்பட 9 பேர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனித வெடிகுண்டுகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக இலங்கை போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் செய்தித்தொடர்பாளர் ருவன் குணசேகரா கூறியதாவது:-

    எல்லா மனித வெடிகுண்டுகளும் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மனித வெடிகுண்டுகளில், தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவராக இருந்த முகமது ஜஹ்ரானும் ஒருவர் என்பதும் இந்த சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஷாங்கிரி லா ஓட்டலில் குண்டு வெடிப்பை நிகழ்த்திவிட்டு பலியானார்.

    தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சி.ஐ.டி. போலீசார் மற்றும் பயங்கரவாத புலனாய்வு துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சந்தேகத்துக்குரிய மேலும் பலரை பிடிப்பதற்காக நாடு முழுவதும் சோதனை நடந்து வருகிறது. இருப்பினும், பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்கொலை செய்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் ஓசூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை அருகே நேற்று முதியவர் ஒருவர் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அந்த பகுதியில் குளிக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த முதியவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள மத்திகிரி பகுதியை சேர்ந்த அன்னியப்பா (வயது85) என்பதும், அவர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடைக்கானல் மலைச்சாலையில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது.

    தேவதானப்பட்டி:

    கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் டம்டம்பாறை பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    சமூக வலை தளங்கள் மூலம் இறந்தவர் புகைப் படத்தை அனுப்பி வைத்து அவர் குறித்த தகவல்களை சேகரித்து வந்தனர். தற்போது இறந்தவர் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த அமீர் என தெரியவந்துள்ளது. அவரது படத்தை பார்த்து உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.

    இவரை எதற்காக கொலை செய்தனர் என்பது தெரியவில்லை. அமீரின் மனைவி தலைமறைவாக உள்ளார். அமீர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு சமீபத்தில் ஊர் திரும்பி உள்ளார்.

    குடும்ப பிரச்சினையில் மனைவி கணவரை கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×