search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை
    X

    பல்லடம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை

    கணவர் இறந்த துக்கத்தில் மனமுடைந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது குப்பிச்சிபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 90). இவரது மனைவி மாராத்தாள் (85).

    கடந்த 18 நாட்களுக்கு முன்பு நாச்சிமுத்து வயது முதிர்வு காணரமாக இறந்து விட்டார். கணவர் இறந்து துக்கம் தாங்காமல் மாரத்தாள் கணவரை நினைத்து புலம்பி வந்தார். மகன் மற்றும் பேரப்பிள்ளை, கொள்ளு, எள்ளு பேரப்பிள்ளைகள் ஆறுதல் கூறினர். ஆனால் சமாதானம் அடையாத மாரத்தாள் சம்பவத்தன்று தள்ளாத நிலையிலும் அரளி விதையை பறித்து அரைத்து தின்றார்.

    சிறிது நேரத்தில் மாராத்தாள் மயங்கி விழுந்தார். அப்போது அங்கு வந்த அவரது மகன் கருப்புசாமி மயங்கி கிடந்த தாயை மீட்டு பல்லடத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாராத்தாள் பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×