என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருமணம் ஆன 2 மாதத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை பலி - காதல் மனைவி கதறல்
Byமாலை மலர்28 April 2019 10:54 PM IST (Updated: 28 April 2019 10:54 PM IST)
திருமணம் ஆன 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி, சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சீனிவாசன் (வயது 23). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு பேக்கரி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சீனிவாசன், அரியானூர் பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சீனிவாசன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனிதாவை திருமணம் செய்து கொண்டு அரியானூர் பகுதியில் குடியேறினார். அங்கு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தினர்.
தினமும் சீனிவாசன் இங்கிருந்து நாமக்கல்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பினார்.
இரவு 11 மணி அளவில் அரியானூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி அவர், வீட்டிற்கு செல்வதற்காக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, அந்த வழியாக அதிவேகமாக சென்ற வாகனம் சீனிவாசன் மீது மோதி விட்டு நிற்காகமல் சென்று விட்டது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனது கணவர் உடலை பார்த்து அனிதா கதறி அழுதார்.
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை கணினியில் வரிசையாக பார்த்தனர்.
அதில், சீறி பாய்ந்து செல்லும் அந்த காரையும், அதன் பின்பக்கத்தில் இருக்கும் பதிவு எண்ணையும் அடையாளம் கண்டனர்.
இதையடுத்து, பதிவு எண்ணை வைத்து போலீசார் அந்த கார் எந்த ஊரை சேர்ந்தது? அதை ஓட்டிய நபர் யார்? என்பது குறித்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X