search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனவேதனை"

    • மனவேதனை காரணமாக அய்யப்பன் விஷம் குடித்தார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது32). கடந்த சில நாட்களாக கடும் மனஉளைச்சலில் இருந்த அவர் கடந்த 30-ந்தேதி விஷம் குடித்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அய்யப்பன் இறந்தார். இதுகுறித்து அய்யப்பன் சகோதரி மகேஸ்வரி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அய்யப்பனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2012-ல் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.
    • அக்காவை நினைத்து புலம்பி வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மரியம் அவன்யூவைச்சேர்ந்தவர் முகம்மது இசாக். இவருக்கு இஸ்மத் நாச்சியாள் (வயது33) என்ற ஒரு பெண் குழந்தையும், அப்துல்ரஹ்மான் (32), ஜாகிர் உசேன் (31) ஆகிய 3 குழந்தைகள். இதில், இஸ்மத் நாச்சியாளுக்கு திருமணம் நடந்து, 4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2012-ல் உடல்நிலை சரியில்ல மால் இறந்துவிட்டார். இதனால், ஜாகிர் உசேன் மனவே தனையில் இருந்துவந்தார். அடிக்கடி அக்காவை நினைத்து புலம்பி வந்தார். வெளிநாடுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தால் சரியாகிவிடுவான் என நினைத்து, தந்தை முகம்மது இசாக், ஜாகிர் உசேனை, கடந்த 3 ஆண்டு களுக்கு முன், சவுதிக்கு டிரைவர் வேலைகாக அனுப்பி வைத்தார்.

    அங்கு சென்றும், அக்காவை நினைத்து புலம்பி வந்துள்ளார். திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடுவான் என நினைத்து, பெண் பார்த்தனர். ஆனால், ஜாகிர் உசேன் திருமணம் வேண்டாம் என மறுத்துவிட்டார். இந்நிலையில், கடந்த 22-ந் தேதி ஜாகிர் உசேன் வாந்தி எடுத்தார். தந்தை மற்றும் உறவினர்கள், ஜாகிர் உசேனை காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் விசாரித்தபோது, எலி பேஸ்டை, கூல்டிரிங்சில் கலந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குடும்ப தகராறில் மனவேதனை அடைந்தவர் வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்து குடித்தார்.
    • சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருவோணம்:

    ஒரத்தநாடு அருகே உள்ள சில்லத்தூர் அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் செல்லையன். இவரது மகள் அனிதா.

    இவருக்கும், கந்தர்வகோட்டை அருகே உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிவேலுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடை பெற்றது. இந்நிலையில் அனிதா விற்கு மணிவே லுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அனிதா தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.

    குடும்பதாகராறில் மனவே தனை அடைந்த அனிதா வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்து குடித்து மயங்கினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் திருமணம் ஆகி சில மாதங்களில் இளம் பெண் இறந்ததால் தஞ்சை கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    • கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • மனவேதனை அடைந்த திவ்யா விஷம் குடித்து மயங்கினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாட்டாணிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (35).

    கூலித்தொழிலாளி. இவரது மனைவி திவ்யா ( வயது 27).இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது.

    6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த திவ்யா விஷம் குடித்து மயங்கினார்.

    அவரை உறவினர்கள் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி திவ்யா நேற்று உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து திவ்யாவின் தாய் சுமதி, பேராவூரணி போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் ராஜேந்திரன் மனவேதனை.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சீதாநகர் சிவாஜி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் ராஜேந்திரன் மன வேதனை அடைந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×