search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food Safety"

    • ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
    • உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது.

    புதுச்சேரி:

    கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்டு சிறுவன் துடிதுடித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ஸ்மோக் பிஸ்கெட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம். அது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்து, அதனை தடுக்க, தனிப்படை களம் இறக்கியுள்ளது.

    புதுச்சேரியிலும் இந்த வகை ஸ்மோக் பிஸ்கெட்டுகள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திருமண விழாக்கள், பொருட்காட்சிகள் போன்ற இடங்களிலும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்மோக் உணவு கிடைக்கிறது.

    திரவ நைட்ரஜன் தான் தற்போது வித்தியாசமான உணவு என்ற பெயரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. காக்டெய்ல், மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள் அல்லது திரவ நைட்ரஜன் கலந்து செய்யப்படும் எந்த உணவாக இருந்தாலும் அது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு அதனை வாங்கி கொடுக்கிறார்கள்.

    உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது. இந்த டிரை ஐஸ்களை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.

    இதுதொடர்பாக, தமிழக அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஸ்மோக் பிஸ்கெட் விஷயத்தில் புதுச்சேரி அரசும், உணவு பாதுகாப்பு துறையும் மவுனமாக உள்ளது.

    இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் ரசாயன பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், செங்கோட்டையில் தயாரித்து கேரள பெயர்களை அச்சிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதும், பல்வேறு பெயர்களை கொண்ட லேபிள்கள் அச்சடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 270 லிட்டர் ஐஸ்கிரீம்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்
    • தடை செய்த பொருட்களை உணவுகளில் கலப்பதை தடுத்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சுகாதாரமற்ற உணவு விற்பனையால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதுவை நகரப்பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் ஷவர்மா உள்ளிட்ட பல்வேறு துரித உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். இவற்றுக்கு பயன்ப டுத்தப்படும் இறைச்சிகள் சுகாதா ரமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

    இதனை உணவு பாதுகாப்புதுறை ஆய்வு செய்வது கிடையாது. எனவே தமிழகத்தை போல் புதுவையிலும் பலி ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து உள்ளாட்சி துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் உணவகங்கள், சலையோர உணவு கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும்.

    தடை செய்த பொருட்களை உணவுகளில் கலப்பதை தடுத்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுவை மாநிலம் முழுவதும் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்த கவர்னர் தமிழிசை அனுமதி அளித்துள்ளார்.இதற்காக அரசு ரூ.360 கோடி செலவு செய்வது மக்களுடைய வரி பணத்தை வீணடிக்கும் செயலாகும்.

    பிரீபெய்டு மீட்டர் பொருத்த முன்பணமாக ரூ.9 ஆயிரம் கேட்கின்றனர். பிரீபெய்டு மீட்டர் பொருத்துவது மக்களை வஞ்சிக்கும்.புதுவை மின்துறை என்பது ஒரு கூட்டுகொள்ளை அடிக்கும் துறையாக உள்ளது.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    • கோட்டகுப்பத்தில் உள்ள பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பழைய சிக்கன் 65, 6 கிலோ என மொத்தம் 11 கிலோ பழைய சிக்கனை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    நாமக்கல்லில் சவர்மா சிக்கன் சாப்பிட்டு சிறுமி உயிர் இழந்தார், உடல் நலம் பாதிக்கப்பட்டு 43 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சுகந்தன் உத்தரவின் பேரில், கோட்டகுப்பத்தில் உள்ள பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    வானூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன் வட்டார உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் ரவி சரவணன் கோட்டகுப்பம் சுகாதார பிரிவு அதிகாரிகள் தின்னாயிரம், பழனி மற்றும் ஊழியர்கள் கோட்டகுப்பம் காந்தி வீதியில் உள்ள ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் பிரியாணி கடைகள் ஆகியவற்றில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அங்கு கறிக்கடையில் இருந்த 5 கிலோ பழைய கோழிக்கறி, பிரியாணி கடைகளில் விற்பனைக்காக சமைத்து வைக்கப்பட்ட பழைய சிக்கன் 65, 6 கிலோ என மொத்தம் 11 கிலோ பழைய சிக்கனை பறிமுதல் செய்தனர்.

    • காரைக்குடியில் பதனீரை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
    • பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

    காரைக்குடி

    காரைக்குடியில் கடந்த மாதம் முதல் பல்வேறு இடங்களில் பதநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அதிகாலை பதநீர் இறக்கப்பட்டு வேன் மூலமாக காரைக்குடிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    உடலிற்கு நலம் பயக்கும் பதநீரை மக்கள் ஆர்வமாக வாங்கி பருகி வருகின்றனர்.அதே வேளையில் இந்த பதநீரில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவ தாகவும் இனிப்பு சுவைக்காக சீனி மற்றும் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமைமையில் உணவு பாதுகாப்பு அலு வலர்கள் முத்துக்குமார், சாக்கோட்டை பிளாக் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் பதநீர் விற்பனையை ஆய்வு செய்தனர். பல்வேறு இடங்களிலும் சோதனைக்காக மாதிரி களை எடுத்துச் சென்றனர்.

    மேலும் பதநீர் விற்பனையாளர்களிடம் பதநீர் இறக்கவும் விற்பனை செய்யவும் முறையான அனுமதி பெறவேண்டும் எனவும், அதிகாலை இறக்கப்படும் பதநீரை பகல் ஒரு மணிக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    காரைக்குடி 100 அடி சாலையில் விற்பனை செய்து வந்த பதநீரில் இனிப்புக்காக சர்க்கரை சேர்த்து விற்பனை செய்வதை அறிந்து சுமார் 50 லிட்டர் அளவிலான பதநீரை சாக்கடையில் கொட்டிச் சென்றனர்.

    இதுகுறித்து அலுவலர் டாக்டர் பிரபாவதி கூறுகையில், பதநீரில் ரசாயன பொருட்களை கலந்தால் அதனை அருந்துவோருக்கு கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் உணவு முறைகேடு சம்பந்தமாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

    • வெற்றிலை போடும் பழக்கம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது.
    • பாக்கு வாங்குவதற்கு பலரும் தயங்குகின்றனர்.

    மடத்துக்குளம் :

    பளபளப்பாக இருப்பவையே தரமானவை என்ற தவறான எண்ணம் பலரது மனதில் பதிந்திருக்கிறது. அதனையே வியாபார தந்திரமாக பயன்படுத்தி செயற்கை சாயத்தை உணவுப் பொருட்கள் மீது வியாபாரிகள் பூசி விடுகின்றனர்.

    உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும், இத்தகைய தவறை பலரும் தொடர்கின்றனர். இப்படி செயற்கை சாயத்துக்கு வெட்டுப்பாக்கும் தப்பவில்லை.வெற்றிலை போடும் பழக்கம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. வயது முதிர்ந்தவர்களே இன்னும் அப்பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். எனினும் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களில் வெற்றிலை பாக்குக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இதற்கு பயன்படுத்தும் வெட்டுப்பாக்கு இயற்கையில் சற்று நிறம் குறைவானதாக இருக்கும். அப்படி நிறம் குறைந்த பாக்கு வாங்குவதற்கு பலரும் தயங்குகின்றனர்.

    இதனால் வியாபாரிகள் பாக்கில் செயற்கை சாயத்தை ஏற்றி பளபளப்பாக மாற்றி விடுகின்றனர்.சாயம் ஏற்றிய பாக்குகளை பயன்படுத்துவோருக்கு நிச்சயம் உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இதில் இருந்து தப்பிக்க சாயம் ஏற்றப்பட்ட பாக்குகளை வாங்காமல் தவிர்த்தாலே போதும். பளபளவென இருந்தாலே, பாக்கு சாயம் ஏற்றப்பட்டது தான் என்பதை புரிந்து கொண்டு விடலாம். தண்ணீரில் சிறிது நேரம் ஊறினால் பாக்கின் சாயம் வெளுத்து விடும் என்று உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.இத்தகைய கலப்படம் தொடர்பாக 94440 -42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.  

    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள்.
    • ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாதீர்கள்

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்து காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயண பிரம்மேந்திரர் திருமண மண்டபத்தில் காட்டுப்புத்தூர் அனைத்து வணிகர் சங்கத்தினர் ஏற்பாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பாதுகாப்பு பிரிவு) உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.காட்டுப்புத்தூர் அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் மணி (எ) சி.குப்புசாமி தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலரும் வளம் மீட்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வியாளர் டாக்டர்.ச.சாகுல் அமீது, திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர்டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தொட்டியம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி டி. செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

    இதில் வணிகர்கள் கலப்படம் செய்யப்பட்ட பொருள்களை எளிய முறையில் கண்டறிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வணிகர்கள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. பேரூராட்சி சிறப்பாக செயல்பட அனைத்து வணிகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ஆரோக்கியமான தரமான உணவுப் பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு வேண்டு கோளை வணிகர்சங்கத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் முன்வைத்தது. உணவு பாதுகாப்பில் அதிக கலர் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாதீர்கள் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்து வணிகர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

    முடிவில் சங்கத் துணைத் தலைவர் ஜி. மோகன் குமார் நன்றி கூறினார்.

    • உணவு திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.
    • ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 'திருப்பூர் உணவுத்திருவிழா -2022' காங்கயத்தில் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.விழாவின் ஒரு பகுதியாக காங்கயம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து காலை 8 மணிக்கு, 'வாக்கத்தான்' விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. மேலும், சலங்கையாட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி ஆட்டத்துடன் விழா களைகட்ட போகிறது.உணவுத்திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.

    முன்னதாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டிகளும் நடக்கின்றன.உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகம், ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். படைப்புகளை, eatrighttiruppur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்தும் சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு 78711 33777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    உணவு திருவிழாவின் ஒரு பகுதியாக 7-ந் தேதி காலை 10மணிக்கு, காங்கயம் என்.எஸ்.என்., திருமண மண்டபத்தில் சமையல் போட்டி நடக்கிறது.

    ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென்னிந்திய சமையல், சிறுதானிய சமையல், பால்வகை சமையல், மறந்து போன உணவகள், சமையல் அலங்காரம் ஆகிய தலைப்புகளில், சமையல் செய்யலாம்.போட்டியில், 'செப்' தாமு மற்றும் 'செப்' அனிதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

    சமையல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, 'திருப்பூரின் அறுசுவை அரசி' என்ற பட்டமும், பரிசுகளும் வழங்கப்படும். போட்டியாளர் விரும்பிய உணவுகளை வீட்டில் தயாரித்தும் எடுத்துவரலாம். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறுபவர், இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இறுதிப்போட்டி சமையல் கலைஞர் முன்னிலையில் மண்டபத்தில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • சுத்தமும் சுகாதாரமும் நிறைந்த காய்கறி மற்றும் பழ சந்தைகளை டெல்லியில் உள்ள மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்து அதில் சிறந்த சந்தைகளுக்கு சான்றிதழ் வழங்குகிறது.
    • விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து உணவு பொருட்கள் விற்பனை செய்து உழவர் சந்தை வளாகத்திலேயே பதிவு சான்றிதழ் வழங்கினர்.

    நெல்லை:

    சுத்தமும் சுகாதாரமும் நிறைந்த காய்கறி மற்றும் பழ சந்தைகளை டெல்லியில் உள்ள மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்து அதில் சிறந்த சந்தைகளுக்கு சான்றிதழ் வழங்குகிறது. நெல்லையில் மகாராஜா நகரில் உள்ள உழவர் சந்தை சிறந்த முறையில் உழவர்கள் கொண்டுவரும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் சந்தையாக செயல்பட்டு வருகிறது.

    இதையடுத்து வேளாண் இயக்குனர் நடராஜன், துணை இயக்குனர் முருகானந்தம் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மஹாராஜா நகர் உழவர் சந்தையில் நிர்வாக அலுவலர் பாப்பாத்தி மேற்பார்வையில் உழவர் சந்தையில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உணவு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி முகாமில் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜ் உத்தரவின் பேரில் பாளை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து உணவு பொருட்கள் விற்பனை செய்து உழவர் சந்தை வளாகத்திலேயே பதிவு சான்றிதழ் வழங்கினர்.

    ×