search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி
    X

    கோப்புபடம்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி

    • உணவு திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.
    • ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 'திருப்பூர் உணவுத்திருவிழா -2022' காங்கயத்தில் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.விழாவின் ஒரு பகுதியாக காங்கயம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து காலை 8 மணிக்கு, 'வாக்கத்தான்' விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. மேலும், சலங்கையாட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி ஆட்டத்துடன் விழா களைகட்ட போகிறது.உணவுத்திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.

    முன்னதாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டிகளும் நடக்கின்றன.உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகம், ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். படைப்புகளை, eatrighttiruppur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்தும் சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு 78711 33777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    உணவு திருவிழாவின் ஒரு பகுதியாக 7-ந் தேதி காலை 10மணிக்கு, காங்கயம் என்.எஸ்.என்., திருமண மண்டபத்தில் சமையல் போட்டி நடக்கிறது.

    ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென்னிந்திய சமையல், சிறுதானிய சமையல், பால்வகை சமையல், மறந்து போன உணவகள், சமையல் அலங்காரம் ஆகிய தலைப்புகளில், சமையல் செய்யலாம்.போட்டியில், 'செப்' தாமு மற்றும் 'செப்' அனிதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

    சமையல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, 'திருப்பூரின் அறுசுவை அரசி' என்ற பட்டமும், பரிசுகளும் வழங்கப்படும். போட்டியாளர் விரும்பிய உணவுகளை வீட்டில் தயாரித்தும் எடுத்துவரலாம். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறுபவர், இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இறுதிப்போட்டி சமையல் கலைஞர் முன்னிலையில் மண்டபத்தில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×