search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி தொட்டியத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
    X

    திருச்சி தொட்டியத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள்.
    • ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாதீர்கள்

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்து காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயண பிரம்மேந்திரர் திருமண மண்டபத்தில் காட்டுப்புத்தூர் அனைத்து வணிகர் சங்கத்தினர் ஏற்பாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பாதுகாப்பு பிரிவு) உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.காட்டுப்புத்தூர் அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் மணி (எ) சி.குப்புசாமி தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலரும் வளம் மீட்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வியாளர் டாக்டர்.ச.சாகுல் அமீது, திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர்டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தொட்டியம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி டி. செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

    இதில் வணிகர்கள் கலப்படம் செய்யப்பட்ட பொருள்களை எளிய முறையில் கண்டறிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வணிகர்கள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. பேரூராட்சி சிறப்பாக செயல்பட அனைத்து வணிகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ஆரோக்கியமான தரமான உணவுப் பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு வேண்டு கோளை வணிகர்சங்கத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் முன்வைத்தது. உணவு பாதுகாப்பில் அதிக கலர் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாதீர்கள் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்து வணிகர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

    முடிவில் சங்கத் துணைத் தலைவர் ஜி. மோகன் குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×