search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓவியப்போட்டி"

    • வருகிற ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    வருகிற ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நூறு சதவீத ஓட்டுப்பதிவை சித்தரிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 25 பள்ளிகள், 25 கல்லூரிகளில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் நிப்ட்-டீ பேஷன் கல்லூரியில், போஸ்டர் உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில், விதவிதமான போஸ்டர் ஓவியங்கள் வரைந்து வண்ணம் தீட்டினர். போட்டியில், மாணவர் பரீத் அகமது முதலிடமும், மாணவி திவ்யாஸ்ரீ இரண்டாமிடமும், ஸ்வேதா மூன்றாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் தெற்கு தாலுகா தனி தாசில்தார் பாபு, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கதிர்வேல், கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார். பள்ளி, கல்லுாரிகளில் தனித்தனியே போட்டி நடத்தப்பட்டு சிறந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசு 500 ரூபாய், இரண்டாம் பரிசு 300 மற்றும் மூன்றாம் பரிசு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. அவற்றில், மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் ஓவியத்துக்கு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.2 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் ஓவியத்துக்கு 1,000 ரூபாய் என வழங்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவில் சிறந்த ஓவியத்துக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. சிறந்த ஓவியங்கள் வருகிற தேர்தலில், நூறு சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வுக்கான போஸ்டர்களில் பயன்படுத்தப்படும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • உலக அமைதிக்கான மாபெரும் ஓவியப் போட்டி திருச்சி குழுமணி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

    திருச்சி

    திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக அமைதிக்கான மாபெரும் ஓவியப் போட்டி திருச்சி குழுமணி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சாசன தலைவர் லயன் முகமது ஷபி தலைமை தாங்கினார்.

    பள்ளி மாணவ மாணவிகளுக்கு தகுதி என்ற தலைப்பில் தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்தை ஆத்மா மருத்துவமனை மனநல ஆலோசகர் கரன்லூயிஸ் நடத்தினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் பிரசன்ன வெங்கடேஷன், பொருளாளர் ரெங்கராஜன், இயக்குனர் பாஸ்கரன்,இயக்குனர் குமார், சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், உறுப்பினர் வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன், சாசன உறுப்பினர் ராஜூ ஜோசப் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பித்தனர்.

    இறுதியில் செயலாளர் பிரசன்ன வெங்கடேஷன் நன்றியுரை கூறினார்.

    • வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு நடந்தது
    • வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வாரவிழாவையொட்டி கலவை ஆதிபராசக்தி வேளாாண்மை கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், விநாடி-வினா மற்றும் சொற்பொழிவு ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட வனபாதுகாவலர் சுஜாதா, வனசகர்கள் சரவணபாபு, ராஜா, வெங்கடேசன், பசுமை தோழர் ஏஞ்சலின், ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி முதல்வர் தனுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மேலும் காடுகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ஆற்காட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி விழா அறக்கட்டளை உடன் இணைந்து ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக ஓவியப்போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திரா நர்சரி பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட வணிக சங்க பேரமைப்பு தலைவர் சரவணன், ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்குமார், வணிகர் சங்க நகர செயலாளர் பாஸ்கரன், பள்ளி தாளாளர் சேட்டு, தொழிலதிபர் தர்மிச்சந்த் மற்றும் ஆசிரியர் இங்கர்சல் அறக்கட்டளை தலைவர் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • 280 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

    கன்னியாகுமரி, 

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில்சு தந்திரதினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவி களுக்கான ஓவியப்போட்டி நடந்தது. 6-ம்வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை பயிலும் மாணவ- மாணவி களுக்கு"எனக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர்" என்ற தலைப்பில்இந்த ஓவியப்போட்டி நடந்தது. இந்தப்போட்டிகளை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தொடங்கி வைத்தார்.

    இந்தப்போட்டியில் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில்உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 280 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். .அவர்கள் தங்களுக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர்களை ஓவியங்களாக வரைந்தனர். தொடர்ந்து பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் அதிகாரி மகாராஜாபிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களை யும் வழங்கினார்.

    ஓவியர் கோபால கிருஷ்ணன் நடுவராக இருந்து போட்டி யில்வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தார். இந்தநிகழ்ச்சியில் எழுத்தாளர் சரலூர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப்போட்டியில் வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி, மணிக் கட்டி பொட்டல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிகா, ராஜாக்காமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அகிலேஷ், காட்டா துறை அரசு மேல்நிலை பள்ளி மாணவி ஷானுகா, திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி லலிதா சிவத ர்ஷினி, கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரி வர்ஷினி, நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆராதனா, புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா, விவேகானந்தாகேந்திர வித்யாலயாபள்ளி மாணவர்விஷ்ணுசரண் ,புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி மாணவர் அல்டாப் முகமது ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கபட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    • நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை வல்லத்தில் நடைபெற உள்ளது.
    • மொத்தம் பரிசுத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகஅரசு வனத்துறை சார்பில் உலகில் அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கவும், தமிழகத்தில் தஞ்சை கடற்பகுதியில் இவ்வுயிரினம் கண்டறியப்பட்டு முதல் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டதையும், உலக கடற்பசு தினத்தை வருகிற 28-ந் தேதி கொண்டாடும் வகையிலும் மாவட்ட அளவி லான ஓவியப்போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கான போட்டியானது நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. பள்ளிகளில் பயிலும் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் முதல் பிரிவாகவும், 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 2-ம் பிரிவாகவும், கல்லூரி அளவில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் 3-ம் பிரிவாகவும் வகைப்படுத்தப்ப ட்டுள்ளனர்.

    ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 3 பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 3 பிரிவிற்கும் சேர்த்து மொத்தம் பரிசுத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    போட்டியில் பங்குபெறும் மாணவர்க ளுக்கு ஓவியம் வரைவதற்குரிய அட்டைகள் துறை மூலம் வழங்கப்படும்.

    இதர வரைவு உபகரணங்கள் பென்சில், வண்ணக்க லவைகள் போன்றவற்றை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும்.

    போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு விழா, இடம் முதலிய விவரங்கள் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.

    தனித்திறமைகள் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி மேற்கொண்டு வருகிறார்.

    அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு தொடர்பான ஓவியங்களை தீட்டி பரிசுகளை வெல்ல பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்து கொண்டு ஒளிர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் சார்பில் மருந்தக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • பள்ளி ஆசிரியைகள் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ந் தேதி முதல் 7ந் தேதி வரை ஜன் ஒளஷதி திவாஸ் (மக்கள் மருந்தக வார கொண்டாட்டம்) இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு 7 நாட்களில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உறுதிமொழி பாதயாத்திரை (பேரணி), குழந்தைகளுக்கான போட்டிகள், பொதுமக்களுக்கான மருத்துவ முகாம் முதலானவை நடைபெறும். திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் சார்பில் மருந்தக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    4-ம் நாளான இன்று கோவில் வழி ஸ்ரீகாயத்ரி நர்சரி - பிரைமரி பள்ளியில் "ஜன் ஒளஷதி குழந்தைகளுக்கான நண்பன்" எனும் தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியை நாகஜோதி தலைமை வகித்தார். திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் உரிமையாளர் அருண் பாரத் , மத்திய பார்வையாளர் அரவிந்த்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் சாதனா முதலிடத்தையும், தாரணி இரண்டாமிடமும், மணிகண்டன் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு போஷான் (சத்து மாவு) பரிசாக வழங்கப்பட்டது. திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் கலர் பென்சில், பழச்சாறு, பிஸ்கட், வர்ண பலூன்கள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியைகள் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • இந்த போட்டியின் காரணமாக மாணவ- மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்
    • மாணவர்கள் கைதட்டி பாடல்கள் பாடிய படி உற்சாகமாக வந்தனர்.

    கோவை,

    கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் நேற்று ஓவியப்போட்டி நடத்தப்ப ட்டது.

    கோவை ரெயில் நிலை யத்தில் இருந்து ரெயில் புறப்பட்டதும் ஓவியப் போட்டி தொடங்கியது. இதில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    4,5,6,7 பயிலும் மாணவ-மாணவிகள் கொடுக்கப்பட்ட ஓவியத்துக்காக அழகாக வண்ணம் தீட்டினர். 8-ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள் தூய்மையான இந்தியா மற்றும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டினர். ஓடும் ரெயில் என்றும் பாராமல் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் ஓவியத்தை வரைந்தனர்.

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் சென்ற தும் ஓவியப்போட்டி நிறை வடைந்தது. பின்னர் அதே ரெயிலில் புறப்பட்டு மாணவர்கள் கோவை திரும்பி வந்தனர். வழியில் அவர்கள் கைதட்டி பாடல்கள் பாடிய படி உற்சாகமாக வந்தனர்.

    இதுபற்றி மாணவிகள் கூறுகையில் ஓடும் ரெயிலில் ஓவியம் வரைந்தது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மேட்டுப்பாளையம் வரை மகிழ்ச்சியாக சென்று வந்தோம்.

    எங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருந்தது என்றனர்.

    போட்டியை நடத்திய புதுவை திருவள்ளுவர் கலைக்கூடம் அமைப்பாளர் சிவகுமார் கூறுகையில் ஓவியம் வரைவதால் மாணவர்களின் சிந்தனை திறன், கற்பனைத்திறன் மேலோங்கும். அறிவாற்றல் கூர்மையாகும். அந்த வகையில் ஓடும் ரெயிலில் நடந்த ஓவியப் போட்டி மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றார்.

    இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. 

    • மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    • பிரதமர் மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகமும் வழங்கப்பட்டன

    உடுமலை :

    நாடு முழுவதும் பள்ளிகளில் வரும் மாதங்களில் முழு ஆண்டு தேர்வு, பொதுத்தேர்வு நடக்கவுள்ளன. இதற்காக மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பொதுவாக தேர்வு சமயங்களில் அவர்களுக்கு ஒரு வித அச்சம் எழுகிறது. இதை போக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    இதன் வாயிலாக அவர்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வகையில், மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி நடத்தி வரும் பரீட்சா பே சர்ச்சா எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி புது டெல்லியில் நடக்கிறது.

    அதில் தேர்வுகள் குறித்து மாணவர்கள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார். அதன் ஒரு பகுதியாக தேசிய அளவில், 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த போட்டியில், 15 பள்ளிகளைச்சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.அனைத்து மாணவர்களுக்கும் ஓவியம் வரைவதற்கான உபகரணங்கள் மட்டுமின்றி, பிரதமர் மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகமும் வழங்கப்பட்டன. முடிவில் சிறந்த ஐந்து ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது
    • 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ளுவதற்கான ஓவியப்போட்டி நடை பெற்றது.மத்திய கல்வி அமை ச்சகத்தால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் பராக்ரம் திவாஸ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நேதாஜி சுபாஷ் வாழ்க்கையைப் பற்றி மாணவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு தேசபக்தியை வளர்க்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.இந்நாளையொட்டி மாணவர்களிடையே தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள ஒரு தனித்துவமான முயற்சியாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய அளவிலான ஓவியப்போட்டி பிரதமர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் 'தேர்வு வாரியர்ஸ்" ஆவது எப்படி என்பதை மையக்கருத்தாக கொண்டு 25 தலைப்புகளில் நாடுமுழுவதும் நடந்தது. இதன்படி பெரம்பலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களது மனதில் கலைத்திறன் மற்றும் நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வண்ணம் ஓவியப்போட்டி நடந்தது.இந்த போட்டியில் சிபிஎஸ்இ, மெட்ரிக் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன், பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் வேல்முருகன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராமன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி சிறந்த ஓவிய படைப்புகளை தேர்ந்தெடுத்தனர்.பின்னர் பள்ளி முதல்வர் கல்யாண்ராமன் சிறந்த 5 படைப்புகளுக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் ஓவியப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பிரதமர் மோடியின் தேர்வு வாரியர்ஸ் என்ற புத்தகம் வழங்கினார்.

    • 20-ந் தேதிக்குள் மாணவர்களின் படைப்புகளை பள்ளி, கல்லூரிகள் சேகரித்து அறிமுக கடிதத்துடன் அனுப்பி வைக்கவேண்டும்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டவுள்ளது. இது குறித்து எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கடந்த வருடம் 4 தலைப்புகளில் ஓவிய போட்டிகள் நடத்தப்பட் டது. மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி கல்லூ ரிகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் ஒவியங்கள் வந்தன. இந்த ஓவியங்கள் மாவட்ட ஆயுதப்படை முகாம் மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பான முறையில் ஓவியம் வரைந்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மாணவர்களிடையே பங்கேற்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த வருடமும் ஓவியம், சுவரொட்டி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். போதை பொருட்கள் நமக்கு வேண்டாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், மூத்த குடிமகன்-நமது பொக்கி ஷம் மற்றும் நமது பெருமை, சைபர் கிரைம் குற்றங்களில் கவனமாகவும் பாதுகாப் பாகவும் இருங்கள், காவல் துறை வழங்கும் சேவைகள் பற்றிய எனது பார்வை ஆகிய தலைப்புகளில் போட்டி நடக்கிறது.

    1 வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ஒரு பிரி வாகவும், 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒரு பிரிவாகவும் ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 3 தலைப்புகளில் மாணவர்கள் அவரவர் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொருட்களில் பங்கேற்கலாம். மாண வர்களின் படைப்புகளைப் வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

    மாணவர்களின் படைப்பு களை ஒவ்வொரு கல்லூரியும், பள்ளியும் சேகரித்து அதனை ஒரு அறிமுக கடி தத்துடன் காவல் கண் காணிப்பாளர், மாவட்ட போலீஸ் அலுவலகம், நாகர்கோவில்-629001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேரடியாகவும் கொடுக்கலாம். 3 உறுப்பினர்களைக் கொண்ட குழு மாணவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும். முடிவுகள் வருகிற 25-ந் தேதி அறிவிக்கப்படும்.

    மேலும் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும். மேலும் சந்தேகங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 9498103903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • உலக மரபு வார விழா கடந்த 19-ந் முதல் 25-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொண்டாடி வருகிறது.
    • மாணவர்களுக்கு தொல்லியல் பற்றி விளக்கம் அளித்தார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகத் தொல்லியல் துறை, கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகம் மற்றும் மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஆகியவை இணைந்து, உலக மரபு வார விழா கடந்த 19-ந் முதல் 25-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொண்டாடி வருகிறது. 19-ந் தேதி தேன்கனிக்கோட்டை தாலுகா சந்தனப்பள்ளி மற்றும் இருதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு சென்று அங்குள்ள கல்வெட்டுக்களை படித்து, அவ்வூர் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கிக் கூறியதோடு, மரபுச் சின்னங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், ஓவியப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, பறவை, விலங்கு என்ற தலைப்பிலும், 9, 10-ம் வகுப்புக்கு எனக்கு பிடித்த சுற்றுலா தளம், 11, 12-ம் வகுப்புகளுக்கு அருங்காட்சியக காட்சிப் பொருள் என்ற தலைப்புகளில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் பரிசு வழங்கி பாராட்டினார்.

    வட்டாரக் கல்வி அலுவலர் தமிழ்செல்வி, மாணவர்களை வாழ்த்திப் பேசினார். தொல்லியல் அலுவலர் பரந்தாமன், மாணவர்களுக்கு தொல்லியல் பற்றி விளக்கம் அளித்தார். அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, விஜயகுமார் ஒருங்கி ணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    ஓவியப்போட்டியை அருங்காட்சியகப் பணியா ளர்கள் செல்வகுமார் மற்றும் பெருமாள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். வானவில் பன்னீர்செல்வம் பரிசுக்குரிய ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார்.

    ×