search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஓவியப்போட்டி
    X

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஓவியப்போட்டி

    • பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ஆற்காட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி விழா அறக்கட்டளை உடன் இணைந்து ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக ஓவியப்போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திரா நர்சரி பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட வணிக சங்க பேரமைப்பு தலைவர் சரவணன், ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்குமார், வணிகர் சங்க நகர செயலாளர் பாஸ்கரன், பள்ளி தாளாளர் சேட்டு, தொழிலதிபர் தர்மிச்சந்த் மற்றும் ஆசிரியர் இங்கர்சல் அறக்கட்டளை தலைவர் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×