search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smoke Biscuits"

    • ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
    • உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது.

    புதுச்சேரி:

    கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்டு சிறுவன் துடிதுடித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ஸ்மோக் பிஸ்கெட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம். அது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்து, அதனை தடுக்க, தனிப்படை களம் இறக்கியுள்ளது.

    புதுச்சேரியிலும் இந்த வகை ஸ்மோக் பிஸ்கெட்டுகள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திருமண விழாக்கள், பொருட்காட்சிகள் போன்ற இடங்களிலும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்மோக் உணவு கிடைக்கிறது.

    திரவ நைட்ரஜன் தான் தற்போது வித்தியாசமான உணவு என்ற பெயரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. காக்டெய்ல், மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள் அல்லது திரவ நைட்ரஜன் கலந்து செய்யப்படும் எந்த உணவாக இருந்தாலும் அது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு அதனை வாங்கி கொடுக்கிறார்கள்.

    உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது. இந்த டிரை ஐஸ்களை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.

    இதுதொடர்பாக, தமிழக அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஸ்மோக் பிஸ்கெட் விஷயத்தில் புதுச்சேரி அரசும், உணவு பாதுகாப்பு துறையும் மவுனமாக உள்ளது.

    இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • திரவ நைட்ரஜன் உட்கொள்ளப்படும் போது உதடு, நாக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியை சேதப்படுத்துகிறது.
    • 6 மாதங்களுக்கு முன்பே திருச்சியில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் ஸ்மோக்கிங் பிஸ்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    சென்னை:

    அமிலம் கலந்து உணவுப் பொருட்கள் வினியோகம் என்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாடிக்கையாளர்களை கவர ஐஸ்கிரீம், பிஸ்கெட் ஆகியவற்றின் மீது திரவ நைட்ரஜனை கலப்பது சாப்பிடும் போது புகையை வரவழைக்கும்.

    இதனால் ஆர்வமுடன் அதை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஸ்மோக் பிஸ்கெட், ஸ்மோக் பீடா, ஸ்மோக் ஐஸ்கிரீம் விற்பனைக்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உணவு உட்கொள்ளும் தருணத்தில் திரவ நைட்ரஜனை அதன் மீது கலந்தால் வாயில் இருந்து புகை அதிக அளவில் வரும். இதை சுவாசிப்பதால் ஜீரண மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

    இதுதொடர்பாக சென்னை உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பால், தயிர், க்ரீம்கள், விப்பிங் க்ரீம்கள், கொழுப்பு குறைவான க்ரீம்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், பழ ரசங்கள், காய்கறிச் சாறுகள், காபி, தேநீர், மூலிகை பானங்கள் உள்ளிட்டவற்றை நுரைக்கச் செய்வதற்கும், கெட்டுப்போகாமல் பொட்டலமிடுவதற்கும் திரவ நைட்ரஜனை பயன்படுத்தலாம்.

    அதே போல, திராட்சை ஒயினில் இருந்து ஆக்ஸிஜனை வெளியேற்றுவதற்கும் அதை பயன்படுத்தலாம். மற்றபடி வேறு எந்த வகையிலும் வணிகர்கள் திரவ நைட்ரஜனை உணவில் சேர்க்கக் கூடாது.

    இந்த விதியை மீறினால் ரூ.2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபணமானால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    அதுமட்டுமின்றி, திரவ நைட்ரஜன் கலந்த உணவுப் பொருளை உட்கொண்டு பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு சம்பந்தப்பட்ட வணிகரிடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தரப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    திரவ நைட்ரஜன் உட்கொள்ளப்படும் போது உதடு, நாக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியை சேதப்படுத்துகிறது. நுரையீரலுக்குள் புகுந்தால் சுயநினைவும் இழக்க வாய்ப்பு உண்டு என்று எச்சரித்துள்ளார்கள்.

    அதே நேரம் தொழில் துறை நோக்கங்களுக்காக திரவ நைட்ரஜன் பயன்பாட்டை அனுமதித்துள்ளார்கள். உணவுப் பொருட்களை உறைய வைக்க, குளிரூட்ட, பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அந்த உணவு பொருட்கள் பல மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்குமாம்.

    6 மாதங்களுக்கு முன்பே திருச்சியில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் ஸ்மோக்கிங் பிஸ்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல் சென்னையில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இப்போதுதான் தடை வந்துள்ளது.

    உணவில் கலந்து பதப்படுத்தி வைத்திருந்தால் அதை சாப்பிடும் போது உடலை பதம் பார்க்காதாம். இதமாக இருக்குமாம். ஆனால் சாப்பிடும் போது அதன் மீது தெளித்து சாப்பிட்டால்தான் ஆபத்தாம்.

    • உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி உறைதல் பணிக்கு மட்டுமே இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • ஆய்வு மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மதுரை:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை தேறி வரும் நிலையில் தமிழகத்தில் இந்த திரவ நைட்ரஜன் பயன்பாட்டிற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    திரவ நைட்ரஜனை நேரடியாக உணவுப்பொருட்களில் கலந்து விற்பனை செய்யக்கூடாது, அதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி உறைதல் பணிக்கு மட்டுமே இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் மதுரை நகர் பகுதி முழுவதும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நேற்று மதியம் முதல் இரவு வரை மதுரை தெப்பக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவு கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அதில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் ஸ்மோக் பிஸ்கட் கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் கடை சுற்றியும் ஒட்டப்பட்டுள்ள விளம்பர ஸ்டிக்கர்களும் அகற்றப்பட்டு உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த ஆய்வு மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது.
    • டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை.

    சென்னை :

    கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவன் வலியால் துடிதுடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்மோக் பிஸ்கட்டை(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

    * திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம்.

    * திரவ நைட்ரஜன் உயிருள்ள திசுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான உறை பனியை ஏற்படுத்தும் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது.

    * திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயை சிதைக்கிறது.


    மேலும், உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனிடையே சென்னையில் திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×