search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "asylum"

    • ரெயில் பயணத்தில் காதல் மலர்ந்தது
    • பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிறிஸ்டியன் காலனியை சேர்ந்தவர் விவேக் (வயது 30). இவர் கோவை யில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தினசரி விவேக் ரெயில் மூலமாக வேலைக்கு வந்து சென்றார். ரெயில் பய ணத்தில் போது இவருக்கு காரமடை வெள்ளியங் காட்டை சேர்ந்த ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அர்ச்சன பிரியா (22) என்பவரும் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் கடந்த 7 மாதங்களாக 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் விவேக்கின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மணப்பெண்ணை தேடி வந்தனர்.

    இதனையடுத்து காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் காதலர்கள் சிறுமு கையில் உள்ள ஒரு கோவி லில் வைத்து திருமணம் செய்தனர்.

    திருமணம் செய்து கொண்ட கையோடு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தஞ்சமடைந்தார்.
    • அவரது மகன் சமரசம் செய்து அழைத்துச் சென்றார்.

    மதுரை

    மதுரை புதூர் கற்பகநகர் பகுதியில் வசித்து வருபவர் அன்னம்மாள். இவரது கணவர் குப்பன் கடந்த 2020-ம் ஆண்டு உயிரி ழந்தார். இவர்களுக்கு குற்றாலராஜா, சரவண பாண்டி என 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வது மகன்சரவண பாண்டி பெற்றோரின் சொத்துக்களான வீடுடன் கூடிய 2 சென்ட் இடத்தை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து மூத்த மகன் குற்றால ராஜா தனக்கு மீதமுள்ள சொத்துக்களை தருமாறு தாய் அன்னம்மாளிடம் கேட்டு ெதாந்தரவு செய்துள்ளார்.

    இதனால் விரக்தியடைந்த அன்னம்மாள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார். சொத்துக் களை பெற்றுக்கொண்டு மகன்கள் ஏமாற்றிவிட்டதாக அவர் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தாய் கலெக்டர் அலுவலகத்தில் இருப்பதை அறிந்த மகன் குற்றால ராஜா அங்கு வந்து அன்னம்மாளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார்.

    • ஆலங்குடி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை இரு விட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர்

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் ஊராட்சி மைக்கேல்பட்டியை சேர்ந்தவர் தேவநேசன் மகள் ஜோஸ் ஆஸ்லி. (வயது 22). பி.எட். பட்டதாரியான இவர் கடந்த 12ஆம் தேதி வீட்டை விட்டு ஓடி விட்டதாக ஆலங்குடி போலீசில் தந்தை புகார் கொடுத்தார். ஆலங்குடி போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த சின்னப்பன் மகன் லெனின் என்பவரும் ஜோஸ் ஆஸ்லியும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை இரு விட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர். மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் தெரிவித்து எழுதி கொடுத்துவிட்டு காதல் ஜோடியை அழைத்து சென்றனர். பெண் வீட்டார் கொடுத்த புகாரை வாபஸ் பெற்று கொண்டனர்.

    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 பேரும் தஞ்சமடைந்தனர்.
    • சுவேதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் ராஜ்குமாரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்தவர் சுவேதா (வயது 23). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் சுவேதாவுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் ெவவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் விவகாரம் சுவேதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு தடை விதித்ததோடு வேறுஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதிர்ச்சியடைந்த சுவேதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் ராஜ்குமாரை பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 பேரும் தஞ்சமடைந்தனர். அப்போது சுவேதா கொடுத்துள்ள புகார் மனுவில், எனது பெற்றோரால் ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
    • இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாக்கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் கமலி (வயது 22). இவர் பி.எஸ்.சி படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன்ராஜ் (27).

    இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காதல் ஜோடி ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பாதுகாப்பு கேட்டு நேற்று ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இருதரப்பு பெற்றோரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததால் கமலியை அவரது கணவர் மோகன்ராஜ் உடன் அனுப்பி வைத்தனர்.

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் கோவை காதல் ஜோடி இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
    வேலூர்:

    கோவை போடிபாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25) மதுக்கரை குரும்பபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தபு (21) இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் ஷோரூமில் வேலை பார்த்து வந்தனர்.

    அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தனர்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஊரைவிட்டு வெளியேறினர்.

    பெங்களூருவில் திருமணம் செய்துகொண்டு வேலூருக்கு இன்று வந்தனர். இந்த நிலையில் பெண் வீட்டார் அசோக்குமார் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அச்சமடைந்த காதல்ஜோடி இன்று காலை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

    காதல் ஜோடி இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 30). பட்டதாரி வாலிபரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். (வயது 20). இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது பதிவு திருமண விபரம் தெரிய வரவே பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமலைக்கேணியில் திருமணம் செய்து கொண்டனர்.

    தங்களுக்கு பெற்றோர்களால் ஆபத்து ஏற்படும் என்று நினைத்த அவர்கள் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித தடையும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட கல்லூரி காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    திருவள்ளூர்:

    பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி (21). இவர் பொதட்டூர்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட், இறுதியாண்டு படித்து வருகிறார்.

    இவரும் அதே கல்லூரியில் உடன்படிக்கும் புண்ணியம் கிராமத்தை சேர்ந்த சின்ராஸ்(22). என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் திலகவதி வீட்டில் தெரிய வந்தது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

    இதையடுத்து கடந்த 7-ந்தேதி திலகவதியும், சின்ராசும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை பாரிமுனையில் உள்ள பதிவு துறை அலுவலக்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் இருவரும் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரணை நடத்தினார், அப்போது இருவிட்டாரின் பெற்றோர்களை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

    திருவாரூரில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் கணவரை திருமணம் செய்து கொண்ட மாணவி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் சுவேதா (வயது22). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற சுவேதா மீண்டும் திரும்பி வரவில்லை. இது குறித்து குமார் திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சுவேதா தனது காதல் கணவருடன் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது தன்னுடன் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்த நாகை மாவட்டம் கீழ்வேளூரை சேர்ந்த குணசேகரன் மகன் ஆனந்த் என்பவரை காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறினார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் சுவேதா- ஆனந்தின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள வீரலப்பட்டி காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மகள் தீபிகா (வயது23). இவர் எம்.காம்.சி.ஏ. படித்துள்ளார். பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    தொப்பம்பட்டி அருகே தேவத்தூர் கப்பலப்பட்டியை சேர்ந்த கோபி (23). இவர்கள் 2 பேரும் அம்பிளிக்கையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்தனர். அப்போது இவர்களிடையே காதல் ஏற்பட்டது.

    இந்த விசயம் பெற்றோருக்கு தெரியவந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பு பெற்றோரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த காதலர்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் வடகாடு மலைப்பகுதியில் எல்லைக்கருப்பணசாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

    எனினும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு 2 பேரும் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தீபிகா மேஜர் என்பதால் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால் போலீசார் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடிகளை பெற்றோருடன் சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 19). எம்.வி.எம். கல்லூரியில் பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வேடசந்தூர் அடைக்கனூரைச் சேர்ந்தவர் கோபிசரவணன் (21). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    பஸ்சில் செல்லும்போது இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே நேற்று பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    குஜிலியம்பாறை அருகே உள்ள கூம்பூரைச் சேர்ந்தவர் பெருமாள் (23). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் கூம்பூரைச் சேர்ந்த தேன்மொழி (19) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    பெற்றோருக்கு பயந்து நேற்று திருச்சியில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு காதல் ஜோடிகளின் பெற்றோர்களையும் தனத்தனியாக வரவழைத்து சமரசம்பேசி அவர்களை சேர்ந்து வாழ அனுமதிக்கும்படி அனுப்பி வைத்தனர்.

    வாணாபுரம் அருகே திருமணம் பிடிக்காததால் தோழி வீட்டில் மணப்பெண் தஞ்சம் அடைந்தார். பெற்றோர் போலீசில் புகார் செய்ததால் திரும்பி வந்தார்.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கும் செங்கம் தாலுகா கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் ஜீவாவுக்கும் கடந்த 13-ந் தேதி வரகூரில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இரு வீட்டாரும் தடபுடலாக செய்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 12-ந் தேதி இளம்பெண் திருவண்ணர்மலையில் உள்ள பெண்கள் அழகு நிலையத்துக்கு தனக்கு மேக்கப் போடுவதற்காக சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை.

    இதையடுத்து, அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் இல்லை.

    இது குறித்து, பெண்ணின் தந்தை வாணாபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

    இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் என்ன ஆனார்? அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மாயமான பெண் வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறி தோழி வீட்டிற்கு சென்றேன். எனது பெற்றோர் மற்றும் போலீசார் தேடுவதை அறிந்து, நான் வீட்டிற்கு வந்து விட்டேன் என்றார். இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    ×