என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜோடி"
- சுகதேவுக்கும், சுஷ்மா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
- காதலர் தினத்தன்று தனது திருணமத்தை நடத்த திட்டமிட்டார்.
அரவேனு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் செல்வக்குமார்-செல்வராணி தம்பதியர். இவர்களது மகன் சுகதேவ். இவர் இந்தியா ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுஷ்மா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இந்த நிலையில் சுகதேவ் சாதிமறுப்பு திருமணம் முடிவு செய்து, காதலர் தினத்தன்று தனது திருணமத்தை நடத்த திட்டமிட்டார்.
அதன்படி நேற்று கோத்தகிரி மார்க்கெட் திடலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. விழாவுக்கு புஷ்பராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தந்தை பெரியார் திராவிட இயக்க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பங்கேற்று சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதில் கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, விடுதலை சிறுத்ைதகள் கட்சி மாவட்ட செயலாளர் மன்னரசன், மக்கள் அதிகாரம் ஆனந்தராஜ், சி.பி.எம் மணிகண்டன், மணிகண்டராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
- இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாக்கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் கமலி (வயது 22). இவர் பி.எஸ்.சி படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன்ராஜ் (27).
இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காதல் ஜோடி ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு நேற்று ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இருதரப்பு பெற்றோரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததால் கமலியை அவரது கணவர் மோகன்ராஜ் உடன் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்