search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் சாதிமறுப்பு திருமணம் செய்த ஜோடி
    X

    கோத்தகிரியில் சாதிமறுப்பு திருமணம் செய்த ஜோடி

    • சுகதேவுக்கும், சுஷ்மா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
    • காதலர் தினத்தன்று தனது திருணமத்தை நடத்த திட்டமிட்டார்.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் செல்வக்குமார்-செல்வராணி தம்பதியர். இவர்களது மகன் சுகதேவ். இவர் இந்தியா ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுஷ்மா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இந்த நிலையில் சுகதேவ் சாதிமறுப்பு திருமணம் முடிவு செய்து, காதலர் தினத்தன்று தனது திருணமத்தை நடத்த திட்டமிட்டார்.

    அதன்படி நேற்று கோத்தகிரி மார்க்கெட் திடலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. விழாவுக்கு புஷ்பராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தந்தை பெரியார் திராவிட இயக்க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பங்கேற்று சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தார்.

    இதில் கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, விடுதலை சிறுத்ைதகள் கட்சி மாவட்ட செயலாளர் மன்னரசன், மக்கள் அதிகாரம் ஆனந்தராஜ், சி.பி.எம் மணிகண்டன், மணிகண்டராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×