search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணை திருமணம் செய்த தனியார் நிறுவன மேலாளர்
    X

    இளம்பெண்ணை திருமணம் செய்த தனியார் நிறுவன மேலாளர்

    • ரெயில் பயணத்தில் காதல் மலர்ந்தது
    • பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிறிஸ்டியன் காலனியை சேர்ந்தவர் விவேக் (வயது 30). இவர் கோவை யில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தினசரி விவேக் ரெயில் மூலமாக வேலைக்கு வந்து சென்றார். ரெயில் பய ணத்தில் போது இவருக்கு காரமடை வெள்ளியங் காட்டை சேர்ந்த ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அர்ச்சன பிரியா (22) என்பவரும் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் கடந்த 7 மாதங்களாக 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் விவேக்கின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மணப்பெண்ணை தேடி வந்தனர்.

    இதனையடுத்து காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் காதலர்கள் சிறுமு கையில் உள்ள ஒரு கோவி லில் வைத்து திருமணம் செய்தனர்.

    திருமணம் செய்து கொண்ட கையோடு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×