search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதுமண தம்பதி தஞ்சம்
    X

    போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்த புதுமண தம்பதியை படத்தில் காணலாம்.

    கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதுமண தம்பதி தஞ்சம்

    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 பேரும் தஞ்சமடைந்தனர்.
    • சுவேதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் ராஜ்குமாரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்தவர் சுவேதா (வயது 23). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் சுவேதாவுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் ெவவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் விவகாரம் சுவேதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு தடை விதித்ததோடு வேறுஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதிர்ச்சியடைந்த சுவேதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் ராஜ்குமாரை பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 பேரும் தஞ்சமடைந்தனர். அப்போது சுவேதா கொடுத்துள்ள புகார் மனுவில், எனது பெற்றோரால் ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×