search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 பேர் கைது"

    சித்தூர் அருகே பேருந்தில் 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தது குறித்து 7 பேரை கைது செய்த போலீசார் 4 கிலோ நகையை பறிமுதல் செய்தனர்.
    திருப்பதி:

    மும்பையைச் சேர்ந்தவர் தங்க நகை மொத்த வியாபாரி பாவேஷ், தனது ஊழியர்கள் 2 பேரிடம் 15 கிலோ தங்க நகைகளை விற்பனைக்காக கடந்த 8ம் தேதி கொடுத்து அனுப்பியுள்ளார். அவர்கள் அவற்றை விசாகப்பட்டினத்தில் பெங்களூருக்கு பஸ்சில் கொண்டு சென்றார்.

    ஆந்திர மாநிலம். சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் அருகே சென்றதும், அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பயணிகள் உணவு சாப்பிடுவதற்காக பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது, பஸ்சில் நகைப்பைகளில் 9 கிலோ எடை கொண்ட பை ஒன்று மாயமாகியுள்ளது.

    இதானல் அதிர்ச்சியடைந்த அவர்கள், பங்காருபாளையம் போலீஸ் ஸ்டே‌ஷனில் இதுபற்றி புகார் அளித்தனர். அதன் பேரில், 10 பேர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதன் ஒருபகுதியாக பெங்களுர், மும்பை, கடப்பா, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குச் சென்ற போலீசார், நகை கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், தனிப்படை போலீசாரில் ஒரு குழுவினர் சம்பவம் நடந்த இடத்ததை பார்வையிட்டு, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கோமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நகைபையை கும்பல் ஒன்று கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது.

    அதை முக்கிய ஆதாரமாக கொண்டு போலீசார் தொடர் விசாரணை மோற்கொண்டதில், அந்த கும்பல் பலமனேர் பகுதியில் அறை எடுத்து பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், அந்த கும்பலின் தலைவான சிந்துகூடம் பாசுகாலே உள்பட மகாராஷ்டிராவைச் சேர்ந்த 7 பேரை அதிராடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 4 கிலோ 372 கிராம் எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அந்த கும்பலைச் சேர்ந்த 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை விரைவில் கைது செய்து மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    கழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. அவரது வீட்டில் உடனடியாக கழிவறை கட்டிக்கொடுக்க நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். #Toilet
    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இஷானுல்லா குடும்பம் வறுமையில் காணப்பட்டதால் வீட்டில் கழிவறை வசதி கிடையாது. அதனால் குடும்பத்தினர் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.



    இதனால் அவதியடைந்த ஹனீபாஜாரா தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டி தரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தாள். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை. கழிவறை கட்டும்படி தந்தையிடம் தொடர்ந்து போராடி வந்தார்.

    இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கழிவறை கட்டி தருவதாக எழுத்துமூலம் உறுதி பெற்றுத் தரும்படி கோரி தன்னுடைய கைப்பட புகார் மனு எழுதி மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் சென்றார்.



    அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்து அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் அவர், சிறுமியின் தொடர் போராட்டத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு உள்ள உறுதியையும் பார்த்து பாராட்டினார்.

    பின்னர் போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியனை அழைத்து பேசினார். அதைத்தொடர்ந்து சிறுமி, தனது தாயுடன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தார்.

    இந்த நிலையில் சிறுமி ஹனீபாஜாரா தனது வீட்டில் கழிவறை கட்டித்தர எடுத்து வரும் முயற்சி குறித்து அறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டிற்கு உடனடியாக தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் திறந்தவெளியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், அதற்காக அவர் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கும் கலெக்டர் ராமன் பாராட்டு தெரிவித்தார்.

    ஹனீபாஜாரா வீட்டில் உடனடியாக கழிவறை கட்டும் பணியை நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹனீபாஜாராவை கவுரவிக்கும் வகையில் ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவராக அவரை நியமித்து நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டார்.
    சிறுமி ஹனீபாஜாரா புகார் குறித்து தகவலறிந்த கலெக்டர் ராமன் நெகிழ்ச்சியடைந்தார். ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனரை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டுக்கு தனிநபர் கழிவறை கட்டித்தர உத்தரவிட்டார். #Toilet #CollectorRaman
    ஆம்பூர்:

    சிறுமி ஹனீபாஜாரா புகார் குறித்து தகவலறிந்த கலெக்டர் ராமன் நெகிழ்ச்சியடைந்தார். ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனரை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டுக்கு தனிநபர் கழிவறை கட்டித்தர உத்தரவிட்டார்.

    இதற்கான பணிகளை நகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். ஒரு சில நாட்களில் கழிவறை கட்டும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் 2014 அக்டோபர் 2 முதல் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டம் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை இல்லை என்ற மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

    கழிப்பறை வசதி இல்லாத சிறுமியின் வீடு.

    பொதுமக்கள் கழிவறைகளை கட்டாயம் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வீடு வீடாக சென்று கழிப்பறையின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து கிராம புறங்களில் மகளிர் குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம் அதிகளவில் செய்தனர். இதுவரை சுமார் 3 லட்சம் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

    திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து சிறுமிக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை கண்டு கலெக்டர் ராமன் பாராட்டியுள்ளார்.

    இதேபோல கழிவறை மேம்பாடு குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வரவேண்டும் என அவர் கூறியுள்ளார். #Toilet #CollectorRaman
    ஆம்பூரில் வீட்டில் கழிவறை கட்டி தராத தந்தையை கைது செய்யுங்கள் என்று 7 வயது மகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Toilet
    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் இஷானுல்லா. கூலி தொழிலாளி. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இஷானுல்லா கூலி வேலை பார்த்து வருவதாலும், ஏழ்மையில் இருப்பதாலும் வீட்டில் கழிவறை வசதி கிடையாது.

    இதனால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றியும், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஹனீபாஜாராவும் திறந்த வெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மகள் தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டிதரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தார். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை.

    இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்யுங்கள். கழிவறை கட்டி தருவதாக எழுத்து மூலம் உறுதி பெற்றுத் தரும்படி தன்னுடைய கைப்பட எழுதி புகார் மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் சென்றார்.

    அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்து பார்த்தார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் சிறுமியின் மன தைரியத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு உள்ள உறுதியை பார்த்து சிறுமியை பாராட்டினார்.

    தந்தை மீது புகார் அளித்த மகள், தாயாருடன் இருப்பதை படத்தில் காணலாம்.

    பின்னர் சிறுமியின் பெற்றோரை அழைத்து பேசினார். இதுகுறித்து ஆம்பூர் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சிறுமியின் பெற்றோர் மனு அளித்தால் அரசு திட்டத்தின் மூலம் கழிவறை கட்டி தருவதாக கூறினார்.

    அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். அதன்பேரில் நகராட்சி துப்புரவு அலுவலர் பாஸ்கர் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு, அரசு திட்டத்தின் மூலம் கழிவறை கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    கழிவறை இல்லாத காரணத்தால் தந்தையின் மீது 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.  #Toilet
    பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். #MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested
    சென்னை:
     
    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி இன்று கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
     
    இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    அதன்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கவர்னர் மாளிகையின் அருகே சைதாப்பேட்டை சின்னமலை அருகே இன்று காலை ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் மறுத்து வருவது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது. கண்டிக்கத்தக்கது. உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.



    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள், இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். விடுதலை செய், விடுதலை செய், 7 பேரையும் விடுதலை செய் உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் வைகோ மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். #MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested #Rajivmurder #Rajivmurderconvicts
    தானும் தனுசும் சிறுவயதில் வறுமையால் வாடியதை பற்றி இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #Dhanush #selvaraghavan
    காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என வெற்றிப் படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவில் செல்வராகவனுக்கு என தனியிடம் இருக்கிறது.

    தற்போது இவர் சூர்யா நடிப்பில் என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார். தனது மற்றும் தனது தம்பி தனுஷின் சிறுவயது பற்றி டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, “கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். இருவேளை உண்டால் அரிது.

    அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயினும் சமூகம் கேலி செய்யும். நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என. எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்” என தெரிவித்துள்ளார்.

    செல்வராகவனின் இந்தப் பதிவால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு ஆதரவாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அவர்கள் பதில் அளித்து வருகின்றனர். #Dhanush #selvaraghavan
    அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. #7magnitude #Alaskaearthquake
    வாஷிங்டன்:

    கனடா நாட்டின் வடமேற்கில் உள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் அந்நாட்டு மக்களில் அதிகமானவர்கள் வாழும் இடமாக அறியப்படுகிறது.

    இந்நிலையில், இம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் (இந்திய நேரப்படி) பின்னிரவு சுமார் 12 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 7 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.



    இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் சில மணி நேரத்துக்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. #7magnitude #Alaskaearthquake 
    மேற்கு வங்காளத்தில் விஷ சாராயம் குடித்த பழங்குடி இனத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Liquor #WestBengal
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள சாந்திப்பூர் என்கிற பகுதியில் வசித்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த பலர் நேற்று முன்தினம் இரவு விஷ சாராயம் குடித்தனர். அடுத்து சில மணி நேரங்களில் அவர்களுக்கு வாந்தி, பேதி போன்ற உபாதைகள் ஏற்பட்டது.

    உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 60 வயது மூதாட்டி ஒருவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.
    தந்தை பெரியார் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவு நாளான டிசம்பர் 24-ந்தேதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். #Sathyaraj #RajivGandhiAssassinationCase
    விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா மேடவாக்கத்தில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றில் கொண்டாடப்பட்டது.

    நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்குக் கல்வி உதவிகளை வழங்கினார். பின்னர் அங்குள்ள குழந்தைகளுடன் சிலம்பம் சுற்றி மகிழ்ந்தார்.

    நிகழ்ச்சிக்கு பின் சத்யராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    தந்தை பெரியார் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவு நாளான டிசம்பர் 24-ந்தேதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து, தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

    அதை கூடிய விரைவில் நிறைவேற்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஒரு சாதாரண மனிதனாக எனது உணர்வுகளை இந்த அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sathyaraj #RajivGandhiAssassinationCase

    பாகிஸ்தானில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். #PakistanViolence #CricketDispute
    பெஷாவர்:

    பாகிஸ்தானில் வன்முறைகள் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் அபோதாபாத் மாவட்டத்தில் நேற்று சிறுவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கிரிக்கெட் விளையாடியபோது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை அவர்களின் பெற்றோர்களின் காதுக்கு எட்ட, அவர்கள் காவல் உதவி மையம் அருகே திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரிடையே கடும் மோதல் வெடித்தது.

    அப்போது இரு தரப்பினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

    காவல் உதவி மையம் அருகில் நடந்த இந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #PakistanViolence #CricketDispute
    அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணி அந்தமான் நிகோபார் தீவில் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #AmericanTourist #NorthSentinelIslan
    அந்தமான்:

    அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (வயது 27) என்பவர் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சுற்றுலா வந்திருந்தார். கடந்த சனிக்கிழமையன்று உள்ளூர் மீனவர் ஒருவருடன் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற அவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரை அங்குள்ள பழங்குடியின மக்கள் கொன்றிருக்கலாம் என தெரிகிறது.



    வடக்கு சென்டினல் தீவில் பாதுகாக்கப்பட்ட சென்டினலிஸ் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் வெளியுலகம் அறியாதவர்கள் என்பதால், அன்னியர்கள் யாராவது வந்தால் அவர்களை தாக்குகிறார்கள். குறிப்பாக வில் அம்புகள் மூலம் நெருப்பை பற்ற வைத்து வெளிநபர்களை தாக்கி கொன்றுவிடுவார்கள். அதனால் அங்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடையை மீறி உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் ஜான் ஆலன் அங்கு சென்றபோது தாக்கப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜான் ஆலன் அந்த தீவுக்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்த மீனவர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. #AmericanTourist #NorthSentinelIsland
    ஒடிசா மாநிலம், கட்டக் மாவட்டத்தில் இன்றிரவு ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். #Mahanadibridge #7deadinCuttack #Cuttackbusaccident #Odishabusaccident
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம், கட்டக் மாவட்டத்தில் சுமார் 30 பயணிகளுடன் சென்ற ஒரு பேருந்து இன்றிரவு  ஜகத்பூர் அருகே மஹாநதி ஆற்றுப்பாலத்தின் வழியாக வந்தபோது பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து கீழே விழுந்தது.



    இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். #7dead  #Mahanadibridge #7deadinCuttack #Cuttackbusaccident #Odishabusaccident
    ×