search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aressted"

    • திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது அம்பலம்
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சின்னபுதூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு சாலையூரை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    சம்பவத்தன்று சிறுமி தனது தாயிடம் மேட்டுப்ப ளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அங்கு சென்ற வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். கோவிலுக்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரை அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடினார்.

    ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சிறுமியின் தாய் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்கு சென்ற 15 சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக போலீஸ் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்பட்டது.
    • சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

    ஊட்டி

    கூடலூர் அருகே மசினகுடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்துபோலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மசினகுடி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 25) என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமானது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தார்.

    பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். #MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested
    சென்னை:
     
    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி இன்று கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
     
    இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    அதன்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கவர்னர் மாளிகையின் அருகே சைதாப்பேட்டை சின்னமலை அருகே இன்று காலை ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் மறுத்து வருவது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது. கண்டிக்கத்தக்கது. உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.



    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள், இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். விடுதலை செய், விடுதலை செய், 7 பேரையும் விடுதலை செய் உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் வைகோ மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். #MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested #Rajivmurder #Rajivmurderconvicts
    ×