search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 state election"

    • மிசோரம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.
    • வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.

    ராய்ப்பூர்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:

    சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா டுடே: பாஜக 36-40, காங்கிரஸ் 40-50

    இந்தியா டிவி: பாஜக 30-40, காங்கிரஸ் 46-56

    ஆஜ் தக்: பாஜக 36-46, காங்கிரஸ் 40-50

    ஜன் டிவி பாஜக: 34-45 காங்கிரஸ் 42-53

    இதையடுத்து, சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலைப் பிடித்துள்ளது என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    • ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது.
    • அன்று பதிவான வாக்குகள் வரும் 3-ம் தேதி எண்ணப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளைக் கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 25-ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வந்தனர். ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 5 மாநில தேர்தலில் பாஜகவால் எங்கும் ஆட்சி அமைக்க முடியாது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய எக்சிட் போல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.
    • நாளை வரை 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநித்தில் தேர்தலின்போது வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் மக்களுக்கு, இலவசமாக பைக் சேவையை வழங்க உள்ளதாக ரேபிடோ நிறுவனம் அறிவித்துள்ளது.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில், வாக்களிப்பை அதிகரிக்கவும், பொது மக்களின் சிரமங்களை குறைக்கவும் ஐதராபாத்தில் உள்ள மையங்களுக்கு இந்த சேவையை வழங்க உள்ளதாக இணை நிறுவனர் பவன் குண்டுபலி தகவல் தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
    • 3 மணி நிலவரப்படி 55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வந்தனர்.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

    வாக்குப்பதிவின் முதல் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். காலை 11 மணிக்குள் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    தொடர்ந்து, 3 மணி நிலவரப்படி 55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பின்னர், 5 மணி நிலவரப்படி 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள்.
    • ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

    வாக்குப்பதிவின் முதல் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். காலை 11 மணிக்குள் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    • காங்கிரஸ் ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை.
    • குர்ஜார் சமூக மக்களுக்கு காங்கிரஸ் அரசு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

    ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் இன்று காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற பா.ஜனதா சதி செய்கிறது. மஹாதேவ் சூதாட்ட செயலியும், சிவப்பு டைரி விவகாரமும் பா.ஜனதாவால் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு விவகாரங்களும் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியால் விசாரிக்கப்பட வேண்டும்.

    ராஜேஷ் பைலட் குறித்து பேசுவதன் மூலம் குர்ஜார் சமூக மக்களை பிரதமர் மோடி தூண்டிவிட முயற்சிக்கிறார். பா.ஜனதா ஆட்சியில் இட ஒதுக்கீடு கேட்டு போராடிய குர்ஜார் சமூகத்தை சேர்ந்த 72 பேர் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தனர். இன்று அந்த சமூக மக்களுக்கு ஆதரவாக இருப்பது போல் பா.ஜனதாவினர் பேசி வருகின்றனர்.

    ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை. குர்ஜார் சமூக மக்களுக்கு காங்கிரஸ் அரசு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

    சதி கோட்பாடுகளை உருவாக்கி மக்களை தவறாக வழி நடத்துவதன் மூலம் தேர்தலில் வெற்றிபெற பா.ஜனதா நினைக்கிறது.

    இவ்வாறு அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    • காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தினர்.
    • காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    ஜெய்ப்பூர்:

    5 மாநில சட்டசபை தேர்தல்களில் மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் கடந்த 7-ந்தேதியும், 230 இடங்களை கொண்ட மத்திய பிரதேசத்துக்கு கடந்த 17-ந்தேதியும் ஓட்டுப்பதிவு நடந்தது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் 7 மற்றும் 17-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு நாளை மறுநாள் (25-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறுகிறது.

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இதையொட்டி காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தினர்.

    பிரதமர் நரேந்திர மோடி பில்வாரா, துர்காபூரில் தேர்தல் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். தோல்பூர், பரக்பூர் மாவட்டங்களில் அவர் பிரசாரம் செய்தார். காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் இன்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்க்க ஒரு அபசகுனம் பிடித்த நபர் வந்தார்.
    • ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தல்.

    மத்திய பிரதசேம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கிய தேர்தல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்த நிலையில், வரும் 25ம் தேதி ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிரசாரங்கள் மூலம் தீவிரம் காட்டி வருகின்றனர். 

    அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், மோடி ஒரு அதிர்ஷ்டமில்லாதவர். இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லாததற்கு பிரதமர் மோடி நேரில் சென்றதே காரணம் என்று சூசகமாக கூறினார்.

    பிரசாரத்தின்போது ராகுல் காந்தி கூறுகையில்,"உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்க்க ஒரு அபசகுனம் பிடித்த நபர் வந்தார். அவர் வருவதற்கு முன்பு வரை இந்தியா வெற்றி பெறும் நிலையில்தான் இருந்தது.

    அவர் எப்போதாவது தொலைக்காட்சியில் தோன்றி இந்து முஸ்லிம் என பேசிக் கொண்டிருப்பார். திடீரென கிரிக்கெட் பார்க்க நேரில் செல்வார். ஆனால், நிச்சயம் இந்திய அணி தோற்றுவிடும். அவர் அப்படிப்பட்ட அபசகுனம் பிடித்தவர்" என்று குறிப்பிட்டிருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், ராகுல் காந்தியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பாகஜ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாஜக தலைவர் ரவிங்கர் பிரசாத் கூறுகையில்," ராகுல் காந்தி உங்களுக்கு என்ன ஆயிற்று? தோல்வியின் விரக்தியின் காரணமாக நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு நாட்டின் பிரதமருக்கு எதிராக அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.

    நமது வீரர்கள் சிறப்பாக விளையாடினர். விளையாட்டில் தோல்வியும் வெற்றியும் இருக்க தான் செய்யும். ராகுல் காந்தி பேசியது கண்டனத்திற்குரியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.

    • மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • சத்தீஸ்கரில் 2-ம் கட்டமாக 70 தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் வாக்குச்சாவடி வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

    இதேபோல், சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது.

    இந்நிலையில், சத்தீஸ்கரில் இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அங்கு 70.60 சதவீத வாக்குகள் பதிவாகின.

    மத்திய பிரதேசத்தில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • சத்தீஸ்கரில் மாலை 5 மணி நிலவரப்படி 67.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
    • மத்திய பிரதேசத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 71.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இதில், சத்தீஸ்கரில் இன்று பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 38.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, சத்தீஸ்கரில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி அங்கு 55.31 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 67.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பின்னர், சத்தீஸ்கரில் 2ம் கட்டமாக 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், மத்திய பிரதசேம் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 71.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    முன்னதாக, மத்திய பிரதேசத்தில் பகல் 1 மணி நிலவரப்படி 45.40 சதவீத வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.52 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் காலையிலேயே வாக்குச்சாவடி வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    இதேபோல், சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இந்நிலையில், சத்தீஸ்கரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 38.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், மத்திய பிரதேசத்தில் பகல் 1 மணி நிலவரப்படி 45.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    சத்தீஸ்கரில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி அங்கு 55.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், மத்திய பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • 45 எஸ்.டி, 35 எஸ்.சி. தொகுதிகள் உள்பட 230 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • 230 தொகுதிகளில் 2533 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 252 பேர் பெண்கள்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் காலையிலேயே வாக்குச்சாவடி வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    காலை 9 மணி நிலவரப்படி 10.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 45 எஸ்.டி, 35 எஸ்.சி. தொகுதிகள் உள்பட 230 தொகுதிகளில் 2,533 வேட்பாளர்கள் போட்டியிடுகிறாரக்ள். இவர்களில் 252 பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தினர் ஆவார்கள்.

    நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் பகுதிகளில் மதியம் 3 மணி வரை தேர்தல் நடைபெறும். மற்ற இடங்களில் மாலை 6 மணி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    பொதுமக்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் 64,626 வாக்குச்சவாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் 2,87,82,261 , 2,71,99,586 என மொத்தம் 5,60,58,521 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

    ×