search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajasthan Assembly Elections"

    • ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது.
    • அன்று பதிவான வாக்குகள் வரும் 3-ம் தேதி எண்ணப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளைக் கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 25-ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வந்தனர். ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 5 மாநில தேர்தலில் பாஜகவால் எங்கும் ஆட்சி அமைக்க முடியாது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய எக்சிட் போல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
    • 3 மணி நிலவரப்படி 55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வந்தனர்.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

    வாக்குப்பதிவின் முதல் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். காலை 11 மணிக்குள் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    தொடர்ந்து, 3 மணி நிலவரப்படி 55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பின்னர், 5 மணி நிலவரப்படி 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • ராஜஸ்தானில் அடுத்த மாதம் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் இங்கு மீண்டும் வென்றால் கியாஸ் சிலிண்டர் ரூ.500 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவித்தது.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    அங்கு ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரசும், அதிகாரத்தைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் மாநில தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் நேற்று காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார்.

    முதல் மந்திரி அசோக் கெலாட் பங்கேற்று பேசுகையில், கிரகலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இது பல தவணைகளாக வழங்கப்படும். 1.05 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

    மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

    ×