search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்: காங்கிரஸ் வாக்குறுதி
    X

    மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்: காங்கிரஸ் வாக்குறுதி

    • ராஜஸ்தானில் அடுத்த மாதம் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் இங்கு மீண்டும் வென்றால் கியாஸ் சிலிண்டர் ரூ.500 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவித்தது.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    அங்கு ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரசும், அதிகாரத்தைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் மாநில தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் நேற்று காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார்.

    முதல் மந்திரி அசோக் கெலாட் பங்கேற்று பேசுகையில், கிரகலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இது பல தவணைகளாக வழங்கப்படும். 1.05 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

    மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×