search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்தீஸ்கரில் 70.60, ம.பி.யில் 74 சதவீத வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்
    X

    சத்தீஸ்கரில் 70.60, ம.பி.யில் 74 சதவீத வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

    • மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • சத்தீஸ்கரில் 2-ம் கட்டமாக 70 தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் வாக்குச்சாவடி வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

    இதேபோல், சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது.

    இந்நிலையில், சத்தீஸ்கரில் இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அங்கு 70.60 சதவீத வாக்குகள் பதிவாகின.

    மத்திய பிரதேசத்தில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×