search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேமந்த் சோரன்"

    • 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.600 கோடி மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரியும் ஜே.எம்.எம். கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது.

    இதனை தொடர்ந்து தனது முதல் மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்தார். புதிய முதல் மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார். அவர் 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் தடுக்க ஜே.எம்.எம். கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஐதராபாத் அழைத்துவரப்பட்டனர் அவர்கள் அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 4 எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறார். வருகிற 5-ந் தேதி வரை ஜார்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    5-ந் தேதி தனி விமான மூலம் அவர்களை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று ஜார்கண்ட் மாநில எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள சொகுசு விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    • காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி.
    • சிறையில் வைத்தே அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டம்.

    நிலம் தொடர்பான முறைகேடான பண பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது.

    நேற்று அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சோரணை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

    இந்த நிலையில் ஹேமந்த் சோரணை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதை விசாரித்த நீதிமன்றம், ஹேமந்த் சோரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.

    இதையடுத்து அவரிடம் சிறையில் வைத்தே அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • ஜார்கண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு நாள் காவிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹேமந்த் சோரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெற்றது. அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கலாமே? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    அதற்கு ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான கபில் சிபல், முதல்வர் தொடர்பான பிரச்சினை என்பதால் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகினோம் என்றார்.

    அதற்கு  நீதிமன்றங்கள் அனைவருக்கு திறந்திருக்கும். உயர்நீதிமன்றம் அரசியலமைப்பு நீதிமன்றம். ஹேமந்த் சோரன் தொடர்பான மனுவை விசாரிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. அவர் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

    இதற்கிடையே ஜார்கண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹேமந்த் சோரன் ஒரு நாள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    • சவப்பெட்டியில் ஆணி அடிப்பது போன்று இருக்கிறது.
    • அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு 48 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ள போதிலும், ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருக்கிறது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், ஜெ.எம்.எம். கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பாய் சோரனுக்கு ஆதரவாக நிற்கும் வீடியோவை பதிவிட்டு ஆளுநரின் செயல் இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிப்பது போன்று இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், "81 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு 41 பேரின் ஆதரவே போதுமானது. ஆனால் 48 பேரின் ஆதரவை கொண்ட சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருக்கும் செயல் அரசியலமைப்பை அவமதிப்பதோடு, பொது ஆணையை மறுப்பதற்கு சமம். ஆளுநர்களால் இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்படுகிறது," என்று மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

    • அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    • சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    ராஞ்சி:

    ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சோரன் கொண்டுவரப்பட்டார்.

    ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இதற்கிடையே, சம்பாய் சோரன் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், கடந்த 18 மணி நேரமாக மாநிலத்தில் அரசு செயல்படவில்லை. நீங்கள் விரைவில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, மாநிலத்தைக் குழப்பத்திலிருந்து விடுவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சம்பாய் சோரன் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களையும் அளித்தார்.

    • ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    ராஞ்சி:

    ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சோரன் கொண்டுவரப்பட்டார்.

    இதற்கிடையே, ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், சம்பாய் சோரன் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    தற்போது கடந்த 18 மணி நேரமாக மாநிலத்தில் அரசு செயல்படவில்லை. இங்கு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக இருப்பதால் நீங்கள் விரைவில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, மாநிலத்தைக் குழப்பத்திலிருந்து விடுவிப்பீர்கள் என நாங்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில மக்கள் எதிர்பார்க்கிறோம்.

    மேலும், தம்மை ஆதரிக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்று பெரும்பான்மை ஆதரவு இருப்பதை உறுதிசெய்ய முடியும் என தெரிவித்தார்.

    • ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் நேற்று கைது செய்யப்பட்டார்.
    • ஹேமந்த் சோரன் கைதுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

    சென்னை:

    ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கைதுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பா.ஜ.க.வின் தந்திரங்களால் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கமுடியாது. புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு பழங்குடித் தலைவரை துன்புறுத்துவது கீழ்த்தரமான செயல்.

    இந்தச் செயல் பா.ஜ.க.வின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தூண்டுகிறது. பா.ஜ.கவின் பழிவாங்கும் அரசியலுக்கு ஹேமந்த் சோரன் அடிபணியாமல் உறுதியாக இருக்கிறார். பா.ஜ.கவின் மிரட்டல்களை எதிர்த்துப் போராடும் ஹேமந்த் சோரனின் உறுதிப்பாடு உத்வேகம் தருகிறது என பதிவிட்டிருந்தார்.

    ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2000 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் ஜார்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி 3 முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
    • பா.ஜ.க.வின் ரகுபர்தாஸ் மட்டும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார்.

    இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலம் கனிம வளங்கள் நிறைந்த ஒரு மாநிலம் ஆகும். இங்கு ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. ஜார்கண்ட் சுரங்கங்களின் மாநிலம் என அழைக்கப்படுகிறது.

    இருந்த போதிலும் அரசியலில் இந்த மாநிலம் ஒரு கண்ணி வெடியாக உள்ளது. 23 ஆண்டுகால வரலாற்றில் 12 முதல்- மந்திரிகளையும், 3 முறை ஜனாதிபதி ஆட்சியையும் இந்த மாநிலம் கண்டுள்ளது. ஜார்கண்ட் மாநில முதல் மந்திரிகள் சராசரியாக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்துள்ளனர்.

    சுயேட்சை வேட்பாளரை முதல்-மந்திரியாக கொண்ட மாநிலம் என்ற சிறப்பையும் இதுபெற்று உள்ளது. அந்த முதல்வர் 2 ஆண்டுகள் நீடித்தார்.

    எல்லாவற்றிலும் மிகவும் ஆச்சரியமானது சிபுசோரனின் கதை.

    பீகாரில் இருந்து ஜார்கண்ட் தனிமாநிலம் உருவாக்கப்படுவதில் மிக முக்கியமான தலைவராக கருதப்படுகிறார் சிபு சோரன். முதல்-மந்திரியாக பதவியேற்றவுடன் அந்த நாற்காலியில் 10 நாட்கள் மட்டுமே அவரால் அமர முடிந்தது.

    'குருஜி' என்று குறிப்பிடப்படும் சிபுசோரன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். இவர் நிலமோசடியில் அமலாக்கத்துறையால் பதவி விலகிய முன்னாள் முதல்- மந்திரி ஹேமந்த் சோரனின் தந்தை ஆவார்.

    அரசியல் ஸ்திரமின்மை மற்றும் ஆட்சி மாற்றங்களால் அடையாளப்படுத்தப்பட்ட மாநிலமான ஜார்கண்ட் தற்போது 12-வது முதல்- மந்திரியை பெற்று உள்ளது.

    2000-ம் ஆண்டு நவம்பர்-15 ல் ஜார்க்கண்ட் மாநில அந்தஸ்தை பெற்றதில் இருந்து பார்த்த அரசியல் ஓட்டத்தின் ஒரு பகுதி ஹேமந்த் சோரன்.

    இவரும் அவரது தந்தை சிபுசோரனைப் போலவே, ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கைது செய்யப்பட்ட 3-வது முதல்- மந்திரி ஆவார்.

    2000 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் ஜார்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி 3 முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. பா.ஜ.க.வின் பாபுலால் மராண்டி ஜார்கண்ட் முதல் மந்திரியாக 2 ஆண்டு 3 மாதங்கள் அதிகாரத்தில் இருந்தார்.

    அர்ஜுன் முண்டா, சிபுசோரன், மதுகோடா, ஹேமந்த் சோரன் 2000 மற்றும் 2024-ம் ஆண்டுகளுக்கு இடையில் 15 மாதங்கள் சராசரியாக ஆட்சியில் இருந்தனர்.

    ஜார்கண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஜனாதிபதி ஆட்சி 3 முறை மொத்தம் 645 நாட்கள் அமலில் இருந்து உள்ளது.

    பா.ஜ.க.வின் ரகுபர்தாஸ் மட்டும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார்.

    2014-க்குப்பிறகு ஜார்கண்ட் நிலையானதாக மாறியது. 2019-ல் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். 2019- சட்டசபை தேர்தலுக்கு பின்னர், பா.ஜ.க.வின் அர்ஜுன் முண்டா மத்திய அரசில் பணிபுரிய டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

    ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு ஜேஎம்எம், காங்கிரஸ் மற்றும் 3 கட்சிகளால் அமைக்கப்பட்டது.

    ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டு காலத்தை முடிக்க பெரும்பாலான நாட்கள் இருந்தாலும், ஹேமந்த் சோரன் முழு 5 ஆண்டு ஆட்சியை முடிக்க முடியாத முதல்-மந்திரியின் நீண்ட பட்டியலில் இணைந்து உள்ளார்.

    • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் காவல்துறையினர் ஊழல் வழக்குகளை விசாரிப்பதில்லை.
    • அப்படி விசாரித்திருந்தால் ஊழல் நடைபெற்றதை கண்டு பிடித்திருப்பார்கள்.

    அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவை எதிர்க்கட்சி தலைவர்கள் குறிவைத்து சோதனையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

    நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று விசாரணைக்கு ஆஜராக சரத் பவார் கட்சியின் எம்.எல்.ஏ.-வும், அவரது உறவினருமான ரோகித் பவாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ரோகித் பவார் ஏற்கனவே அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி பதில் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் நிலை குறித்து பா.ஜனதா எம்.பி. ஜெயந்த் சின்ஹா கூறுகையில் "எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. உண்மை என்னவென்றால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதில்லை. அவர்கள் விசாரணை நடத்தியிருந்தால், ஊழல் நடத்திருப்பதை கண்டு பிடித்திருப்பார்கள்" என்றார்.

    • ஏழுமணி நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
    • ஹேமந்த் சோரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு மணி நேர விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். இதற்கிடையில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    நேற்றிரவு கைது செய்யப்பட்டதும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இது ஒரு பிரேக். வாழ்க்கை ஒரு மிகப்பெரிய போர். ஒவ்வொரு கணமும் நான் போராடினேன். ஒவ்வொரு கணமும் போராடுவேன். ஆனால், சமரசம் செய்ய மண்டியிடமாட்டேன். வெற்றியோ, தோல்வியோ நான் பயப்படமாட்டேன். நான் தோல்வியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ஏழு மணி நேர விசாரணைக்குப்பின் ஹேமந்த் சோரன் கைது.
    • சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். நேற்று இவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் ஏழு மணி சோதனைக்குப்பின் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக நேற்றிரவு அவசரமாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறது. பொறுப்பு தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி அனுபா ராவத் சவுத்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்கிறது.

    ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரும் ராஜினாமா செய்து கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற தலைவராக சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியமைக்க உரிமைக்கோரியும் ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.

    இதனால் சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    • முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
    • சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

    ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் சோரன் கொண்டுவரப்பட்டார். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பாய் சோரன் பற்றிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

    81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி துவங்கப்பட்ட காலத்தில் இருந்து, ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுடன் கட்சியில் இருந்து வருபவர் சம்பாய் சோரன்.

    தற்போது ஜார்கண்ட் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பழங்குடியினர், பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர், நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். சம்பாய் சோரனின் தந்தை சிமல் சோரன் விவசாயி ஆவார். இவர் சரைகேளா கார்சவான் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

    "எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பா.ஜ.க. அரசு மத்திய அமைப்புகளை கொண்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைக்க நினைக்கிறது. ஆனால், நாங்கள் அதற்கு இடம்கொடுக்க மாட்டோம்," என சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். 

    ×