search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை நிறுத்தம்"

    • வேலை நிறுத்தம் என ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் ஒருமனதாக முடிவு.
    • வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தும்.

    பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக இரு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் என ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளன.

    வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்கத்தை சேர்ந்த சவுந்தரராஜன் கூறுகையில், "8 வருட கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து உரிய பதில் வராததால் வரும் 9ம் தேதி முதல் ஸ்டிரைக்" என என்றார்.

    • பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கொடுக்கக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது.
    • இரவு திறக்கமாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பம்புகளில் யாருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கொடுக்கக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது. இதனை செயல்படுத்தும் போது இரவு நேரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுடன் எரிபொருள் கேட்டு வருபவர்களுக்கும், பெட்ரோல் பங்க் நிறுவனத்தினருக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த விஷயத்தில் சில நேரம் ஊழியர்கள் தாக்கப்படுவதாகவும் இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் பெட்ரோலிய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் அரசு இது குறித்து எந்த முடிவும் எடுக்காததை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக கூட்டமைப்பு அறிவித்தது.

    அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை (1-ந்தேதி) காலை 6 மணி வரை கேரளாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டர்களால், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும், இந்த அவலத்திற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இந்த விஷயம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் பம்புகள் செயல்படும். இரவு திறக்கமாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    இன்று பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 14 யாத்ரா எரிபொருள் விற்பனை நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையங்கள் கிழக்கு கோட்டை, விகாஸ்பவன், கிளமானூர், சடையமங்கலம், பொன்குன்னம், சேர்த்தலா, மாவேலிக்கரா, மூணாறு, மூவாட்டுபுழா, பரவூர், சாலக்குடி, திருச்சூர், குரு வாயூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் செயல்படுகின்றன.

    • வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    குளச்சல்:

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றன.

    இதில் செல்லும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள், குளச்சல் துறைமுகத்தில் ஏலம் விடப்படும். இதனை ஏலம் எடுக்க ஏலதாரர்களும் வியாபாரிகளும் துறை முகத்தில் குவிவதுண்டு.

    நேற்றும் அவர்கள் அங்கு திரண்டனர். அப்போது 3 விசைப்படகுகள் மீன்களுடன் வந்தன. அவற்றில் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்கள் இருந்தன. இதனை பார்த்த ஏலதாரர்கள் அந்த மீன்களை எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 3 விசைப் படகுகளில் இருந்த மீன்களும் இறக்கப்பட வில்லை,

    இந்த நிலையில் இன்று குளச்சல் துறைமுக வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை இறக்க அனுமதி அளிக்க கூடாது, சாவாளைமீன்களை பிடித்து நேரடியாக கோழித்தீவன நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டம் காரணமாக குளச்சல் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையில் வேறு சில விசைப்படகுகள், மீன்களுடன் இன்று குளச்சல் துறைமுகம் வந்தன. ஆனால் போராட்டம் காரணமாக அவற்றில் இருந்தும் மீன்கள் இறக்கப்படவில்லை.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குளச்சல் துறைமுகத்தில் டண் கணக்கில் மீன்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் சுமார் ரூ.3 கோடி ரூபாய் வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • திருமங்கலத்தில் வேலை நிறுத்த போராட்டம் குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் வாக்கெடுப்பு நடந்தது.
    • 3 நாட்கள் தென்னக ெரயில்வே முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமங்கலம்

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வு திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம், பேரணி என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டது. போராட்டத்தின் எதிரொலியாக மத்திய அரசு கமிட்டி ஒன்றை அமைத்து கோரிக்கை குறித்த பரிசீலனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ-ஏ.ஐ.ஆர்.எப். தொழிற்சங்கம் சார்பில் ரெயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபடுவதாக முடி வெடுக்கப்பட்டது.

    அந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் உறுப்பினர்கள் மன நிலையை அறிய ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று திருமங்க லத்தில் ெரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. மதுரை கோட்ட செயலாளர் எஸ்.எம்.ரபீக் வழிகாட்டு தலின் பேரில் சிவகாசி கிளை பொறுப்பாளர் ஜோதிராஜா, கிளைச் செய லாளர் ஹரிநாராயணன், பொருளாளர் முத்துவேல், உதவிச் செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் முன்னிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    மதுரை அழகப்பன் நகர் ெரயில்வே கேட்டில் இருந்து விருதுநகர் வரை உள்ள ெரயில்வே நிலையங்கள் ெரயில்வே கேட் பகுதியில் பணியாளர்களிடம் அலுவலர்களிடம் கருத்து கேட்பு எஸ்.ஆர்.எம்.யூ.தொழிற்சங்கத்தினர் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 3 நாட்கள் தென்னக ெரயில்வே முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தூய்மை பணியாளர்கள் 150 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
    • இதனால் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள கண்டோன்மென்ட் பகுதி மத்திய ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இப்பகுதிகள் 7 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 150 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பள உயர்வு கோரி ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்ததால் 8 ஊழியர்களை ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்துள்ளார். இதனை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

    • வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் திருச்சி குட்ஷெட் சாலையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    திருச்சி

    வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து

    திருச்சி மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கதலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு போக்குவரத்து லேபர் யூனியன் மாநில பொருளாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் திருச்சி குட்செட் யார்டு வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தன்ராஜ், அருணகிரி, செல்வம், குழந்தைவேல், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி குட்ஷெட் சாலையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக காய்கறி சிமெண்ட் இரும்பு போன்ற பொருட்கள் தேக்கமடைந்துள்ளது.

    • லாரிகளுக்கான பசுமை வரியை ரூ.500-ல் இருந்து, 750 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
    • மாவட்டத்தில் 2,500 லாரிகள் இன்று ஓடவில்லை.

    கோவை,

    தமிழக அரசு கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி கோவையிலும் கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோவையில் 2,500 லாரிகள் ஓடவில்லை.

    இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன், செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் இயங்கி வந்தன. ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட தொழில் நெருக்கடி மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க கட்டணம் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. தற்போது 2.50 லட்சம் எண்ணிக்கையிலான லாரிகள் மட்டுமே இயங்குகின்றன.

    லாரி தொழில் நாளுக்கு நாள் அழிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் லாரிகளுக்கான பசுமை வரியை ரூ.500-ல் இருந்து, 750 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

    அத்துடன் லாரிகளுக்கான காலாண்டு வரியில் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்யக் கோரியும், மாநில அரசு தெரிவித்துள்ள 32 கால பதிவான சுங்க சாவடிகளை அகற்ற கோரியும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம். அதன்படி, மாவட்டத்தில் 2,500 லாரிகள் இன்று ஓடவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அடையாள உண்ணாவிரதம் மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் பகுதியில் நடை பெற்றது.
    • லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக 80 சதவீத லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    திருவொற்றியூர்:

    டிரைலர் உரிமையாளர்கள், மற்றும் அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் என மொத்தம் 37 சங்கங்கத்தினர் 40 சதவீத சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய பார்க்கிங் யார்டு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

    இதையொட்டி அடையாள உண்ணாவிரதம் மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் பகுதியில் நடை பெற்றது.

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று 80 சதவீத லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே டிரைலர் லாரி டிரைவர்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த காளி, ஆசைத்தம்பி ஆகியோர் டிரைவர் உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் போராட்டம் அறிவித்திருப்பதால் வெளியூர் டிரைவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கால கட்டத்தில் போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு பண்டிகை காலம் முடிந்த பின் போராட்டம் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இதே போல் பல்வேறு தரப்பிலும் தீபாவளியையொட்டி போராட்டம் வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்ததால் நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக டிரைலர் உரிமையாளர் சங்க நிர்வாகி எம்.எம். கோபி தெரிவித்தார்.

    இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் டிரைலர் லாரிகள் வழக்கம்போல் ஓடத் தொடங்கின.

    • தொழில் மூலம் நேரடியாக மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
    • தினமும் 60 கோடி ரூபாய் மதிப்பினாலான உற்பத்தி வருவாயும் பாதிக்கப்படும்.

    கோவை:

    தமிழகத்தில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் 600-க்கும் மேற்பட்ட ஒபன் எண்ட் நூற்பாலைகள் இயங்கி வருகிறது.

    அதிலும் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 400 ஆலைகள் உள்ளன.ஒபன் எண்ட் நூற்பாலைகளில் இருந்து தினமும் 25 லட்சம் கிரே நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இதுதவிர பிளாஸ்டிக் பாட்டில், பனியன் கம்பெனி கழிவுகளில் இருந்து தினமும் சுமார் 15 லட்சம் கலர் நூல்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தொழில் மூலம் நேரடியாக மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மூலப் பொருட்கள் விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு, கழிவு பஞ்சின் விலையை குறைக்க வலியுறுத்தி, இன்று முதல் ஒபன் எண்ட் மில்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒபன் எண்ட் மில்களும் இன்று மூடப்பட்டிருந்தது. அங்கு அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது.

    இந்த போராட்டமானது வருகிற 30-ந் தேதி வரை நடக்க உள்ளதாக நூல் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து கழிவு பஞ்சாலை உரிமையாளர் சம்பத்குமார் கூறியதாவது:-

    முதல்ரக பஞ்சு விலையில் 60 சதவீதம் கழிவுபஞ்சு விலையாக விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் அதை விட கழிவு பஞ்சு விலை அதிகமாக உள்ளது.இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இது இந்தொழிலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது

    மேலும் மின்கட்டணத்தில், நிலைகட்டத்தை பல மடங்கு தமிழக அரசு உயர்த்தி உள்ளது. அதுவும் மிகப்பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது எனவே மத்திய,மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இதனால் தினமும் ரூ.40 லட்சம் கிலோ நூல் உற்பத்தி நிறுத்தப்படும். தினமும் 60 கோடி ரூபாய் மதிப்பினாலான உற்பத்தி வருவாயும் பாதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒபன் எண்ட் நூற்பாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    • வருகிற 9-ந்தேதி, காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
    • போராட்டத்துக்கு முன்னேற்பாடாக ரெயில் நிலைய கூட்ஸ்ெஷட், சபாபதிபுரம் பகுதியில் லாரிகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    திருப்பூர்:

    காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்கு விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 9-ந்தேதி, காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

    இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் பங்கேற்கிறது. போராட்டத்துக்கு முன்னேற்பாடாக ரெயில் நிலைய கூட்ஸ்ெஷட், சபாபதிபுரம் பகுதியில் லாரிகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.ஓரிரு நாளில் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூடி போராட்டத்தில் பங்கேற்பது, லாரிகளை நிறுத்துவது குறித்து ஆலோசித்து அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

    • மக்கள் தொகையில் 4 லட்சம் பேர் மட்டுமே கொண்டது ஐஸ்லேண்டு
    • அனைத்து பணிகளும் வேலைநிறுத்தத்தால் முடங்கி போனது

    வட அட்லான்டிக் பகுதியில் உள்ள வட ஐரோப்பிய நாடு, ஐஸ்லேண்டு (Iceland). இதன் தலைநகர் ரெக்ஜேவிக் (Reykjavik). "லேண்ட் ஆஃப் ஃபையர் அண்ட் ஐஸ்" (land of fire and ice) என அழைக்கப்படும் இந்நாடு, சுமார் 4 லட்சம் பேரை கொண்ட தனித்தீவு நாடாகும்.

    எரிமலை, பனிப்பாறைகள் என இயற்கை அழகுக்காக புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஐஸ்லேண்டில் ஆண்கள் பெறும் ஊதியத்தை விட 21 சதவீதம் குறைவாகவே பெண்கள் ஊதியம் பெறுகின்றனர். சுகாதார பணிகள், தூய்மை பணிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகளில் பெண்களுக்கு ஊதியம் இன்னும் குறைவாக உள்ளது. 1975லிருந்து இது குறித்து 7 முறை போராட்டங்கள் நடத்தியும் அரசாங்கம் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அந்நாட்டில் பெண்கள் அமைப்பினர் மீண்டும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து நேற்று, இந்நாட்டின் தலைநகரில் உள்ள அர்னார்ஹால் (Arnarholl) மலை மற்றும் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்தின் விளைவாக பெண்கள் ஈடுபட்டு வந்த பள்ளிக்கூடங்கள், கடைகள், வங்கிகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பல பணிகள் அந்நாட்டில் ஸ்தம்பித்து விட்டன.

    இப்போராட்டத்திற்கு அந்நாட்டின் பெண் பிரதமர் கேத்ரின் ஜேகப்ஸ்டாட்டிர் (Katrin Jakobsdottir) ஆதரவு தெரிவித்து, பணிக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓலா, உபேர் டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
    • போராட்டத்தின் எதிரொலியாக நேற்று சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.

    சென்னை:

    ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மூன்றாவது நாளாக ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் எதிரொலியாக நேற்று சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளனர். போராட்டத்திற்கு முன் சென்னையில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், போராட்டத்தின் எதிரொலியாக 20 கிலோமீட்டர் தூரத்திற்கு இன்று ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×