search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் கன்டோண்மென்ட் பகுதியில்  ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
    X

    குன்னூர் கன்டோண்மென்ட் பகுதியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

    • தூய்மை பணியாளர்கள் 150 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
    • இதனால் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள கண்டோன்மென்ட் பகுதி மத்திய ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இப்பகுதிகள் 7 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 150 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பள உயர்வு கோரி ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்ததால் 8 ஊழியர்களை ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்துள்ளார். இதனை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×