search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் பங்கு"

    • பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கொடுக்கக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது.
    • இரவு திறக்கமாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பம்புகளில் யாருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கொடுக்கக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது. இதனை செயல்படுத்தும் போது இரவு நேரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுடன் எரிபொருள் கேட்டு வருபவர்களுக்கும், பெட்ரோல் பங்க் நிறுவனத்தினருக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த விஷயத்தில் சில நேரம் ஊழியர்கள் தாக்கப்படுவதாகவும் இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் பெட்ரோலிய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் அரசு இது குறித்து எந்த முடிவும் எடுக்காததை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக கூட்டமைப்பு அறிவித்தது.

    அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை (1-ந்தேதி) காலை 6 மணி வரை கேரளாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டர்களால், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும், இந்த அவலத்திற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இந்த விஷயம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் பம்புகள் செயல்படும். இரவு திறக்கமாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    இன்று பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 14 யாத்ரா எரிபொருள் விற்பனை நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையங்கள் கிழக்கு கோட்டை, விகாஸ்பவன், கிளமானூர், சடையமங்கலம், பொன்குன்னம், சேர்த்தலா, மாவேலிக்கரா, மூணாறு, மூவாட்டுபுழா, பரவூர், சாலக்குடி, திருச்சூர், குரு வாயூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் செயல்படுகின்றன.

    • பெதப்பம்பட்டி எச்.பி. பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் மற்றும் பணம் திருடப்பட்டது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    உடுமலை :

    குடிமங்கலம் காவல் நிலைய சரகம் பெதப்பம்பட்டி எச்.பி. பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் மற்றும் பணம் திருடப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் உத்தரவுப்படி உடுமலை துணைகாவல் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல்மேற்பார்வையில்குடிமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகிருஷ்ணன், தலைமை காவலர் காமராஜ்,முதல் நிலை காவலர்கலைச்செல்வன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இதில் திருட்டு மற்றும் பணத்தை திருடிய குற்றவாளிகள் சிலம்பரசன் (24), சாந்தி (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் திருடிய பணம் மற்றும் பொருட்களை மீட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    குற்றவாளிகளை பிடிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு போலீஸ்காரர் பாலுசாமி மற்றும் சந்தானம் ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.  

    ×