என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே பெட்ரோல் பங்கில் நூதன முறையில்  திருடிய 2பேர் கைது
    X

    கோப்புபடம்.

    உடுமலை அருகே பெட்ரோல் பங்கில் நூதன முறையில் திருடிய 2பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெதப்பம்பட்டி எச்.பி. பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் மற்றும் பணம் திருடப்பட்டது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    உடுமலை :

    குடிமங்கலம் காவல் நிலைய சரகம் பெதப்பம்பட்டி எச்.பி. பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் மற்றும் பணம் திருடப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் உத்தரவுப்படி உடுமலை துணைகாவல் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல்மேற்பார்வையில்குடிமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகிருஷ்ணன், தலைமை காவலர் காமராஜ்,முதல் நிலை காவலர்கலைச்செல்வன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இதில் திருட்டு மற்றும் பணத்தை திருடிய குற்றவாளிகள் சிலம்பரசன் (24), சாந்தி (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் திருடிய பணம் மற்றும் பொருட்களை மீட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    குற்றவாளிகளை பிடிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு போலீஸ்காரர் பாலுசாமி மற்றும் சந்தானம் ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×