என் மலர்
நீங்கள் தேடியது "பெட்ரோல் பங்கு"
- எப்போதும் காரில் வரும் மோகன்ராஜ் நேற்று பைக்கில் வந்துள்ளார்
- கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர்.
கூவத்தூர் அடுத்த பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது.50) இவர் கல்பாக்கம் அடுத்த காத்தாங்கடை கிழக்கு கடற்கரை சாலையில் பெட்ரோல் பங்கு நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் பெட்ரோல் பங்கை மூடிவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு புறப்படும் போது காத்தாங்கடை சந்திப்பு பகுதியில் காரில் பதுங்கி இருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் மோகன்ராஜை வழிமறித்து கையில் இருந்த பட்டாகத்தி மற்றும் அருவாலால் அவரதே கழுத்து, தோல்பட்டை, முதுகில் வெட்டி விட்டு அங்கிருந்து காரில் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் உயிருக்கு போராடிய நிலையில் கொத்துயிரும், கொலையுருமாக ரத்த வெள்ளத்தில் கிடந்த மோகன்ராஜை அப்பகுதியில் கடை வைத்திருப்போர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர். தகவலரிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி அறிவழகன், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
எப்போதும் காரில் வரும் மோகன்ராஜ் நேற்று பைக்கில் வந்துள்ளார், இதையறிந்த மர்ம கும்பல் மோகன்ராஜை கொலை செய்ய காத்தாங்கடை சந்திப்பில் காரில் நீண்ட நேரமாக காத்திருந்து, திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளார்கள்.
கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த கொலை ஏதேனும் கொடுக்கல் வாங்கல் பணப் பிரச்சனையா? நிலத்தகராரா? பெட்ரோல் பங்கில் ஏதும் பிரட்சனையா? கோயில் விவகாரமா? அல்லது வேறேதும் காரணங்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய் பிரணீத் உத்தரவின் பெயரில் கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, திருக்கழுகுன்றம் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கூவத்தூர் போலீசார் சந்தேகத்தின் பெயரில் நாவங்கால் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆன்மீக பக்தரும் பெட்ரோல் பங்கு அதிபருமான மோகன்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இ.சி.ஆரில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இந்த கொலை சம்பவம் கூவத்தூர், காத்தாங்கடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கொடுக்கக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது.
- இரவு திறக்கமாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பம்புகளில் யாருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கொடுக்கக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது. இதனை செயல்படுத்தும் போது இரவு நேரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுடன் எரிபொருள் கேட்டு வருபவர்களுக்கும், பெட்ரோல் பங்க் நிறுவனத்தினருக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் சில நேரம் ஊழியர்கள் தாக்கப்படுவதாகவும் இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் பெட்ரோலிய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் அரசு இது குறித்து எந்த முடிவும் எடுக்காததை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக கூட்டமைப்பு அறிவித்தது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை (1-ந்தேதி) காலை 6 மணி வரை கேரளாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டர்களால், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும், இந்த அவலத்திற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
இந்த விஷயம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் பம்புகள் செயல்படும். இரவு திறக்கமாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 14 யாத்ரா எரிபொருள் விற்பனை நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையங்கள் கிழக்கு கோட்டை, விகாஸ்பவன், கிளமானூர், சடையமங்கலம், பொன்குன்னம், சேர்த்தலா, மாவேலிக்கரா, மூணாறு, மூவாட்டுபுழா, பரவூர், சாலக்குடி, திருச்சூர், குரு வாயூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் செயல்படுகின்றன.
- பெதப்பம்பட்டி எச்.பி. பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் மற்றும் பணம் திருடப்பட்டது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
உடுமலை :
குடிமங்கலம் காவல் நிலைய சரகம் பெதப்பம்பட்டி எச்.பி. பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் மற்றும் பணம் திருடப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் உத்தரவுப்படி உடுமலை துணைகாவல் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல்மேற்பார்வையில்குடிமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகிருஷ்ணன், தலைமை காவலர் காமராஜ்,முதல் நிலை காவலர்கலைச்செல்வன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இதில் திருட்டு மற்றும் பணத்தை திருடிய குற்றவாளிகள் சிலம்பரசன் (24), சாந்தி (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் திருடிய பணம் மற்றும் பொருட்களை மீட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
குற்றவாளிகளை பிடிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு போலீஸ்காரர் பாலுசாமி மற்றும் சந்தானம் ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.






