search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை நிறுத்தம்"

    • தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவிப்பு.
    • வேலை நிறுத்தத்தில் மொத்தம் 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவித்துள்ளார்.

    பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

    315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    இதனால், வேலை நிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கருதப்படுகிறது.

    • நிரந்தர தொழிலாளராக நிர்வாகம் பணியமர்த்த தொடர்ந்து போராடி வருகின்றனர்.
    • வேலை நிறுத்த போராட்டத்தால் பெல் நிறுவனத்தில் பல பிரிவுகளில் வேலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம். இங்கு நேரடியாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு மாதம் சுமார் ரூ 24 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியாமல் இத்தகைய தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்களை நிரந்தர தொழிலாளராக நிர்வாகம் பணியமர்த்த தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் பெல் நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் மாதம் 13-ந் தேதி சொசைட்டி தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் இதுவரை பெல் நிர்வாகம் அழைத்து பேசவில்லை. இந்நிலையில் அனைத்து சொசைட்டி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் செய்யப் போவதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று அறிவித்தனர்.

    அதன் பிறகும் பெல் நிறுவன நிர்வாகம் அழைத்து பேசாததால் இன்று முதல் பெல் நிறுவன மெயின் கேட் முன்பு போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தில் பாதுகாவல் பணி, மருத்துவ பணியில் சில தொழிலார்களை தவிர மீதி அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் பெல் நிறுவனத்தில் பல பிரிவுகளில் வேலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது.
    • நாளை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ்.

    ஊதிய உயர்வு, நிரந்தர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இன்று பேரணியாக செல்ல முயன்றனர்.

    இதைதொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    ஆனால், என்எல்சி தொழிலாளர்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மறுத்துவிட்டனர்.

    இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவில் என்எல்சி நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இருப்பினும், நாளை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், குடியரசு தினத்தன்று கருப்புக்கொடி ஏந்தி என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்தபின் கருத்து தெரிவிப்போம்.
    • நீதிமன்ற உத்தரவின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேலூர்:

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பொங்கல் நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் உத்தரவு

    * தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக தெரியவில்லை.

    * நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்தபின் கருத்து தெரிவிப்போம்.

    * நீதிமன்ற உத்தரவின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வரும் 19-ந்தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும்.

    * நிதி நிலையை பொறுத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
    • பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று காலை விசாரித்த நீதிமன்றம், ''போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம்.

    பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு ஏன் இடையூறு ஏற்படுத்த வேண்டும்? நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

    பின்னர் ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிற்பகலுக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

    மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், ஜனவரி 19-ந்தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்து பணிக்கு திருப்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்களை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என தெரிவித்தனர்.

    • அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்துப் பேசி, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொங்கல், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படுவதும், இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதும், அதனை தி.மு.க. அரசு வேடிக்கை பார்ப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஊதியக் குழு பேச்சுவார்த்தை, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தற்போது மேற்கொண்டு உள்ளனர்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. மக்களின் அச்சத்தினை போக்கும் வகையிலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்துப் பேசி, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நோயாளிகள் என பலதரப்பட்டவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள்.
    • மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் நேற்று நீதிபதிகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பும் முறையிட்டனர்.

    மதுரை:

    திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை 9-ந்தேதி (இன்று) முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் சட்ட விரோதமானது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நோயாளிகள் என பலதரப்பட்டவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள்.

    அதுமட்டுமல்லாமல் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வருகிறது. எனவே போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் நேற்று நீதிபதிகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பும் முறையிட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்திருந்தனர்.

    அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது. எனவே இந்த வழக்கை நாளை ஒத்திவைக்குமாறு முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை நாளைக்கு (10-ந்தேதி) ஒத்திவைத்தனர்.

    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் நலன்கருதி தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு முறையிடப்பட்டுள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பொங்கல் பண்டிகை நேரத்தில் மக்கள் பாதிப்பை சந்திக்க நேரிடும். இதனால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் படி அரசுக்கு உத்தரவிடக்கோரி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்தால் இதுசம்பந்தமான அவசர வழக்கை பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து இவ்வழக்கு பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
    • 6 அம்ச கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை ஏற்பதாக நாங்கள் தெரிவித்துவிட்டோம்.

    சென்னை:

    ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும் 6 அம்ச கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை ஏற்பதாக நாங்கள் தெரிவித்துவிட்டோம். பொங்கலுக்கு பின் மற்ற கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கலாம் என கூறியும் போராட்டத்தை அறிவித்துவிட்டதாக கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
    • திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    சென்னை:

    ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை அடுத்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    • திட்டமிட்டபடி வரும் 9-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
    • அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.

    மதுரை:

    ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி வரும் 9-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

    பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம். போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.

    இதையடுத்து வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

    • வேலை நிறுத்தம் என ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் ஒருமனதாக முடிவு.
    • வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தும்.

    பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக இரு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் என ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளன.

    வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்கத்தை சேர்ந்த சவுந்தரராஜன் கூறுகையில், "8 வருட கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து உரிய பதில் வராததால் வரும் 9ம் தேதி முதல் ஸ்டிரைக்" என என்றார்.

    ×