search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை நிறுத்த போராட்டம் குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் வாக்கெடுப்பு
    X

    வாக்களித்தபோது எடுத்த படம்.

    வேலை நிறுத்த போராட்டம் குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் வாக்கெடுப்பு

    • திருமங்கலத்தில் வேலை நிறுத்த போராட்டம் குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் வாக்கெடுப்பு நடந்தது.
    • 3 நாட்கள் தென்னக ெரயில்வே முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமங்கலம்

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வு திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம், பேரணி என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டது. போராட்டத்தின் எதிரொலியாக மத்திய அரசு கமிட்டி ஒன்றை அமைத்து கோரிக்கை குறித்த பரிசீலனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ-ஏ.ஐ.ஆர்.எப். தொழிற்சங்கம் சார்பில் ரெயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபடுவதாக முடி வெடுக்கப்பட்டது.

    அந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் உறுப்பினர்கள் மன நிலையை அறிய ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று திருமங்க லத்தில் ெரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. மதுரை கோட்ட செயலாளர் எஸ்.எம்.ரபீக் வழிகாட்டு தலின் பேரில் சிவகாசி கிளை பொறுப்பாளர் ஜோதிராஜா, கிளைச் செய லாளர் ஹரிநாராயணன், பொருளாளர் முத்துவேல், உதவிச் செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் முன்னிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    மதுரை அழகப்பன் நகர் ெரயில்வே கேட்டில் இருந்து விருதுநகர் வரை உள்ள ெரயில்வே நிலையங்கள் ெரயில்வே கேட் பகுதியில் பணியாளர்களிடம் அலுவலர்களிடம் கருத்து கேட்பு எஸ்.ஆர்.எம்.யூ.தொழிற்சங்கத்தினர் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 3 நாட்கள் தென்னக ெரயில்வே முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×