search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷவாயு தாக்கி 3 பேர் பலி"

    தமிழகத்தில் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #DMK #TNBypoll
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.

    இந்த உத்தரவால் கடும் அதிருப்தி அடைந்த திமுக, இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட முடிவு செய்தது.

    18 சட்டமன்றத் தொகுதிகளுடன் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முன்வராவிட்டால் நீதிமன்றம் சென்று தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றியது.



    இந்நிலையில், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடும்படி கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், வெள்ளிக்கிழமை அவசர வழக்காக விசாரிப்பதாக கூறியுள்ளது. #DMK #TNBypoll
    கூகுள் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. #Pixel3Lite



    கூகுள் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், இம்முறை ஸ்மார்ட்போனின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. முன்னதாக ஏ.ஆர். கோர் ஏ.பி.கே. டியர்டவுன் மூலம் வெளியாகி இருந்த நிலையில் புதிய பிக்சல் 3 லைட் ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் பிக்சல் 3 லைட் மாடலில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, நாட்ச் வழங்கப்படவில்லை. வடிவமைப்பைப் பொருத்த வரை பாலிகார்போனேட் ஷெல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைதை பார்க்க முந்தைய நோக்கியா லூமியா மற்றும் ஐபோன் 5சி போன்களை நினைவூட்டுகிறது.


    புகைப்படம் நன்றி: ROZETKED

    பிக்சல் 3 லைட் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.56 இன்ச் ஐ.எஸ்.பி. டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2220x1080 பிக்சல் ரெசல்யூஷன், ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இதனுடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் கொண்டிருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க பிக்சல் 3 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், வட்ட வடிவம் கொண்ட கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. செல்ஃபி எடுக்க 8 எம்.பி. கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கூகுள் போன் என்பதால், பிக்சல் 3 லைட் மாடலில் ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் ஸ்டூடியோ 3 வயர்லெஸ் ஸ்கைலைன் கலெக்ஷன் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Apple #BeatsStudio3Wireless



    ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் ஸ்டூடியோ 3 வயர்லெஸ் ஹெட்போனினை பல்வேறு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. 

    புகிய ஸ்கைலைன் கலெக்ஷன் கிரிஸ்டல் புளு, டிசர்ட் சேன்ட், மிட்நைட் பிளாக் மற்றும் ஷேடோ கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்களுடன் ஹெட்போனில் தங்க நிற அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் தங்க நிற பீட்ஸ் லோகோ மற்றும் கோல்டு பேன்ட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

    பீட்ஸ் ஸ்டூடியோ 3 ஹெட்போனில் பியூர் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனர் இருக்கும் சூழலில் நிலவும் சத்தத்திற்கு ஏற்ப நாய்ஸ் கேன்சலேஷன் அளவை மாற்றும். இந்த ஹெட்போனில் உள்ள நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் போட்டி நிறுவனங்களை விட சிறப்பானதாக இயங்கும் என பீட்ஸ் தெரிவித்துள்ளது.

    அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் அம்சம் ஆஃப் செய்யப்பட்டால், ஸ்டூடியோ 3 அதிகபட்சம் 40 மணி நேர பேக்கப் வழங்கும், இந்த அம்சம் ஆன் செய்யப்பட்ட நிலையில், 22 மணி நேரம் பேக்கப் வழங்கும். புதிய ஹெட்போனினை மைக்ரோ யு.எஸ்.பி. கனெக்டர் மூலம் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    பீட்ஸ் ஓவர்-இயர் ஹெட்போன்களில் W1 சிப் வழங்கப்பட்டுள்ளதால் ஐபோன் அல்லது ஐபேட் சாதனங்களில் பேர் செய்வது எளிமையாக இருக்கும். இத்துடன் மிக்கி மவுஸ் 90-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் மிக்கி தீம் கொண்ட பீட்ஸ் சோலோ 3 வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த ஹெட்போன்களில் கிரே ஃபெல்ட் கேரி கேஸ், கலெக்டெபிள் பின் மற்றும் டீக்கல் ஸ்டிக்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய மிக்கி மவுஸ் ஹெட்போன்கள் விரைவில் கிடைக்கும் என ஆப்பிள் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு அமேசான் வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    புதிய ஹெட்போன்கள் நவம்பர் 11-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. மிக்கி டிசைன் கொண்ட ஹெட்போனின் விலை 329.95 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கைலைன் கலெக்ஷன் விலை 349.95 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,720 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஆப்பிள் பீட்ஸ் சோலோ 3 ஹெட்போன் அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,

    செம்பட்டியில் 3 குழந்தைகளுடன் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஜி.கள்ளுப்பட்டியைச் சேர்ந்த தனபாண்டியம்மாள் (30) என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாருமதி (12), அக்‌ஷரா (11) ஆகிய மகள்களும் மோனிஷ் கண்ணன் (4) என்ற மகனும் உள்ளனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த தன பாண்டியம்மாள் தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மாயமானார்.

    மனைவி மற்றும் குழந்தைகளை காணாமல் கணவர் குமார் பல இடங்களில் தேடிப் பார்த்தார். இது குறித்து தன பாண்டியம்மாளின் தந்தை தன சேகரனிடம் கேட்ட போது அவரும் இங்கு வரவில்லை என கூறினார்.

    இதனையடுத்து தன சேகரன் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனபாண்டியம்மாள் மற்றும் 3 குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    நெல்லை அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #WellDigging #Labourers
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது அத்தியூத்து கிராமம். இங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் கிணற்றுக்குள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது கிணற்றின் ஒரு பகுதியில் இருந்து மண் சரிந்தது. 

    இதனால் கிணற்றுக்குள் இருந்த தொழிலாளர்கள் மீது மண் விழுந்து அமுக்கியது. இதில் மதி, சோணாச்சலம், சுடலை ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அவர்களை சடலமாக மீட்டனர். 

    3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #WellDigging #Labourers
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #smarttv



    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய டி.வி. 32 இன்ச் ஹெச்.டி., 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மற்றும் 50 இன்ச் ஃபுல் ஹெச்.டி. வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

    ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் ஆப்டொய்ட் ஆப் ஸ்டோர் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன் வயர்லெஸ் கன்ட்ரோல் வசதி கொண்டு ஸ்மார்ட்போன்களை டி.வி.யுடன் எளிமையாக இணைத்து, முழு டி.வி. மற்றும் கேம்களை விளையாட முடியும்.



    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சங்கள்:

    - 32 இன்ச் (1366x768 பிக்சல்) ஹெச்.டி. ரெடி 
    - 40 இன்ச் / 50 இன்ச் (1920x1080) ஃபுல் ஹெச்.டி. டைரக் எல்.இ.டி. பேனல்
    - குவாட்-கோர் பிராசஸர் டூயல் கோர் GPU
    - 1 ஜிபி ரேம்
    - 5.5 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு டி.வி. சார்ந்த ஆன்ட்ராய்டு 7.0
    - வைபை 802.11b/g/n, 3 x ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி., ஈத்தர்நெட் போர்ட்
    - 24W இன்பில்ட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள்

    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் வேரியன்ட் விலை ரூ.13,999 என்றும், 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மாடல் ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. 50 இன்ச் விலை விரைவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 
    ஈரோட்டில் ரூ.2 லட்சம் பணம் கேட்டு ஜவுளிக்கடை உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 53) இவர் டிவிஎஸ் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார்.

    நீதி மோகன் என்பவர் இவரது ஜவுளிக்கடையில் 18 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கும், நீதி மோகனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து நீதி மோகனுக்கு ஈரோடு நாடார் மேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஈரோடு கனி மார்க்கெட்டில் ஒன்றாக இணைந்து ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

    பின்னர் நீதி மோகனுக்கும் சக்திவேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த வி‌ஷயத்தில் நீதி மோகனுக்கு ஆதரவாக திருநாவுக்கரசு சமரசம் பேசினார்.

    இதனால் திருநாவுக்கரசர் மீது சக்திவேல் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சக்திவேல், கள்ளுக்கடை மேடு பகுதியைச் சேர்ந்த காதர் ஷெரிப் மற்றும் முஸ்தபா ஆகியோர் மூலபாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கு சென்றனர்.

    அங்கு திருநாவுக்கரசின் கழுத்தில் கத்தியை வைத்து, ‘‘உன்னால்தான் எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதனால் ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும்’’ என்று கேட்டு மிரட்டினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு குடும்பத்தினர் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். இதனால் பயந்து போன சக்திவேல், காதர் ஷெரிப், முஸ்தபா ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து திருநாவுக்கரசு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சக்திவேல், காதர் ஷெரிப், முஸ்தபா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    சித்தூர் அருகே மனைவி குடும்ப நடத்த வராததால் 3 குழந்தைகளை ஆற்றில் வீசி தந்தை கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள பாலகெங்கனபல்லி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவருக்கு குழந்தை இல்லாததால். 2-வதாக அமராவதி (25) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு புனித்(6), சஞ்சய்(3), ராகுல் (10 மாதம்) என 3 ஆண் குழந்தைகள் இருந்தனர். வெங்கடேசன் 2 மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். வெங்கடேசுக்கும் 2-வது மனைவியான அமராவதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில மன வேதனையடைந்த அமராவதி மகன்களுடன் தாய் வீடான செட்டிப்பல்லி கிராமத்திற்கு சென்று விட்டார்.

    இதனால் நேற்று வெங்கடேசன் செட்டிப்பல்லி கிராமத்திற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்தார். ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்தார். இது தொடர்பாக இருவருக்கும் நேற்றிரவு 10 மணி வரை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    3 குழந்தைகளின் தாய் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது நீ வராவிட்டால் மகன்களை அழைத்து செல்கிறேன் என வெங்கடேசன் கூறி விட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.

    கங்காதரநெல்லூர் அருகே சென்ற போது மனைவி வராத ஆத்திரத்தில் இருந்த வெங்கடேசன் அங்குள்ள நீவா ஆற்றில் திடீரென 3 மகன்களையும் வீசி விட்டு தப்பியோடி விட்டார். இதில் 3 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    இன்று காலை அவ்வழியாக வந்த பொதுமக்கள் ஆற்றில் 3 குழந்தைகளின் உடல்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கங்காதரநெல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர்.
    ஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்பட 3 பேரை பயங்கரவாதிகள் கடத்தி கொலை செய்ததற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. #IndianAbducted #Afghanistan #AfghanTerroristAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் சர்வதேச உணவு மற்றும் கேட்டரிங் சேவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மாசிடோனியாவைச் சேர்ந்த ஒருவர் என 3 தொழிலாளர்களை இன்று திடீரென காணவில்லை. கம்பெனி நிர்வாகிகளும் போலீசாரும் அவர்களை தேடி வந்தனர்.

    இதற்கிடையே அவர்கள் 3 பேரும் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர். அருகில் அவர்களின் அடையாள அட்டைகளும் கிடந்தன. அவற்றை உறுதிப்படுத்த கம்பெனிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    விசாரணையில் அவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.



    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்பட 3 பேரை பயங்கரவாதிகள் கடத்தி கொலை செய்ததற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்பட 3 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    மேலும், காபுலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம். இறந்து போன இந்தியரின் இறுதி சடங்கு செய்வதற்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்துதரப்படும் என தெரிவித்துள்ளார். #IndianAbducted #Afghanistan #AfghanTerroristAttack
    அமெரிக்காவில் மது பாரில் மர்ம நபர்கள் சுட்டதில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். #gunfiring

    நியூயார்க்:

    அமெரிக்காவில் நியூ ஓர்லன்ஸ் புறநகரில் பிரபலமான மது பார் உள்ளது. நேற்று அங்கு பலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

    அப்போது மர்ம நபர்கள் 2 பேர் மது பாருக்குள் நுழைந்தனர். கோட்டுடன் தொப்பியுடன் கூடிய உடை அணிந்து இருந்தனர். அவர்கள் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென சரமாரியாக சுட்டனர்.

    இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. மது பாரில் இருந்தவர்கள் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தனர். ஓடிச் சென்று மறைவிடங்களில் பதுங்கினர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். அவர்களில் 2 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார். இவர்கள் தவிர 7 பேருக்கும் குண்டு காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் நியூ ஓர்லியன்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மர்ம நபர்கள் 10 பேரை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    எனவே, முன்விரோதம் காரணமாக இத்தாக்குதல் நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது. #gunfiring

    இரண்டு பாகங்களாக வந்து ரசிகர்களை கவர்ந்த ஹோட்டல் டிரான்ஸில்வானியா தற்போது மூன்றாவது பாகமாக சம்மர் வெகேசன் என்னும் பெயரில் வெளியாகி இருக்கிறது. இதன் விமர்சனம்...
    மனிதர்களுக்கு பயந்து பயந்து வாழ்கின்றன பூதங்கள். மனிதர்கள் எந்த நேரத்திலும் தங்களைக் கொன்றுவிடுவார்கள் என்கிற அச்சத்தில் இருக்கும் பூதங்களுக்கு, ஒரே அடைக்கலம ஹோட்டல் டிரான்ஸில்வேனியாதான். மனிதர்களின் கால் தடம் கூட பதியாத ஒரு காட்டுக்குள் ஹோட்டல் ஒன்றை மான்ஸ்டர்களுக்காக மட்டுமே நடத்தி வருகிறது 540 வயதான கௌன்ட் டிராகுலா. 

    இவரின் மனைவி மார்த்தாவை மனிதர்கள் கொலை செய்துவிட, மனிதர்களை வெறுக்கிறார் கௌன்ட் டிராகுலா. டிராகுலாவின் மகள் மேவிஸுக்கு 118 வது (ஆம் 118) பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட நினைக்கிறார் டிராகுலா. மகளுக்கோ ஹோட்டலைவிட்டு வெளியே சென்று, மனிதர்களை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்று ஆசை. மகள் முன் பூதங்களையே மனிதர்களாகச் சித்திரித்து ஏமாற்றிவிடுகிறார் டிராகுலா. டிராகுலாக்களும், பூதங்களும் அங்கு வந்து ஜாலியாக டைம்பாஸ் செய்கிறார்கள். மனிதர்கள் என்றாலே மோசமானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறாள் மேவிஸ். 

    முதல் பாகத்தை (2012) விட இரண்டாம் பாகத்தில் (2015) காமெடிக் காட்சிகள் குறைவு என அலுத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்குப் மூன்றாம் பாகமான ஹோட்டல் டிராஸில்வேனியா 3 : சம்மர் வெக்கேஷன் வெளியாகி இருக்கிறது.

    ஒரு குட்டி ப்ளாஷ்பேக்குடன் கதை ஆரம்பிக்கிறது. கௌன்ட் டிராகுலா நண்பர்களுடன் ரயிலில் புடாபெஸ்ட் செல்ல, அங்கு வரும் வேன் ஹெல்சிங், இவர்களைக் கொல்ல முடிவு செய்கிறார். வழக்கம் போல, டிராகுலா வென்றுவிட, எப்படியேனும் பழிவாங்குவேன் என சபதம் எடுக்கிறார்.



    நிகழ்காலத்தில், ஹோட்டலில் வேலை செய்து போரடித்ததால், ஜாலியாகக் கப்பலில் சுற்றுலா செல்ல திட்டமிடுகிறாள் மேவிஸ். ஒட்டுமொத்த பூதக்கூட்டமும் அங்கு செல்ல, களைகட்டுகிறது. கப்பலின் கேப்டனாக வேன் ஹெல்ஸிங்கின் கொள்ளுப்பேத்தி எரிக்கா. 

    டிராகுலாவுக்கு எரிக்கா மேல் காதல் வருகிறது. இறுதியில் வேன் ஹெல்ஸிங் டிராகுலாவை பழி தீர்த்ததா? வேன் ஹெல்ஸிங்க்கின் பேத்தி எரிக்காவுக்கும் டிராகுலாவுக்கும் இடையேயான காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஹோட்டலுக்குப் பதிலாக புதிய இடம், கப்பல், ரயில், விமானம் என கலர் புல்லாக இருக்கிறது இந்த பாகம். வண்ணவண்ண மீன்கள், புதிய கோணத்தில் பெர்முடா முக்கோணம் என ஒவ்வொரு காட்சியிலும் அனிமேஷன் அருமை. குழந்தைகளை இது அதிகம் மகிழ்விக்கும். 

    மொத்தத்தில் கலர்புல்லான காட்சிகளால் ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறது ஹோட்டல் டிரான்ஸில்வானியா இந்த சம்மர் வெக்கேஷன்.
    அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மதுரையில் இருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக சென்ற டி.டிவி தினகரனுக்கு மாவட்ட கழகம் சார்பில் மணலூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை போன்ற சிவகங்கை மாவட்ட எல்கையில் இருந்து மாவட்ட முடிவு வரை பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    மாவட்ட செயலாளர் உமாதேவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன்கென்னடி மாவட்ட துணை செயலாளர் மேப்பல்ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் சக்தி, இளைஞரணி இணைச் செயலாளர் இறகு சேரிமுருகன் வக்கீல் பிரிவு இணை செயலாளர் அன்பரசன் பாசறை இணைசெயலாளர் அந்தோணிராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் தேர்போகிபாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் மந்தகாளை, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.முத்து, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அண்ணாமலை, விவசாய பிரிவு இணை செயலாளர்அர்ச்சுணன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் கார்த்திகைசாமி, காரைக்குடி நகர செயலாளர் சரவணன், நகர செயலாளர் அன்புமணி, தொகுதி செயலாளர் மகேஷ் மற்றும் நகர, ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது.

    ×