என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே 3 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்
ஆத்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஜி.கள்ளுப்பட்டியைச் சேர்ந்த தனபாண்டியம்மாள் (30) என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாருமதி (12), அக்ஷரா (11) ஆகிய மகள்களும் மோனிஷ் கண்ணன் (4) என்ற மகனும் உள்ளனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த தன பாண்டியம்மாள் தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மாயமானார்.
மனைவி மற்றும் குழந்தைகளை காணாமல் கணவர் குமார் பல இடங்களில் தேடிப் பார்த்தார். இது குறித்து தன பாண்டியம்மாளின் தந்தை தன சேகரனிடம் கேட்ட போது அவரும் இங்கு வரவில்லை என கூறினார்.
இதனையடுத்து தன சேகரன் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனபாண்டியம்மாள் மற்றும் 3 குழந்தைகளை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்