search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "soil collapsed"

    நெல்லை அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #WellDigging #Labourers
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது அத்தியூத்து கிராமம். இங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் கிணற்றுக்குள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது கிணற்றின் ஒரு பகுதியில் இருந்து மண் சரிந்தது. 

    இதனால் கிணற்றுக்குள் இருந்த தொழிலாளர்கள் மீது மண் விழுந்து அமுக்கியது. இதில் மதி, சோணாச்சலம், சுடலை ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அவர்களை சடலமாக மீட்டனர். 

    3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #WellDigging #Labourers
    ×