search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலைவீச்சு"

    • 2½ பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
    • திருடர்கள் பிடித்து இழுத்ததில் நகை அறுந்து ஒரு பகுதி திருடர்கள் கையில் சிக்கியது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மேலப்பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம் (வயது58). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றாா். இந்நிலையில் மர்மநபர்கள் செல்லம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். 

    பின்னர் செல்லத்தின் வீட்டின் எதிரே உள்ள சின்னராஜ்(54) என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 2½ பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் சின்னராஜ் வீட்டின் அருகில் உள்ள அன்னபாக்கியம்(70) என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, அங்கிருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்தனர். பின்பு அங்கு தூங்கிக்கொண்டிருந்த அன்னபாக்கியம் என்பவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது எழுந்த அன்னபாக்கியம் நகையை தனது கைகளால் பிடித்து கொண்டு சத்தம் எழுப்பினார், இருப்பினும் திருடர்கள் பிடித்து இழுத்ததில் நகை அறுந்து ஒரு பகுதி திருடர்கள் கையில் சிக்கியது. இதையடுத்து அந்த நகையுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இது குறித்த தகவலின் பேரில் ரிஷிவந்தியம் போலீசாார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் இருந்த தடயங்கள் சேகரித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
    • 3பேரை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமம் கொய்யாதோப்பு பகுதியில் விற்பனைக்காக வீட்டில் 35 மூட்டைகள் அடங்கிய ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரகசிய தகவல் புதுப்பேட்டை போலீசாருக்கு தெரியவந்தது.

    தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்து போதை பொருட்களை கடத்தி வந்த கார், மினி லாரி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 35 மூட்டை போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போதை பொருட்கள் கடத்தலில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 35), முகமது அன்சாரி (50) ஆகியோரை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் முக்கிய பிரமுகர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தாயை கத்திரிக்கோலால் மகன் சரமாரியாக குத்தினார்.
    • தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தாட்கோ காலனியைச் சேர்ந்தவர் அபிராமி (வயது35). இவரது கணவர் வைரமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்து விட்டார். இவர்க ளது மகன் ஜெயக்குமார் (19).

    இந்த நிலையில் அபிராமிக்கும், மகனின் நண்பர் ஆரோக்கியம் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகன் பலமுறை தாயை கண்டித்தார். அதே சமயம் தனது நண்பரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ள தொடர்பு நீடித்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு அபிராமிக்கும், ஆரோக்கியத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டிற்கு வந்த ஜெயகுமார் நண்பரை கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் தாய் அபிராமியை சரமாரி யாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த அபிராமி கொடுத்த புகாரின்பேரில் வடக்கு காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் வில்சன் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயகுமார்(வயது60). இவர் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் ஏசுராணி. இவரது கணவர் யோகராஜன் என்ற கிருஷ்ணராஜ். இவர் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ஏசுராணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்தார். இந்த நிலையில் சேத்தூர் பகுதியில் ஜெயகுமார் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த யோகராஜன் ஜெயகுமாரை அவதூறாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெயகுமாரின் தலையில் வெட்டினார். இதில் படுகா யமடைந்த ஜெயகுமார் சிகிச்சைக்காக ராஜபா ளையம் அரசு மருத்து வனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை மறைவான யோகராஜனை ேபாலீசார் தேடி வருகின்றனர்.

    • சொத்து தகராறில் தாத்தாவை அடித்துக் கொன்ற பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த அயன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை (வயது 86). விவசாயியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சின்னப்பிள்ளை பெயரில் உள்ள சொத்துகளை பிரித்து தரக்கோரி குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சின்னப்பிள்ளையின் மூத்த மகனான கோவிந்தசாமியின் மகன் இளவரசன்(30), சொத்துகளை பிரித்து தரக்கோரி தாத்தா சின்னப்பிள்ளையிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு சின்னப்பிள்ளையிடம் இளவரசன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது சின்னப்பிள்ளையை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இளவரசன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார் அங்கு சென்று சின்னப்பிள்ளையின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளவரசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • லாரி டிரைவர் கொலையில் மற்றொரு சகோதரருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
    • ராஜபாளையம் அருகே ெசாத்து தகராறில் தீர்த்துக்கட்டினர்.

    ராஜபாளையம்

    தென்காசி மாவட்டம் சிவகிரியை ேசர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியின் மகன் முருகன்(வயது40), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஜீவாநகர் பகுதியில் வசித்து வந்தார். லாரி டிரைவரான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

    முத்துசாமியின் 2-வது மனைவிக்கு ஞானகுருசாமி, காளிதாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி குடும்பத்தினருக்கும், 2-வது மனைவி குடும்பத்தி னருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன், மகன் மற்றும் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். குழந்தைகள் இருவரும் முன்னே நடந்து செல்ல, பின்னால் அவர்களின் பைகளை சைக்கிளில் வைத்துக் கொண்டு சென்றார்.

    ஜீவா நகர் பகுதியில் சென்றபோது, திடீரென்று 2 பேர் ஓடி வந்து அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு கழுத்தில் வெட்டு விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறுிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அருகில் இருந்த பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் அரிவாளுடன் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து ேபாலீசார் விசாரித்தனர்.

    அதில் அவர் முத்துசாமியின் 2-வது மனைவியின் மகன் ஞான குருசாமி(38) என்பதும், தனது சகோதரர் காளி தாசுடன் சேர்ந்து அண்ணன் முருகனை கொலை செய்து விட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ேபாலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய காளிதாசை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மாட்டை கொன்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் குல்லூர் சந்தையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ராமுத்தாயி. கருத்து வேறுபாடு காரண மாக இவர் தனது கணவர் மாரிகண்ணனை பிரிந்து வந்து விட்டார்.

    சம்பவத்த ன்று மாமனார் வீட்டுக்கு வந்த மாரிகண்ணன் வீட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை கத்தியால் வெட்டி கொன்றார். இதற்கு உடந்தையாக அவரது நண்பர் பாலமுருகன் இருந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ரவி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

    • திண்டிவனத்திற்கு பஸ்ஸில் வந்து மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி போலீஸ் தோ ரணையில் ராதாகிருஷ்ணன் வைத்திருந்த பையில் கஞ்சா மது பாட்டல் உள்ளதா என சோதனை செய்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே தாதாபுரம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் விவசாயி. இவர் திண்டிவனத்திற்கு பஸ்ஸில் வந்து மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்.பின்பு பஸ்ஸில் வெள்ளிமேடு பேட்டைக்கு வந்தார். அங்குள்ள ஒரு வங்கியில் நெல் விற்ற பணம் 51 ஆயிரத்தை பெற்று பையில் வைத்துக்கொண்டு வெள்ளி மேடை ப்பேட்டையில் உள்ள நிலத்திற்கு மண் பாதையில் நடந்து சென்றார்.

    அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ராதாகிருஷ்ணன் யிடம் தான் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி போலீஸ் தோ ரணையில் ராதாகிருஷ்ணன் வைத்திருந்த பையில் கஞ்சா மது பாட்டல் உள்ளதா என சோதனை செய்தார். சோதனையில் போது அவரின் கவனத்தை திசை திருப்பி பையில் வைத்திருந்த பணத்தை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். மர்ம நபர் சென்ற பின் பையைப் பார்த்தபோது ரூ. 51 ஆயிரம் பணம் காணவில்லை.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார். ராதாகிருஷ்ணன் புகாரின் பேரில் வெளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள்கடந்த சில தினங்களாக அதிக அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏற்காடு மாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகள் விஷ்ணுபிரியா. இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
    • வடமன் தான் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி மூலம் எங்களது பசுமாட்டை சுட்டு கொன்று விட்டார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம், ஏற்காடு மாரமங்கலம் கிரா மத்தை சேர்ந்த வரதராஜன் மகள் விஷ்ணுபிரியா. இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

    அந்த மனுவில், மார மங்கலம் பகுதியில் வசிக்கும் வெங்கடாசலம் மகன் வடமன் (45), என்பவரது தோட்டத்தில், கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வடமன் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு எடுத்திருந்தது கண்டுபி டிக்கப்பட்டு, அவருக்கு ரூ.55,000 அபராதம் விதித்தனர்.

    இந்த நிலையில், எனது தந்தைக்கும் வடமனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதனால் மின்சார துறை அதிகாரிகளிடம் எனது தந்தை தான் இந்த விவரத்தை கூறியிருப்பார் எனக் கருதி, கடந்த 31-ந் தேதி, வடமன் தான் வைத்தி ருந்த கள்ளத் துப்பாக்கி மூலம் எங்களது பசுமாட்டை சுட்டு கொன்று விட்டார். அதனால் அவர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இந்த புகாரின் அடிப்ப டையில் ஏற்காடு போலீசார், வடமன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் பசு மாட்டை சுட்டு கொன்று விட்டு தலைமறைவாக உள்ள வடமனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • போலீசாரை கண்டதும் இன்னாசி தப்பி ஓடிவிட்டார்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீசார் அன்னமங்கலம் பகுதியில் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த இன்னாசி (வயது 40) என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது அவரது வீட்டில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் இன்னாசி தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இன்னாசியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கல்வராயன் மலை, கரியாலூர் போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • அங்கு 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 8 பிளாஸ்டிக் பேரல்களில் 1600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள தாழ்மொழிபட்டு கிராமத்தின் அருகில் கல்வராயன் மலை, கரியாலூர் போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 8 பிளாஸ்டிக் பேரல்களில் 1600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டனர். இதனை போலீசார் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.   

    அதேபோல் கல்வராயன் மலை சிறுகலூர் கிராம தெற்கு ஓடையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி தலைமையில் தனி படை போலீசார் கல்வராயன்மலை சிறுகலூர் கிராம தெற்கு ஓடை அருகில் கள்ள சாராயம் சம்பந்தமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் லாரி டியூப்பில் 260 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையும் சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர். இதில் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த ரவுடிகளை தேடி வருகின்றனர்.
    • கார்த்தீஸ்வரன் என்ற குட்டை கார்த்திக், சித்திர வேல், பல்லுமணி என தெரியவந்தது .

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பல்லப்பட்டி மீனாட்சி காலனியை சேர்ந்தவர் சுல்தான் பாட்ஷா (வயது45). சுமை தூக்கும் தொழிலா ளியான இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது முட்புதரில் மறைந்திருந்த 3 மர்ம நபர்கள் திடீரென சுல்தான் பாட்ஷாவை வழிமறித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1800-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுல்தான் பாட்ஷாவிடம் பணம் பறித்தது கார்த்தீஸ்வரன் என்ற குட்டை கார்த்திக், சித்திர வேல், பல்லுமணி என தெரியவந்தது.

    இவர்கள் 3 பேர் மீதும் சிவகாசி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. பணம் பறிப்பில் தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீ சார் தேடி வருகின்றனர்.

    ×