search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "webmaster"

    • தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த ரவுடிகளை தேடி வருகின்றனர்.
    • கார்த்தீஸ்வரன் என்ற குட்டை கார்த்திக், சித்திர வேல், பல்லுமணி என தெரியவந்தது .

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பல்லப்பட்டி மீனாட்சி காலனியை சேர்ந்தவர் சுல்தான் பாட்ஷா (வயது45). சுமை தூக்கும் தொழிலா ளியான இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது முட்புதரில் மறைந்திருந்த 3 மர்ம நபர்கள் திடீரென சுல்தான் பாட்ஷாவை வழிமறித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1800-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுல்தான் பாட்ஷாவிடம் பணம் பறித்தது கார்த்தீஸ்வரன் என்ற குட்டை கார்த்திக், சித்திர வேல், பல்லுமணி என தெரியவந்தது.

    இவர்கள் 3 பேர் மீதும் சிவகாசி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. பணம் பறிப்பில் தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீ சார் தேடி வருகின்றனர்.

    ×