search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழிப்பு"

    கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அருவங்காடு தெற்கு ஓடை யில் சாராய ஊறல்கள் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கிரா மங்களில் சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குடிநீரை பேரல்களில் நிரப்புகின்றனர் யூரியா, மரப்பட்டை, வெல்லம் போன்ற பல்வேறு பொருட் களை பேரல் நீரில் ஊற வைக்கின்றனர்.சில நாட்கள் கழித்து பேரல்களில் ஊறிய நீரினை அடுப்பில் வைத்து காய்ச்சுகின்றனர். இது நாட்டுச் சரக்கு என்ற பெயரில் மதுப்பிரியர்களி டம் விற்கின்றனர். இது அப்பகுதியில் மட்டு மின்றி அரியலூர், விழுப்புரம், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மாநிலத்தின் ஒரு சில இடங்க ளிலும் விற்கப்படு கிறது.

    இது தொடர்பாக கள்ளக் குறிச்சி மாவட்ட போலீசா ருக்கும், கல்வராயன்மலை போலீசாருக்கும் புகார் வருவதும், இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று சாராய ஊறல்களை அழிப்ப தும் தொடர் நிகழ்வாக உள்ளது. இருந்தபோதும் இந்த சாராய ஊறல்களை வைத்திருந்தவர்கள் யார் என்பதும், அவர்கள் இன்று வரையில் கைது செய்யப் படாததும் மர்மமாகவே உள்ளது.இந்நிலையில் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அருவங்காடு தெற்கு ஓடை யில் சாராய ஊறல்கள் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் உத்தர வின்பேரில் கல்வராயன் இன்ஸ்பெக்டர் பால கிருஷ் ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடாத் திற்கு விரைந்து சென்றனர்.அங்கு 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 பேரல்களில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் இருந்ததை கண்டறிந்தனர். உடனடியாக அதனை அங்கேயே கொட்டி அழித்தனர். மேலும், இதனை காய்ச்சு வதற்காக வைக்கப்பட்டி ருந்த அடுப்பு, ஊறல்கள் செய்வதற்கான மூலப் பொருட்கள் போன்ற வற்றையும் அழித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சாராய ஊற லை வைத்திருந்தவர்யார் என்பது குறித்து விசா ரணை நடத்தி வருகின்ற னர். மேலும், அடையாளம் தெரியாத அந்த நபரை வலை வீசி தேடி வருகின்ற னர்.

    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் அருகில் உள்ள நத்தம் பள்ளி கிராமத்தில் வனப்ப குதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்காக சாராய ஊரல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கெடார் பட்டிவளவு வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக் கூடிய 3 பிளாஸ்டிக் பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். அதனை பதுக்கி வைத்த வர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • வனப்பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் அருகில் உள்ள ஓடையில் வண்டைக்காப்பாடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவத ற்காக சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெ க்டர் குணசேகரன் வண்டை க்காப்பாடி வனப்பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக் கூடிய 4 பிளாஸ்டிக் பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சாராயம் பதுக்கி வைத்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 577 கிலோ எடை உள்ள கஞ்சா நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தது.
    • இதனை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் உயர் அலுவலர்கள் முன்னிலையில் போலீசார் தீயிட்டு அழித்தனர்.

    எடப்பாடி:

    சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 577 கிலோ எடை உள்ள கஞ்சா நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தது.

    இதனை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் உயர் அலுவலர்கள் முன்னிலையில் போலீசார் தீயிட்டு அழித்தனர்.

    எடப்பாடி- சங்ககிரி பிரதான சாலையில் உள்ள மருத்துவக் கழிவு எரியூட்டும் நிலையத்தில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானிஸ்ரீ முன்னிலையில் சுமார் 577 கிலோ கஞ்சாவினை போலீசார் தீயிட்டு எரித்தனர்.

    இந்நிகழ்வின்போது டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், திருப்பூர் மாநகர துணை ஆணையர் ஆசைத்தம்பி, சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
    • கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன்மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராய ஊழல்களை கண்டுபிடித்து போலீசார் அழித்து வருகின்றனர். நேற்று முன்தினம் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல்ஹக் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண் டு மோகன்ராஜ் தலைமையில் கொண்ட போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது கோவில் மொழிபட்டு கிராமம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய மூன்று பிளாஸ்டிக் பேரல்களில் 600 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட தலைமறைவான குற்றவாளி வெங்கட்ராமன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

    • 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
    • வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையன் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் சொந்த கிராமத்தில் 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.

    எங்களுக்கு வேறு இடமோ, வீடோ இல்லை. பனைத் தொழில் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இந்த இடத்திற்கு எங்களுக்கு 2சி பட்டா வழங்கப்பட்டுள்ளது. பனை மரங்களுக்கு வரியும் நிலத்திற்கு கந்தாயர் ரசிதும் செய்து வருகிறோம்.

    ஆனால் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை இடித்தும் விவசாயத்தை அழித்தும் எங்கள் இடத்தை காலி செய்ய சொல்லியும் மிரட்டி வருகின்றனர். எனவே 3 தலைமுறையாக எங்கள் அனுபவத்தில் மற்றும் எங்களின் வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    • சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை.
    • அதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டபோது வெங்களுர் கிராமத்தில் தண்ணி பள்ளம் ஓடை அருகில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 கிலோ கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது, கஞ்சா செடிகளை பயிரிட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டபோது வெங்களுர் கிராமத்தில் தண்ணி பள்ளம் ஓடை அருகில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 கிலோ கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது,   கஞ்சா செடிகளை பயிரிட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

    • கல்வராயன் மலை, கரியாலூர் போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • அங்கு 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 8 பிளாஸ்டிக் பேரல்களில் 1600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள தாழ்மொழிபட்டு கிராமத்தின் அருகில் கல்வராயன் மலை, கரியாலூர் போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 8 பிளாஸ்டிக் பேரல்களில் 1600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை போலீசார் கண்டனர். இதனை போலீசார் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.   

    அதேபோல் கல்வராயன் மலை சிறுகலூர் கிராம தெற்கு ஓடையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி தலைமையில் தனி படை போலீசார் கல்வராயன்மலை சிறுகலூர் கிராம தெற்கு ஓடை அருகில் கள்ள சாராயம் சம்பந்தமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் லாரி டியூப்பில் 260 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையும் சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர். இதில் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மதுபான பாக்கெட்டுகள் குவியல், குவியலாக அழிக்கப்பட்டன.
    • குழி தோண்டி அதில் மதுபானங்களை கொட்டியும், காலி பாக்கெட்டுக்களும் புதைக்கப்பட்டன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு கைப்பற்றப்பட்ட கர்நாடக மதுபான பாக்கெட்டுகள் குவியல், குவியலாக அழிக்கப்பட்டன.

    ஓசூர் அருகே சானமாவு பகுதியில் மினி வேன் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த மது பாக்கெட்டுகள், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சானமாவு கிராம நிர்வாக அலுவலர் வெண்மதி ஆகியோர் முன்னிலையில் உடைக்கப்பட்டு, பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி அதில் மதுபானங்களை கொட்டியும், காலி பாக்கெட்டுக்களும் புதைக்கப்பட்டன.

    • தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஸ் நிறுத்த பயணியர் உணவகங்களை திடீர்ஆய்வு மேற்கொண்டனர்
    • காலாவதியான பால் பாக்கெட்டுகள், கிரீம் போன்றவற்றை 150 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள பயண வழி உணவகங்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என பல்வேறு புகார்கள் மீண்டும் வந்தது.அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின்படி, விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஸ் நிறுத்த பயணியர் உணவகங்களை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். சுகந்தன் அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன் , பிரசாத், பத்மநாபன் , ஸ்டாலின் ராஜரத்தினம் மற்றும் கதிரவன், ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின் போது 2 உணவகங்களின் சமையல் கூடம் சுகாதாரமின்றி காணப்பட்டதை தொடர்ந்து அந்த உணவகங்களுக்கு முன்னேற்ற அறிக்கை வழங்கி அவற்றை தற்காலிகமாக நிறுத்தவும் செய்து குறைகளை சரி செய்த பின் மீண்டும் திறக்க அறிவுறுத்தப்பட்டது.மேலும் 2 உணவகங்கள் சுகாதார வழிமுறைகள் பின்பற்றாத காரணத்தால் அவற்றிற்கு தலா ரூ,2000அபராதம் விதிக்கப்பட்டதுஆய்வின்போது உணவகங்களில் மீதமான வெஜிடபிள் பிரியாணி ,காலாவதியான பால் பாக்கெட்டுகள், கிரீம் கேக் மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத பாதாம் குளிர்பானங்கள் , சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள் ஆகியவை சுமார் 150 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    ஆய்வின் போது உணவக நடத்துவோருக்கு குறைகளை சுட்டி காட்டி 7 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி 15 நாட்களுக்குள் சரி செய்ய அறிவுறுத்தப் பட்டது. தவறும் பட்சத்தில் சட்டபடியான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயணியர்களிடமும் அவ ர்களை கருத்துக்களை கேட்டு அறிந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.இதனால் இரவு நேரத்தில் பரபரப்பு நிலவியது.

    • டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டது,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, பண்ருட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள டீக்கடைகள் உணவகங்கள் பழக்கடை குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது காலா வதியான பொருட்கள், குளிர்பானங்கள், கலப்பட டீ தூள், பழக்கடைகளில் கார்போக்கல் வைத்து பழங்கள் பழுக்க வைக்க படுகிறதா என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர் 2 டீக்கடைகளில் கலப்பட தூள் வைத்திருந்த 2 கிலோ டீ தூள் அழிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    • சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி மார்க்கெட்டில் வாழைப்பழம் செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • உணவு அதிகாரிகள் நடவடிக்கையால் 195 கிலோ வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி மார்க்கெட்டில் வாழைப்பழம் செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு நடத்தினார். இதில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 195 கிலோ வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அத்துடன் செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்தப்பட்ட ரசாயனம் 150 மி.லி. பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் மற்றும் ரசாயனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன, ஆய்வு செய்யப்பட்ட 7 பழக்கடைகளில் 2 கடைகளில் மட்டுமே உணவு பாதுகாப்பு உரிமம் பார்வையில் வைக்கப்பட்டிருந்தது. மற்ற கடைகளில் உரிமம் பார்வையில் வைக்கப்படவில்லை. ரசாயனம் கலந்து பழங்கள் பழுக்க வைத்த 3 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த கடைகள் யாவும் உணவு பாதுகாப்பு துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் தெரிவித்தார்.

    ×