search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி டிரைவர் கொலையில் மற்றொரு சகோதரருக்கு வலைவீச்சு
    X

    லாரி டிரைவர் கொலையில் மற்றொரு சகோதரருக்கு வலைவீச்சு

    • லாரி டிரைவர் கொலையில் மற்றொரு சகோதரருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
    • ராஜபாளையம் அருகே ெசாத்து தகராறில் தீர்த்துக்கட்டினர்.

    ராஜபாளையம்

    தென்காசி மாவட்டம் சிவகிரியை ேசர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியின் மகன் முருகன்(வயது40), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஜீவாநகர் பகுதியில் வசித்து வந்தார். லாரி டிரைவரான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

    முத்துசாமியின் 2-வது மனைவிக்கு ஞானகுருசாமி, காளிதாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி குடும்பத்தினருக்கும், 2-வது மனைவி குடும்பத்தி னருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன், மகன் மற்றும் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். குழந்தைகள் இருவரும் முன்னே நடந்து செல்ல, பின்னால் அவர்களின் பைகளை சைக்கிளில் வைத்துக் கொண்டு சென்றார்.

    ஜீவா நகர் பகுதியில் சென்றபோது, திடீரென்று 2 பேர் ஓடி வந்து அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு கழுத்தில் வெட்டு விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறுிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அருகில் இருந்த பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் அரிவாளுடன் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து ேபாலீசார் விசாரித்தனர்.

    அதில் அவர் முத்துசாமியின் 2-வது மனைவியின் மகன் ஞான குருசாமி(38) என்பதும், தனது சகோதரர் காளி தாசுடன் சேர்ந்து அண்ணன் முருகனை கொலை செய்து விட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ேபாலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய காளிதாசை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×