search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிஷப் பண்ட்"

    • 2016-ம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அறிமுகம் ஆனார்.
    • 2018 சீசனில் 14 போட்டிகளில் 684 ரன்கள் குவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். இன்று ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது.

    இதில் ரிஷப் பண்ட் விளையாட இருக்கிறார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100-வது போட்டியில் விளையாட இருக்கிறார். மேலும், டெல்லி அணிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார்.

    ரிஷப் பண்ட் 99 போட்டிகளில் விளையாடி 2,856 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 34.40 ஆகும். ஸ்டிரைக் ரேட் 147.90 ஆகும். 99 இன்னிங்சில் 15 அரைசதம், ஒரு சதம் விளாசியுள்ளார். ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் அடித்தது அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    டேவிட் வார்னர் டெல்லி அணிக்காக 2,433 ரன்கள் அடித்துள்ளார். சேவாக் 2,382 ரன்கள் அடித்துள்ளார்.

    2016-ல் 10 போட்டிகளில் 198 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். 2017-ல் 14 போட்டிகளில் 366 ரன்கள் அடித்துள்ளார். 2018 சீசன் அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. அதில் 14 போட்டிகளில் 684 ரன்கள் குவித்தார். சராசரி 52.62 ஆகும். ஸ்டிரைக் ரேட் 173.6 ஆகும்.

    • ரிஷப் பண்ட் 13 பந்தில் 18 ரன்கள் அடித்தார். இதில் 2 பவுண்டரி அடங்கும்.
    • ஒரு கேட்ச் பிடித்ததுடன் ஒரு ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 15 மாதங்களுக்கு பிறகு இன்று போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்கினார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக 13 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் அடங்கும்.

    இந்த போட்டியில் டெல்லி அணி 174 ரன்கள் அடித்த போதிலும், பஞ்சாப் அணி சேஸிங் செய்துவிட்டது. போட்டி முடிந்த பின் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    தனிப்பட்ட முறையில் பேட்டிங் செய்யும்போது மிகவும் பதட்டம் அடைந்தேன். நீங்கள் களத்தில் இறங்கும்போது இதை எதிர்கொண்டுதான் செல்ல வேண்டும். பதட்டம் அடைவது இது முதல்தடவை அல்ல. ஆனால் மீண்டும் போட்டி கிரிக்கெட்டிற்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நாங்கள் பேட்டிங் சற்று சறுக்கிய நிலையில், இஷாந்த் சர்மா காயம் அடைந்தது, ஒரு பந்து வீச்சாளர் குறைவு என்பதை தெளிவாக காட்டியது. நாங்கள் நல்ல ஸ்கோர்தான் அடித்திருந்தோம். ஆனால், ஒரு பந்து வீச்சாளர் குறைவு என்றபோதிலும், மேலும் இதுகுறித்து பேச முடியாது.

    நாங்கள் எதிர்பார்த்தபடி ஆடுகளம் வேலை செய்தது. காரணங்கள் ஏதும் கூற முடியாது. நாங்கள் இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். ஆனால், ஒரு பந்து வீச்சாளர் குறைவு என்பது நல்லதல்ல. கூடுதல் பந்து வீச்சாளர் என்பதில் எங்களுக்கு குறை இருந்தது. நாங்கள் முற்றிலும் விளையாட்டை எங்கள் பக்கம் கொண்டு வர முடியவில்லை. இது விளையாட்டின் ஒருபகுதிதான்.

    இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்தார்.

    விக்கெட் கீப்பிங் பணியில் ஒரு கேட்ச் பிடித்ததுடன், அட்டகாசமான வகையில் ஒரு ஸ்டம்பிங் செய்தார்.

    • ரிஷப் பண்ட் 13 பந்தில் 2 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்தார்.
    • அபிஷேக் பொரேல் 10 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் தவான் பந்து வீச்சை தேர்வை செய்தார்.

    அதன்படி டெல்லி அணியின் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். என்றபோதிலும் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. டேவிட் வார்னர் 21 பந்தில் 29 ரன்களும், மிட்செல் மார்ஷ் 12 பந்தில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த ஷாய் ஹோப் 25 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 13 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

    ரிஷப் பண்ட் அவுட்டாகும்போது டெல்லி அணி 12.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் டெல்லி அணியின் ரன் குவிக்கும் வேகத்தில் தடை ஏற்பட்டது.

    அக்சார் பட்டேல் 13 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். அபிஷேக் பொரேல் அதிரடியாக விளையாட டெல்லி அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது.

    அபிஷேக் பொரேல் கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் விரட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பொரேல் 10 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ரிஷப் பண்ட்

    ஹர்ஷல் பட்டேல் கடைசி ஓவரில 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார். முதல் 3 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ரிக்கி புய், 6. டிரிஸ்டான் ஸ்டப்ஸ், 7. அக்சார் பட்டேல், 8. சுமித் குமார், 9. குல்தீப் யாதவ், 10. கலீல் அகமது, 11. இஷாந்த் சர்மா.

    பஞ்சாப் கிங்ஸ் அணி விவரம்:-

    1. தவான், 2. பேர்ஸ்டோ, 3. சாம் கர்ரன், 4. லிவிங்ஸ்டன், 5. ஜிதேஷ் சர்மா, 6. ஹர்ப்ரீத் பிரார், 7. ஹர்ஷல் பட்டேல், 8. ரபடா, 9. ராகுல் சாஹர், 10. அர்ஷ்தீப் சிங், 11. ஷஷாங்க் சிங்.

    • ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • கொல்கத்தா 16 போட்டியிலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    மொகாலி:

    ஐ.பி.எல்.போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    மொகாலியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கார் விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் 14 மாதங்களுக்கு பிறகு களம் இறங்குகிறார். முழு உடல் தகுதியுடன் இருக்கும் அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த சீசனில் அவர் இல்லாத டெல்லி அணி 10-வது இடத்தை பிடித்தது. தற்போது ரிஷப் பண்ட் வருகையால் டெல்லி அணியின் செயல்பாடு மேம்பாடு அடையலாம். பஞ்சாப் அணி கடந்த சீசனில் 8-வது இடத்தை பிடித்தது. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன.

    இரு அணிகளும் 32 முறை மோதியுள்ளன. இதில் தலா 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி 15 ரன்னில் வெற்றி பெற்றது.

    இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    சொந்த மண்ணில் கொல்கத்தா வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஐதராபாத் அணி வெல்லும் வகையிலும் சவால் கொடுத்து விளையாடும்.

    இரு அணிகளும் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 16 போட்டியிலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு கடைசியாக மோதிய போட்டியில் கொல்கத்தா 5 ரன்னில் வெற்றி பெற்றது. 

    • கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை.
    • கடந்த சில நாட்களுக்கு முன் உடற்தகுதி பெற்றதாக பிசிசிஐ அறிவித்தது.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கார் விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு உடற்தகுதி பெற்று ஐபிஎல் போட்டியில் களம் இறங்க இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் விக்கெட் கீப்பர் பணியுடன், சிறப்பாக பேட்டிங் செய்தால் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    இதுவரை ஐபிஎல்-லில் களம் இறங்கிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், தற்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஆட்டத்தை மீண்டும் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன் என சுமித் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்டீவன் சுமித் கூறுகையில் "ரிஷப் பண்ட் ஆட்டத்தை மீண்டும் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், கடினமான காலத்தை கடந்து வந்துள்ளார். மீண்டும் அவரை களத்தில் பார்க்க இருப்பது சிறப்பானது. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்வார்.

    ஆகவே, அவரது எண்ணம் விளையாட்டில் எப்படி செல்கிறது என்று பார்க்க வேண்டும். தன்ன வலுக்கட்டாயமாக மீண்டும் பழைய விளையாட்டுக்கு இழுத்துச் செல்வார் என நினைக்கிறேன். அவர் சூப்பர் ஸ்டார். அவர் விளையாடிய வகையில் மிடில் ஆர்டரில் யாரும் விளையாட முடியாது. அவர் ஆக்ரோசமாக விளையாடுபவர். விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். ஆவர் ரிஷப் பண்ட் மட்டுமே என்று நினைக்கிறேன்" என்றார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2022-ம் ஆண்டு கார் விபத்திற்குப் பிறகு போட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
    • ஐபிஎல் 2024 சீசனில் பேட்டிங் மட்டும் செய்வார் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நம்பிக்கை தெரிவித்திருந்தது.

    இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கடந்த 2022-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார்.

    கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 ஐபிஎல் சீசன் ஆகியவற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

    விபத்து மூலம் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட நிலையில், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் மீண்டும் விளையாட்டு போட்டிக்கு திரும்புவதற்கான உடற்திறன் சார்ந்த பயிற்சியை மேற்கொண்டு வந்தார். மெல்ல மெல்ல பேட்டிங் செய்வதற்கு ஏற்ப அவர் உடற்தகுதி பெற்று வந்தார்.

    இதனால் 2024 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவார் என அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வந்தது. பேட்ஸ்மேனாக களம் இறங்குவார். ஆனால் விக்கெட் கீப்பராக செயல்படுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்று விட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்படவும் அனுமதி அளித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று, ரிஷப் பண்ட் சிறப்பான வகையில் விக்கெட் கீப்பராக பணியாற்றினால் டி20 உலகக் கோப்பைப்கான இந்திய அணியில் இடம்பெற பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 14 மாதங்கள் உடற்திறன் சார்ந்த பயிற்சியை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது உடற்தகுதி பெற்று விட்டதாக பிசிசிஐயின் மருத்துவக்குழு அறிவித்துள்ளது.

    அதேவேளையில் காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றம் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் 2024 ஐபிஎல் சீசனில் விளையாடமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளது.

    • காயத்தில் இருந்து தேறியுள்ள ரிஷப் பண்ட் தற்போது நன்றாக பேட்டிங் செய்கிறார்.
    • விரைவில் அவர் முழு உடல்தகுதியை எட்டி விடுவார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் தப்பினார். கால்முட்டியில் ஆபரேஷன் செய்து கொண்ட அவர் 17-வது ஐ.பி.எல். தொடர் மூலம் மறுபிரவேசம் செய்வதற்காக தயாராகி வருகிறார்.

    இந்த நிலையில் இவர்களது உடல்தகுதி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காயத்தில் இருந்து தேறியுள்ள ரிஷப் பண்ட் தற்போது நன்றாக பேட்டிங் செய்கிறார். விக்கெட் கீப்பிங்கும் செய்கிறார். விரைவில் அவர் முழு உடல்தகுதியை எட்டி விடுவார். ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவர் விளையாடினால் பெரிய பலமாக இருக்கும். அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து.

    சிக்கலின்றி விக்கெட் கீப்பிங் பணியை அவர் தொடரும் பட்சத்தில், அவரால் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விளையாட முடியும். அதற்கு முன்னோட்டமாக ஐ.பி.எல். போட்டியில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்கலாம்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு குறித்து கேட்கிறீர்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இது ஒரு நிறுவனம் அல்ல. எனவே இதில் யாரும் முதலீடு செய்ய முடியாது.

    இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.

    • ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.
    • இந்த கருத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

    பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலாவில் நடக்க உள்ளது.

    இந்நிலையில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார். இந்த கருத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து (2021) கடந்து முறை விளையாடியதை விட இந்த முறை சிறப்பாக விளையாடி உள்ளது. பேஸ்பால் என்றால் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒருவர் இருந்தார். அவர் விளையாடியதை பென் டக்கெட் பார்த்ததில்லை போல.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார்.
    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

    இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அதன்பின் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப தயாராக உள்ளார்.

    இம்மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாட உள்ளார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிறுவர்களுடன் கோலி குண்டு விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

    • ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார்

    கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும். இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார் என்றும், விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • 17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது.

    17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடக்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஐபிஎல் சீசனில் உறுதியாக விளையாடுவேன் என ரிஷப் பண்ட் கூறினார். ஆனால் அவரால் தொடர் முழுவதும் கீப்பிங் செய்ய முடியுமா? அணியை வழிநடந்துவரா என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆரம்ப காலங்களில் டோனியுடன் தம்மை ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்ததால் பலமுறை அறைக்குள் சென்று அழுததாக ரிசப் பண்ட் கூறினார்.
    • இளம் வீரர் மீது ஏன் ரசிகர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்? ஒப்பிட வேண்டும் என பண்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் டெல்லியை சேர்ந்தவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக அறிமுகமானார். இவர் டோனிக்கு அடுத்தப்படியாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டோனியை மிஞ்சும் அளவுக்கு அசத்திய ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்தார். அதே போல 2021 காபா போன்ற சில மறக்க முடியாத வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார். டோனி ஓய்வு அறிவித்த பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பண்ட் செயல்பட்டார்.

    இந்நிலையில் ஆரம்ப காலங்களில் டோனியுடன் தம்மை ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்ததால் பலமுறை அறைக்குள் சென்று அழுததாக ரிசப் பண்ட் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் ஏன் கேள்விகள் எழுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அணிக்குள் நுழைந்ததும் என்னை டோனியின் மாற்றாக இருப்பார் என்று அனைவரும் பேசினார்கள்.

    ஆனால் இளம் வீரர் மீது ஏன் ரசிகர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்? ஒப்பிட வேண்டும்? 500 போட்டிகளில் விளையாடிய ஒருவருடன் 5 போட்டியில் விளையாடிய ஒருவரை ஒப்பிடக்கூடாது. அந்த வகையில் என்னுடைய பெரிய பயணத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருந்தது. அதில் மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டது மோசமான உணர்வை கொடுத்தது.

    அதனால் 20 - 21 வயதிலேயே மனதளவில் மூச்சு விட முடியாத அளவுக்கு அழுத்தத்தை சந்தித்தேன். அறைக்குள் சென்று அழுவேன். மொஹாலியில் ஸ்டம்ப்பிங்கை நான் தவற விட்ட போது ரசிகர்கள் டோனி டோனி என்று முழங்கினர். இருப்பினும் டோனியுடனான என்னுடைய உறவை விவரிப்பது கடினமாகும். அவருடன் நான் எப்போதும் சுதந்திரமாக பேசி மற்றவர்களுடன் விவாதிக்காததை கூட விவாதிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரிஷப் பண்ட் சொல்வது போல 500 போட்டிகள் விளையாடியவருடன் எப்படி ஒப்பிட முடியும். டோனி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய முதல் சில போட்டிகளில் நிறைய கேட்ச் மிஸ், ஸ்டெம்பிங் மிஸ் செய்துள்ளார். ஒரு கேட்ச் மிஸ் செய்யும் போது நெஹ்ரா கூட டோனியை திட்டியுள்ளார். அந்த வீடியோ கூட சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதேபோல கேஎல் ராகுல் கீப்பிங் செய்யும் போது கூட கேட்ச் மிஸ் செய்தால் உடனே ரசிகர்கள் டோனி டோனி என கூச்சளிடுவது நடந்திருக்கிறது. புதிதாக அணிக்கு வரும் ஒவ்வொருவரும் பதட்டத்துடன் தான் விளையாடுவார்கள். இதுபோன்ற பிரச்சனை இருப்பது வழக்கம்தான். ஆனால் இதை வைத்து கொண்டு மற்றவருடன் ஒப்பிடுவது சரியாகாது.

    ×