search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டீவன் சுமித்"

    • கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை.
    • கடந்த சில நாட்களுக்கு முன் உடற்தகுதி பெற்றதாக பிசிசிஐ அறிவித்தது.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கார் விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு உடற்தகுதி பெற்று ஐபிஎல் போட்டியில் களம் இறங்க இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் விக்கெட் கீப்பர் பணியுடன், சிறப்பாக பேட்டிங் செய்தால் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    இதுவரை ஐபிஎல்-லில் களம் இறங்கிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், தற்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஆட்டத்தை மீண்டும் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன் என சுமித் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்டீவன் சுமித் கூறுகையில் "ரிஷப் பண்ட் ஆட்டத்தை மீண்டும் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், கடினமான காலத்தை கடந்து வந்துள்ளார். மீண்டும் அவரை களத்தில் பார்க்க இருப்பது சிறப்பானது. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்வார்.

    ஆகவே, அவரது எண்ணம் விளையாட்டில் எப்படி செல்கிறது என்று பார்க்க வேண்டும். தன்ன வலுக்கட்டாயமாக மீண்டும் பழைய விளையாட்டுக்கு இழுத்துச் செல்வார் என நினைக்கிறேன். அவர் சூப்பர் ஸ்டார். அவர் விளையாடிய வகையில் மிடில் ஆர்டரில் யாரும் விளையாட முடியாது. அவர் ஆக்ரோசமாக விளையாடுபவர். விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். ஆவர் ரிஷப் பண்ட் மட்டுமே என்று நினைக்கிறேன்" என்றார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

    • 2023 சீசனில் ஸ்டீவன் சுமித் விளையாடவில்லை.
    • 2024 சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியும் அவர் ஏலம் எடுக்கவில்லை.

    ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித். சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வரும் இவரால், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்க முடியவில்லை. இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இவரால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

    இதன்காரணமாக 2024 சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்த முறையும் இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

    இந்த நிலையில் ஸ்டீவன் சுமித் அதிகாரப்பூர்வ ஆங்கில வர்ணனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முதன்முறையாக மைக் பிடித்து வர்ணனை செய்ய இருக்கிறார். இந்திய வீரர் முரளி கார்த்திக் இதற்கு முன்னதாக வியைளாடிக் கொண்டிருக்கும்போது வர்ணனை செய்துள்ளார். அதேபோல் சுமித் தற்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.

    இவருடன் ஹர்ஷா போக்லோ, சுனில் கவாஸ்கர், லட்சுமண் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், நிக் நைட், பொம்மி பங்க்வா, டேனி மோரிசன், சைடன் டவுல், ஏபி டி வில்லியர்ஸ், மேத்யூ ஹெய்டன், தீப் தாஸ் குப்தா, அன்சும் சோப்ரா, இயன் பிஷப், ஆலன் வில்கின்ஸ், கெவின் பீட்டர்சன் ஆகியோர் ஆங்கில வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர்.

    ×