search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.. கம்பேக் கொடுக்கும் ரிஷப் பண்ட்
    X

    நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.. கம்பேக் கொடுக்கும் ரிஷப் பண்ட்

    • 17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது.

    17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடக்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஐபிஎல் சீசனில் உறுதியாக விளையாடுவேன் என ரிஷப் பண்ட் கூறினார். ஆனால் அவரால் தொடர் முழுவதும் கீப்பிங் செய்ய முடியுமா? அணியை வழிநடந்துவரா என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×