என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Risbhabh pant"

    • ரிஷப் பண்ட் 13 பந்தில் 18 ரன்கள் அடித்தார். இதில் 2 பவுண்டரி அடங்கும்.
    • ஒரு கேட்ச் பிடித்ததுடன் ஒரு ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 15 மாதங்களுக்கு பிறகு இன்று போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்கினார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக 13 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் அடங்கும்.

    இந்த போட்டியில் டெல்லி அணி 174 ரன்கள் அடித்த போதிலும், பஞ்சாப் அணி சேஸிங் செய்துவிட்டது. போட்டி முடிந்த பின் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    தனிப்பட்ட முறையில் பேட்டிங் செய்யும்போது மிகவும் பதட்டம் அடைந்தேன். நீங்கள் களத்தில் இறங்கும்போது இதை எதிர்கொண்டுதான் செல்ல வேண்டும். பதட்டம் அடைவது இது முதல்தடவை அல்ல. ஆனால் மீண்டும் போட்டி கிரிக்கெட்டிற்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நாங்கள் பேட்டிங் சற்று சறுக்கிய நிலையில், இஷாந்த் சர்மா காயம் அடைந்தது, ஒரு பந்து வீச்சாளர் குறைவு என்பதை தெளிவாக காட்டியது. நாங்கள் நல்ல ஸ்கோர்தான் அடித்திருந்தோம். ஆனால், ஒரு பந்து வீச்சாளர் குறைவு என்றபோதிலும், மேலும் இதுகுறித்து பேச முடியாது.

    நாங்கள் எதிர்பார்த்தபடி ஆடுகளம் வேலை செய்தது. காரணங்கள் ஏதும் கூற முடியாது. நாங்கள் இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். ஆனால், ஒரு பந்து வீச்சாளர் குறைவு என்பது நல்லதல்ல. கூடுதல் பந்து வீச்சாளர் என்பதில் எங்களுக்கு குறை இருந்தது. நாங்கள் முற்றிலும் விளையாட்டை எங்கள் பக்கம் கொண்டு வர முடியவில்லை. இது விளையாட்டின் ஒருபகுதிதான்.

    இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்தார்.

    விக்கெட் கீப்பிங் பணியில் ஒரு கேட்ச் பிடித்ததுடன், அட்டகாசமான வகையில் ஒரு ஸ்டம்பிங் செய்தார்.

    • காதலை இரு வீட்டாரும் ஏற்காததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி.
    • காதலி உயிரிழந்த நிலையில், ரஜத் குமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷிப் பண்ட். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி டெல்லியில் இருந்து டேராடூனுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளாகி எரியத் தொடங்கியது.

    அதிகாலை நேரத்தில் கார் எரிந்து கொண்டிருப்பதை கண்ட ரஜத் குமார் மற்றும் அவரது நண்பர் நிஷு உடனடியாக காரில் சிக்கிக் கொண்டிருந்த நபரை மீட்டனர். அப்போதுதான் அது ரிஷிப் பண்ட் என அவர்களுக்கு தெரியவந்தது.

    படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிய ரிஷப் பண்ட்-ஐ உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவினர். துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து மீட்டதால் ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஜத் குமார் மற்றும் அவரது நண்பர் நிஷு ஆகியோருக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில்தான் ரஜத்தின் காதல் விவகாரத்தில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது. 25 வயதான ரஜத் 21 வயதான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வெறு பிரிவினர் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்னதாக இருவரும் விஷம் குடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் ரஜத் காதலியை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்த்த நிலையில், காதலியின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல குறியாக இருந்தனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    காதலி உயிரிழந்த நிலையில் ரஜத்தை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். ரஜத்தை ரிஷப் பண்ட் இன்னும் ஒரிரு நாட்களில் நேரில் சென்ற பார்க்க வாய்ப்புள்ளதாக, ரிஷப் பண்டின் தனிப்பட்ட உதவியாளரை மேற்கோள் காட்டி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    நட்சத்திர கிரிக்கெட் வீரரை காப்பாற்றி அந்த பகுதியில் ஹீரோவாக வலம் வந்த ரஜத்தின் காதல் வெற்றி பெறாத நிலையில் காதலி உயிரிழந்ததை சம்பவம் அப்பகுதி மக்களுக்கு வேதளையளித்துள்ளது.

    ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ரிஷப் பந்த் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளார். புஜாரா 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முந்தினார். #ICC
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் ரிஷப் பந்த். 21 வயதே ஆகும் இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்தார். அதன்பின் இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் இரண்டு முறை 92 ரன்கள் அடித்தார்.

    தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 7 இன்னிங்சில் 350 ரன்கள் குவித்தார். சிட்னியில் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் விளாசினார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரிஷப் பந்த் தலா இரண்டு சதம், அரைசதங்களுடன் 696 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 49.71 ஆகும்.

    ஆஸ்திரேலியா தொடரில் 350 ரன்கள் குவித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 21 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னிலை வகித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதற்குமுன் டோனி 19-வது இடத்தை பிடித்ததுதான் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் சிறப்பான தரவரிசையாக இருந்தது.

    அத்துடன் 673 புள்ளிகள் பெற்று ரிஷப் பந்த் முதல் இடத்தில் உள்ளார். இதற்கு முன் டோனி 662 புள்ளிகளும், பரூக் இன்ஜினீயர் 619 புள்ளிகளும் பெற்றிருந்தனர்.

    ஆஸ்திரேலியா தொடர் தொடங்குதவற்கு முன் 59-வது இடத்தில் இருந்தார். 20 கேட்ச்கள் பிடித்ததுடன், 350 ரன்களும் குவித்ததன் மூலம் 17-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    மூன்று சதங்களுடன் 521 ரன்கள் குவித்த புஜாரா 4-வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
    ×