search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மையம்"

    • மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
    • தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் -2 பொதுத்தோ்வு இன்று தொடங்கியது.

    அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு 225 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 29 ஆயிரத்து 888 மாணவ- மாணவிகளுக்கு பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தனர்.

    இவா்களில் 14 ஆயிரத்து 641 மாணவா்களும், 15 ஆயிரத்து 247 மாணவிகளும் அடங்கும்.

    281 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுத வசதியாக அவர்களுக்கு தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    இன்று காலை மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வந்தனர்.

    முன்னதாக மாணவ- மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்தனர்.காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

    மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    செல்போன், கால்கு லேட்டர் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.

    அதன் பின்னர் மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர். மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.

    இது தவிர உடல் ஊனமுற்றோர், கண் பார்வை யற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவர்த்திக்கொன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.

    இத்தோ்வில் முறைகே டுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்ப ட்டுள்ளன.

    இப்பணிகளில் பறக்கும் படையினா், கண்காணிப்பாளா்கள், அறை கண்காணிப்பாளா்கள் என சுமார் 2 ஆயிரம் ஆசிரியா்களும், ஆசிரியா் அல்லாத கல்வித் துறைப் பணியாளா்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அவர்கள் தேர்வு மையங்களில் சென்று ஆய்வு செய்தனர்.

    தேர்வை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து மையங்களில் குடிநீா் வசதி, தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    • தேர்வு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • மேலும், 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட த்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 6528 ஆண்கள் மற்றும் 7502 பெண்கள் உட்பட மொத்தம் 14,030 மாணவ மாணவியர்கள் 69 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

    இதில் 116 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசின் வழிக்காட்டுதலின்படி சொல்வதை எழுதுபவர், ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதில் விலக்கு, கூடுதலாக ஒரு மணிநேரம் ஆகிய சலுகைகள் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் வழங்கப்பட்டுள்ளன.

    தேர்வுக்கான வினாத்தாட்கள் 6 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

    இம்மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இத்தேர்வுப்பணிக்கு 1,161 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

    தேர்வுகளை கண்காணிக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
    • பிளஸ்-1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 3,892 மாணவர்களும், 4,320 மாணவிகளும் என மொத்தம் 8,212 பேர் எழுதுகின்றனர்.

    அதேபோல பிளஸ்-1 பொதுத் தேர்வை 3,420 மாணவர்களும், 4,122 மாணவிகளும் என மொத்தம் 7,542 பேர் எழுதுகின்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 4,547 மாணவர்களும், 4,277 மாணவிகளும் என மொத்தம் 8,824 பேர் எழுதுகின்றனர்.

    பிளஸ்-1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நாகையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் ஆசீர்வதித்து நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் என அறிவுரை கூறினார்.

    இந்த பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினர், 56 நிலையான பறக்கும் படை உறுப்பினர்களும் தயாராக உள்ளனர் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தேர்வு மையங்களில் தேர்வு எண் எழுதும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

    • தஞ்சாவூரில் மொத்தமாக 1212 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர்.
    • மையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் கடந்த 3-ம் தேதி தாய் சேய் நலம் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மையத்தை நடிகர் சசிகுமார் நேற்று மாலை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்–களிடம் கூறியதாவது:-

    தஞ்சாவூரில் படப்பிடிப்பில் இருந்தேன்.

    இங்கு தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தை பார்வை–யிட்டேன்.

    இந்த திட்டமானது பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். கர்ப்பிணி காலங்களில் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சி மேயர் அனைத்து பெண்களுக்கும் வழங்கி வருகிறார்.

    தஞ்சாவூரில் மொத்தமாக 1212 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர்.

    அவர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்படும் அனைத்து மருத்துவ சேவைகள் மற்றும் ஊட்டச்–சத்துக்கள் அனைத்தும் வீடுகளுக்கு நேரடியாக சென்றும் இங்கு வர வைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சையில் தொடங்கியது போல அனைத்து மாவட்டங்–களிலும் தாய் சேய் நலம் கண்காணிப்பு மையம் தொடங்க வேண்டும்

    கர்ப்பிணி காலங்களில் தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றுவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

    இந்த மையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் பேசினேன். இந்த திட்டம் எங்களுக்கு மிக பயனுள்ளதாக உள்ளது.

    இந்தத் திட்டத்தை நிறைவேற்றி தந்த தஞ்சை மாநகராட்சி மேயருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள் என்று அவர் கூறினார்.

    பேட்டியின் போது மேயர் சண்.ராமநாதன், பேட்டியின் போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, இளநிலை பொறியாளர் ஜெகதீசன், கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சு கூட்டு விலை அருந்ததியார் காலனியில் விஜய்வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார். விஜய் வசந்த் எம். பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏ.டி.எம். மையத்தின் அருகே 3 பவுன் தங்க சங்கிலி கீழே கிடந்தது.
    • விசாரணையில் குரங்கு புத்துரை சேர்ந்த பிரவீன் தாஸ் என்பவருக்கு சொந்தமான செயின் என தெரியவந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலையூரில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு அதே பகுதியை சேர்ந்த கிராம சுகாதார செவிலியர் மகாலட்சுமி சென்றிருந்தார்.

    அப்போது ஏடிஎம் மையத்தின் அருகே 3 பவுன் தங்க சங்கிலி கீழே கிடப்பதை பார்த்துள்ளார். அந்த சங்கிலியை பூம்புகார் இன்ஸ்பெக்டர் நகரத்தினத்திடம் மகாலட்சுமி ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் குரங்கு புத்துரை சேர்ந்த பிரவீன் தாஸ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்ததையடுத்து சங்கிலி உரியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.தங்க சங்கிலியை ஒப்படைத்த சுகாதார செவிலியர் மகாலட்சுமியின் செயலுக்கு இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார், கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிலையில் செவிலியர் மகாலட்சுமி செயலை பாராட்டி மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    • இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்?
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள கீழமணக்குடியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இதன் அருகே வீடுகள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர் உள்ளே புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    மேலும் அங்கிருந்த மானிட்டர், கேமரா ஆகியவற்றை உடைத்துள் ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று உள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம்.எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    மேலும் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வளர் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • அதன்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முகாம் நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டத்தில் ஒன்று படுவோம், உறுதி ஏற்போம் திட்டத்தின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள், அந்தந்த பகுதி வளர் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. அதன்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, தனது தாயை 2-வதாக திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் (வயது 40) என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக புகார் கூறினார். இது குறித்து விசாரணை செய்ததில் சிறுமி கூறியது உண்மை என தெரியவந்தது.

    இதை அடுத்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் சவுண்டேஸ்வரி மற்றும் அதிகாரிகள் குமாரபாளையம் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு இருந்த பிரகாஷ் மற்றும் சிறுமியின் தாய் துளசி (35) ஆகிய 2 பேரையும் திருச்செங்கோடு மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அச்சிறுமி துளசியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்துள்ளது. சிறுமி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    • பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் ‘செல்லப்பிள்ளை’ மையம் தொடங்கப்பட்டது
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் 'செல்லப்பிள்ளை' பச்சிளம் குழந்தை பராம ரிப்பு ஆலோசனை மையம் திறக்கப்பட்டது.

    இந்த மையத்தை திறந்து வைத்து கலெக்டர் கவிதா ராமு பேசியதாவது :

    தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படு த்தும் வகையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 'செல்லப்பிள்ளை' பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால்.

    தாய்ப்பால் கொடுப்பதில் தாய்க்கு மட்டும் பங்கு இல்லை. அவருடன் இருப்பவர்களும் இது குறித்த போதுமான விழிப்புணர்வு பெற வேண்டும். தாய்ப்பால் அளித்து வந்தால் குழந்தையின் எடை கூடும். அடிக்கடி சளி பிடிக்காது. ஆஸ்துமா பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு ஏற்டாது. உடல் பருமன், இதய நோய்களை தடுக்கலாம். குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் மட்டுேம கொடுக்க வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து உரிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கட்டுரைப் போட்டி, ஓவிய ப்போட்டி மற்றும் ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • இந்த தேர்வுக்கு 67 ஆயிரத்து 728 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 8 மணி முதலே மையத்துக்கு தேர்வர்கள் வர தொடங்கினர்.
    • பூதலூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மையங்களில் தாம தமாக வந்த தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகஅரசின்பல்வேறு துறைகள் மற்றும்நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும்வகையில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நில அளவையர் போன்ற பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

    தஞ்சை மாவட்டத்தில் 239 மையங்களில் குரூப்-4 தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு 67 ஆயிரத்து 728 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 8 மணி முதலே மையத்துக்கு தேர்வர்கள் வர தொடங்கினர். 9 மணிக்கு அவர்கள் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

    தேர்வு சரியாக 9.30 மணிக்கு தொடங்கிமதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. 12.45 மணிக்கு பிறகே அவர்கள் மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    மாவட்டத்தில் பூதலூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மையங்களில் தாம தமாக வந்த தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியாமல் திரும்பி சென்றனர். தேர்வை முன்னிட்டு மாவட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப ட்டன.

    • தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • 8-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என 171 பேர் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேட்டில் உள்ள தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவை, காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்பட 25 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தி தங்களுக்கு தேவையான தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்தது. 8-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என 171 பேர் பங்கேற்றனர். இதில் 102 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.இந்த தகவலை ேவலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மதுரையில் இன்று 13 மையங்களில் 8,833 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
    • மதியம் 1.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    மதுரை

    மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் இன்று தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இதற்காக தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன.

    மதுரை மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 8833 மாணவ- மாணவியர் கலந்து கொண்டு நீட் தேர்வு எழுதினார்கள். மதியம் 2 மணி அளவில் தேர்வு தொடங்கி, மாலை 5.20 மணி வரை நடக்கிறது. முன்னதாக மதியம் 1:30 மணிக்குள் மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    நீட் தேர்வுக்காக வந்திருந்த மாணவ-மாணவிகள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் இன்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி மாணவர்களின் ஆவணங்கள் பரிசோதிக்கப் பட்டன.

    அடுத்தபடியாக ஆடை கட்டுப்பாடு உட்பட இதர வழிகாட்டு நெறிமுறைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் பிறகு மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைத்து தேர்வு அறையிலும் சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 1500 மாண வர்கள் குறைவாக தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×