search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் நெறி"

    • தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • 8-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என 171 பேர் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேட்டில் உள்ள தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவை, காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்பட 25 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தி தங்களுக்கு தேவையான தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்தது. 8-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என 171 பேர் பங்கேற்றனர். இதில் 102 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.இந்த தகவலை ேவலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 12 ந் தேதி தொடங்கி 15ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • உள்ளாட்சி நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை, டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வரும் 12 -ந்தேதி தொடங்கி 15ந் தேதி வரை நடைபெற உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், 0421 2999152, 94990 55955 என்கிற எண்களில் தொடர்புகொண்டு, முன்பதிவு செய்யவேண்டும்.

    வரும் 11-ந் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருடன் இணைந்து தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.உள்ளாட்சி நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை, டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

    பெண்களுக்காக வரும் 12-ந் தேதி நடத்தப்படும் நிகழ்ச்சியில், 10-ம்வகுப்பு, பிளஸ்2 மற்றும் கல்லூரி படிப்பிற்குப்பின் என்ன படிக்கலாம்,அ ரசு வழங்கும் கல்விக்கான ஊக்கத்தொகை விவரங்கள், சுய தொழில்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×