search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட்தேர்வு"

    • நீட் தேர்வு எழுதும் மாணவர்களை அரசு ஊக்கப்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.
    • மக்கள் முகம் சுளிக்கின்றனர்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசின் நிர்வாக குளறுபடி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு இவைகளால் தமிழகம் தலைகுனிந்து உள்ளது. இன்றைக்கு தமிழக விளையாட்டு வீரர்களை தேசிய அளவில் பங்கேற்காத நிலையை உருவாக்கி இளை ஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி யாகி உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் விளை யாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அர சாணை வெளியிட்டார். இன்றைக்கு மு.க.ஸ்டாலின் உயர் மருத்துவமனைக்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார்.

    அதேபோல் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி உரு வாக்கிய பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார். மதுரையில் நூலகத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார். கடலில் கருணாநிதி பெயரில் நினைவு சின்னம் அமைக்க முயற்சிக்கிறார். சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் கருணாநிதி பெயரில் அரங்கம். இப்படியே சென்றால் தமிழ்நாடு என்னவாகும்? இதைப் பார்த்து மக்கள் முகம் சுளிக்கின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தினார். அதில் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலை யத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைத்தார்.

    மதுரை மாட்டுத்தாவணி நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைத்தார். இது தலைவருக்கு விசுவாசம் உள்ள தொண்டர் செய்யும் மரியாதையாகும். ஆனால் மு.க.ஸ்டாலின் செய்வது தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாக உள்ளது.

    நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் முதலிடத்தில் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைவாக தான் உள்ளது. தமிழக மாண வர்கள் திறமை உள்ளவர்கள். ஆனால் அரசு ஊக்கப்படுத்த வில்லை. ஏற்கனவே நீட் தேர்வு ரத்து ரகசியம் என்று கூறினார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனம் காந்தி திடலில் நடைபெற்றது.
    • விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 ஆண்டுகளில் தி.மு.க. அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் திண்டி வனம் காந்தி திடலில் நடை பெற்றது. தி.மு.க. நகர செயலாளர் கண்ணன் தலை மையில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாரு மான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 ஆண்டு களில் தி.மு.க. அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நாளில் நூறாண்டு காலம் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற திராவிடமாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும். மக்களுடைய அதிகாரத்தை ஏற்றுக் கொள்கின்ற திட்டம் தான் திராவிட மாடல் ஆட்சி. நீட்பொதுத்தேர்வில் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்படுகின்றது. இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை தற்போது இந்தியா முழுநவதும் வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிக்கின்ற பல்வேறு திட்டங்களை இந்தியாவை ஆளுகின்ற பா.ஜனதாவின் பிரதமர் நரேந்திர மோடி , முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் திட்டம் இலவசம் எனவும், வீண் திட்டங்கள்என அறிவித்துவிட்டு இன்று கர்நாடகாவில் நடைபெறும் தேர்தலில் முதலமைச்சர் திட்டங்களைசெயல்படுத்த போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவர் மு .க .ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல் என்பதை நிலை நிறுத்தி எதிர்காலத்தில் இந்தியாவைதிராவிட மாடல் ஆட்சி ஆளுகின்ற நிலை உருவாகும். இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரமணன், தி.மு.க. நிர்வாகி வக்கீல் அசோகன், மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், துணை அமைப்பாளர் ரிஸ்வான், நகர துணை செயலாளர் ஓவியர் கவுத மன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதியம் 2மணி முதல் மாலை 5மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடக்க உள்ளது.
    • தேர்வை 4,000க்கும் அதிகமானோர் எழுத வர உள்ளனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் நாளை 7-ந்தேதி மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் கே.எம்.சி., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளி, திருப்பூர் ஜெயந்தி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, காங்கயம் ரோடு அபாகஸ் மாண்டிசோரி இன்டர்நேஷனல் பள்ளி, கூலிபாளையம் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி,அவிநாசி ஏ.கே.ஆர்., அகாடமி ஆகிய 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

    மதியம் 2மணி முதல் மாலை 5மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடக்க உள்ளது. காலை 11 மணிக்கு தேர்வு மையத்துக்கு தேர்வர் வந்து விட வேண்டும். அரைமணி நேரம் முன் தேர்வெழுதும் அறைக்கு வந்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு 4 மையங்களில் மட்டுமே தேர்வு நடந்த நிலையில் நடப்பாண்டு திருப்பூர் மாவட்டத்தில் தேர்வை எதிர்கொள்பவர்கள் அதிகம் என்பதால் கூடுதலாக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வை 4,000க்கும் அதிகமானோர் எழுத வர உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.சி., மேல்நிலைப்பள்ளி, உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 448 மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் வழங்கப்பட்டது.

    திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு பயிற்சியளிக்கப்பட்டது.இதில் 116 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் நீட் தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், ஆசிரியர்கள் கிறிஸ்டோபர் (இயற்பியல்), மாணிக்கம் (வேதியியல்), பார்த்தசாரதி (தாவரவியல்), சுமித்ரா (விலங்கியல்) ஆகியோர் தேர்வை எதிர்கொள்வது, நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான விரிவான அறிவுரைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.

    அப்போது தேர்வில் வினாக்களை பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து அதன் பின் சரியான விடையை தேர்வு செய்து எழுத வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண் கழிந்து விடும் என மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

    இது குறித்து நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

    நீட் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பகுதியில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் இடம் பெறும். ஒவ்வொரு பாடத்திலும் ஏ மற்றும் பி என இரண்டு வகை இருக்கும். ஏ பிரிவில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

    பி பிரிவில் 15 வினாக்களில் ஏதேனும் 10 வினாக்களுக்கு விடையளித்தால் போதும். ஐந்து வினாக்கள் சாய்ஸ்.ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பி பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.ஏனெனில் இப்பகுதியில் சிந்தித்து விடை எழுதும், சிந்தனையை தூண்டும், திறனறி வகை வினாக்கள் இடம் பெறும். மிகவும் கவனமாக இவ்வகை வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

    மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள 200 வினாக்களில் 180 வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் நான்கு மதிப்பெண் வீதம் 720 மதிப்பெண்.தவறான விடைகள் ஒவ்வொன்றுக்கும், ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். எனவே வினாக்களை மிகவும் பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து புரிந்து, அதன் பின் சரியான விடையை தேர்வு செய்து எழுதிட வேண்டும்.

    அதிக மதிப்பெண் பெற, உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முதலில் மிகவும் நன்கு பதில் தெரிந்த தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதிகளில் உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதியில் உள்ள வினாக்களுக்கும் விடையளித்தால் மட்டுமே 650 மதிப்பெண்களுக்கு மேலாக மதிப்பெண் பெற முடியும்.ஓ.எம்.ஆர்., சீட்டில் விடையை ஒருமுறை குறித்த பிறகு மாற்றம் செய்ய இயலாது. எனவே விடையளிப்பதில் அவசரம் கூடாது. முடிந்தவரை விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு சுரேஷ்குமார் தெரிவித்தார்.

    • நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்று மதுரை மாணவர் சாதனை படைத்தார்.
    • 2 ஆண்டு உழைப்பால் வெற்றி சாத்தியமானது என்று கூறினார்.

    மதுரை

    இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) ஆயுஷ் (BAMS, BUMS, BHMS) படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தி வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது. இதில் மதுரை கே.கே.நகரை சேர்ந்த மாணவன் த்ரிதேவ் விநாயகா, அகில இந்திய தரவரிசையில் 30-வது இடத்தை பெற்றுள்ளார்.

    இவர் மருத்துவ நுழைவுத்தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார். இது தொடர்பாக த்ரிதேவ் விநாயகா கூறியதாவது:-

    நீட் தேர்வில் வெற்றி பெற 2 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்தேன். அப்போது கருத்துகளை புரிந்து கொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் கற்றல் அட்டவணையை கண்டிப்பாகப் பின்பற்றியதால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.

    அதுவும் தவிர கேள்வி வங்கிகளை ஆன்லைனில் கூர்ந்து படித்தேன். தேர்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்கள் குறித்த மெய்நிகர் ஊக்க அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோர் ஆதரவு காரணமாக நான் இந்த நிலையை எட்ட முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பேசினர்.

    சாத்தான்குளம்:

    நீட் நுழைவுத் தேர்வை அகில இந்திய அளவில் கைவிடக் கோரியும், தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவைகுண்டம் தொகுதி துணை அமைப்பாளர் இரஞ்சன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தியல் பரப்பு மாநில துணைச்செயலாளர் தமிழ்க்குட்டி, காங்கிரஸ் கட்சியின் சாத்தான்குளம் நகர தலைவர் வேணுகோபால், திமுக மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ, தொழிலாளர் விடுதலை முன்னணியின் நெல்லை தெற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் இரணியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தொண்டரணி மாவட்ட பொறுப்பாளர் சரவணன், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர், விவசாய தொழிலாளர், விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி, சாமுவேல், ஆழ்வார் திருநகரி ஒன்றிய துணை அமைப்பாளர் இராமகிருஷ்ணன், இளஞ்சிறுத்தைகள் கண்ணன், முத்துக்குமார், வெற்றிக் கண்ணன், வாசு, இராஜ்குமார், ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் ராவணன் நன்றி கூறினார்.

    • மன தைரியத்தை தர வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
    • திருப்பூரில் 464 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் நீட் தேர்வெழுதிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் மனநல ஆலோசனை வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இது குறித்து, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறியதாவது:-

    அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி 'நீட்' ஒருங்கிணைப்பாளர்களுக்கும், பாட கருத்தாளர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தியுள்ளோம். அன்பான முறையில் வாழ்த்து சொல்லி, மனநிலையை அறிந்து உரிய ஆலோசனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு தேர்வு குறித்த அழுத்தம் தராமல் மன தைரியத்தை தர வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

    மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு குறித்த சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். மன அழுத்தத்திற்கு ஆளாகும் முன் அவர்களை பேணிக்காக்க வேண்டியது அவசியம்.திருப்பூரில் 464 பேர் தேர்வு எழுதியுள்ளனர். தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள இயலவில்லை எனில் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்க வேண்டும். மன அழுத்தத்தை போக்க தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த மையங்களில் 7 ஆயிரத்து 386 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.
    • தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட எந்தப்பொருளையும் எடுத்துவரக்கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது

    திருச்சி:

    பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய அளவிலான நுழைவு தேர்வு (நீட் தேர்வு) நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

    திருச்சி மாவட்டத்தில் இதற்காக, ஓஎப்டி மற்றும் பொன்மலை கேந்திரிய வித்யாலாயா பள்ளிகள், ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி, சாரநாதன் கல்லூரி, காவேரி குளோபல் பள்ளி, சமது மேல்நிலைப்பள்ளி, சிறுகனூர் எம்.ஏ.எம். கல்லூரி, துடையூர் மகாலட்சுமி கல்லூரி, கமலா நிகேதன் பள்ளி, கே.கே.நகர் ஆல்பா விஸ்டம் பள்ளி, கைலாசபுரம் ஆர்.எஸ்.கே. பள்ளி, தொட்டியம் தோளூர்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரி, மணப்பாறை சவுமா பப்ளிக் பள்ளி ஆகிய 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த மையங்களில் 7 ஆயிரத்து 386 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர். மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு அறைக்குள் காலை 11.40 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    மேலும் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட எந்தப்பொருளையும் எடுத்துவரக்கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது. அதற்கேற்றவாறு மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்தனர். குறிப்பாக திருச்சி காஜாமாலையில் சமது மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு காலை 10 மணி முதலே மாணவ, மாணவிகள் வரத்தொடங்கினர்.

    பெரும்பாலானவர்கள் தங்களது பெற்றோர்களுடன் தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர். முன்னதாக ஹால் டிக்கெட்டை கோவிலில் வைத்தும், பூஜை அறையில் வைத்தும், பெற்றோர் காலில் விழுந்து ஆசி வாங்கியும் தயாரானார்கள். தேர்வு மையங்களுக்கு வந்திருந்த மாணவிகள் தாங்கள் கையோடு எடுத்து வந்த மதிய உணவை சாப்பிட்ட பிறகே மையத்திற்குள் சென்றனர்.

    அவர்களின் ஹால் டிக்கெட் சோதனை செய்து சரிபார்க்கப்பட்டது. பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றுமாறு தேர்வு மையத்தினர் கூறியதையடுத்து மாணவிகள் அதனை அகற்றி தங்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சரியாக 1.30 மணிக்குள் அனைவரும் தேர்வு மையங்களுக்குள் சென்றுவிட்டனர். 2 மணிக்கு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    • மதுரையில் இன்று 13 மையங்களில் 8,833 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
    • மதியம் 1.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    மதுரை

    மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் இன்று தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இதற்காக தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன.

    மதுரை மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 8833 மாணவ- மாணவியர் கலந்து கொண்டு நீட் தேர்வு எழுதினார்கள். மதியம் 2 மணி அளவில் தேர்வு தொடங்கி, மாலை 5.20 மணி வரை நடக்கிறது. முன்னதாக மதியம் 1:30 மணிக்குள் மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    நீட் தேர்வுக்காக வந்திருந்த மாணவ-மாணவிகள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் இன்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி மாணவர்களின் ஆவணங்கள் பரிசோதிக்கப் பட்டன.

    அடுத்தபடியாக ஆடை கட்டுப்பாடு உட்பட இதர வழிகாட்டு நெறிமுறைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் பிறகு மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைத்து தேர்வு அறையிலும் சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 1500 மாண வர்கள் குறைவாக தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விண்ணப்பித்தவர்கள் மதியம்தான் தேர்வு என்றாலும் காலையிலேயே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினார்கள்.
    • தற்பொழுது எடுத்த புகைப்படத்தை ஒட்டியிருப்பதை பரிசோதித்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

    நாகர்கோவில் :

    நாடு முழுவதும் தேசிய மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு இன்று மதியம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் 6 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வு எழுதுவதற்கு 4473 பேர் விண்ணப்பித்து உள்ளனர். நாகர்கோவில் ஒழுகினசேரி ராஜாஸ் இண்டர்நேஷனல் பள்ளி, சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி, கோணம் கேந்திர வித்யாலயா பள்ளி ஆகிய 6 மையங்களில் தேர்வு நடந்தது.

    தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் மதியம்தான் தேர்வு என்றாலும் காலையிலேயே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினார்கள். இதனால் தேர்வு மையங்களின் முன்பு கூட்டம் அலைமோதியது. தேர்வு எழுத வந்த பெண்களை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து வந்திருந்தனர்.

    கொளுத்தும் வெயி லையும் பொருட்படுத்தாமல் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்தனர். தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை பலத்த பரிசோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

    தேர்வு மையத்துக்குள் செல்போன் மற்றும் கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தேர்வு கூடத்திற்கான விண்ணப்பத்துடன் தற்பொழுது எடுத்த புகைப்படத்தை ஒட்டியிருப்பதை பரிசோதித்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

    தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை தெர்மல் ஸ்கேனர் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒருசில மாணவர்களுக்கு வெயிலின் காரணமாக உடலில் ெவப்பம் அதிகமாக இருந்தது. இதையடுத்து அவர்களை சிறிது நேரம் அமர வைத்து பின்னர் பரிசோதனை செய்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். மேலும் கை கழுவும் திரவங்களும் வழங்கப்பட்டது.

    மதியம் தேர்வு தொடங்கி மாலை வரை நடக்கிறது. தேர்வு மையத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாணவ- மாணவிகள் தேர்வு மையத்திற்குள் சென்றாலும் அவர்களது பெற்றோர்கள் தேர்வு ைமயத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

    • நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17ந் தேதி நடக்கிறது.
    • திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

    திருப்பூர் :

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.இத்தேர்வினை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.,) ஆண்டுதோறும் நடத்துகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17ந் தேதி நடக்கிறது.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும்.

    கூடுதல் தகவல்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.ஏதேனும் சந்தேகம் இருப்பின் திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளரின் 73734 48484 மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.திருப்பூர் நகரப்புற நீட் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி முதல்வருமான நாகமணி கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் நீட் தேர்வினை ஒருங்கிணைத்து நடத்தி முடிக்கும் பொறுப்பு, பெருமாநல்லூர் கே.எம்.சி., பப்ளிக் பள்ளிக்கு என்.டி.ஏ., வழங்கியுள்ளது. இந்த முறை ஈரோடு மாவட்ட மையங்களையும் ஒருங்கிணைத்து நடத்த உள்ளோம்.

    திருப்பூரில் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரி, கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளியிலும், உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி சூரி என்ஜினீயரிங் கல்லூரி விஜயமங்கலம், கோபி கலை அறிவியல் கல்லூரி கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் மையம் அமைய உள்ளது.என்.டி.ஏ., அறிவுறுத்தலின் கீழ் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    ×